இன்னாப்பா இது தான் பாஸ்ட் புட்?

ஒரு முகநூல் பதிவு

அதிர்ச்சியூட்டும் உண்மை தகவல்கள் .. படித்து விட்டு கண்டிப்பாக உங்கள் நண்பர்களுடன் ஷேர் செய்து கொள்ளுங்கள்



1) பாஸ்ட் புட் கடைகள் வைத்திருக்கும் நாங்கள் அன்று வாங்கிய சிக்கன் மட்டுமே உபயோகப்படுத்துவதில்லை .. 2 அல்லது 3 நாட்களுக்கு முன் வாங்கிய மிஞ்சிய சிக்கனை தான் அதிகமாக யூஸ் செய்கிறோம் .. அதை வினிகரில் கழுவி யூஸ் பண்ணும்போது அந்த கேட்டு போன வாடையை கஸ்டமர்கள் அறிவதில்லை ...

2)சிக்கன் ரைஸ் செய்யும்போது வெள்ளையாக உள்ள சிக்கனை சிகப்பாக மாற்ற ஆரஞ்சு பவுடரை யூஸ் பண்றோம் .. ஆனால் அது ஒரு தடை செய்யப்பட பொருள் .. அந்த ஆரஞ்சு பவுடரை உங்கள் கையில் கொட்டி திருப்பி கை கழுவினால் கூட அந்த சிகப்பு சாயம் உங்கள் கையில் 2 நாட்களுக்கு இருக்கும் .. அப்ப அது உங்கள் வைத்துக்குள் போனால் ???

3) சோயா சாட்ஸ் .. இதன் விலை அதிகமாக இருப்பதால் இதை நாங்கள் அப்படியே யூஸ் பண்ணுவதில்லை .. மாறாக தண்ணியோ அல்லது ஒரு வாரத்திற்கு முன்னர் யூஸ் பண்ணின என்னையோ கலந்து செய்றோம் ..

4) எந்த பாஸ்ட் புட் கடையிலும் சன் பிளவர் எண்ணை யூஸ் பண்ணுவதில்லை .. பாமாயில் தான் யூஸ் பண்றோம் ..

5) ரைஸ் கடாயில் யூஸ் பண்ணும் பொது சோரு கடாயில் ஓட்ட கூடாது என்பதற்காக அதிக அளவு பாமாயிலை அதில் கொட்டுகிறோம் ..

6)இன்னொன்னு சொன்ன நம்ப மாட்டிங்க ... அந்த ரைஸ் போட்டு கிண்டும் கடாயீலை நாங்கள் ஒரு வாரத்திற்கு கழுவ மாட்டோம் .. காரணம் அதில் உள்ள என்னை பசை போக கூடாது என்பதற்காக .. நாங்கள் கழுவி எண்ணை பசை போய்விட்டால் அடுத்த நாள் எங்களுக்கு அதிக கேஸ் வேஸ்டாகிவிடும் ..

7)அஜினமோட்டோ .. இதை அதிகமாக யூஸ் பண்றோம் .. உடலுக்கு கேடு உண்டாக்கும் பொருள் .. இதை தொட்டு உங்கள் நாக்கில் வைத்தால் அந்த இடம் மரத்து விடும் .. சோதித்து பாருங்கள் ..

8)வெள்ளை பெப்பர் .. இதில் வெண்மை நிறத்திற்காக கோல மாவு கலப்படம் செய்ய படுகிறது .. அதை தான் நாங்கள் உபயோகப்படுகிறோம் ..

9)தக்காளி சாஸ் .. இதுவும் நீண்ட நாள் ஸ்டாக் வைத்த , காலாவதியான சாஸ் விலை கம்மியாக கிடைப்பதால் அதை யூஸ் பண்றோம் ..

10)சில்லி சாஸ் .. அத கிட்ட பொய் மோர்ந்து பார்த்தா முகம் சுளிக்கிற அளவுக்கு கேட்ட வாடை அடிக்கும் ..

இது தான் .. நாங்கள் பாஸ்ட் பபுட் செய்ய யூஸ் பண்ணும் பொருட்கள் .. 5 நிமிசத்துல 8 plate போடுவோம் .. ஒன்னு 50 ருபாயினு வித்தா 400 ருபாய் சம்பாரிப்போம் .. அத நானும் சாப்பிட்டு ஏன் உடலும் கெட்டு விட்டது விட்டது .. மற்றவர்களின் உடலையும் கெடுக்குரெனெ என என் மனசாட்சி உறுத்தியது .. அதனால் அதை மூடிவிட்டு 8000 ருபாய் சம்பளத்திற்கு நிம்மதியாக வேலைக்கு செல்கிறேன் ...
- - தினேஷ் (பாஸ்ட் புட் கடை வைத்து இருந்தவர் )

Comments

  1. இந்த உண்மையை சொன்ன தினேஷுக்கு ஒரு சபாஷ் போடுகிறேன். இதை வெளியிட்ட உங்களுக்கும் ஒரு சபாஷ் நண்பரே....

    ReplyDelete
  2. அடக் கடவுளே....சிலவற்றை அறிந்திருந்தாலும் அதிர்ச்சியாக இருக்கிறது அண்ணா

    ReplyDelete
  3. ஐயோ!... ஐயையோன்னு மட்டும்தான் சொல்ல வருகிறது சகோ!

    நல்ல வேளையாக எனக்கு இப்படிச் சாப்பிடும் ப(வ)ழக்கம் கிடையவே கிடையாது.!
    இங்கு நானிருக்கும் நாட்டில் இங்குள்ள வெள்ளையர்களால் நத்தார், இன்னும் ஏதாவது விசேடத்திற்கு அங்கு உள்ளதுபோல தெருவோரக் கடைகள் போடப்படுவதுண்டு. ஆனால் அடிக்கடி சுகாதாரக் குழுவினரால் நடைமுறையாவும் பரிசீலிக்கப்பட்டுக் கொண்டிருக்கப்படும். அதனால்...
    இப்படியெல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை...

    நல்ல விழிப்புணர்வுப் பதிவு + பகிர்வு!
    நன்றியுடன் வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete
  4. பாஸ்ட் புட் சாப்பிட்டால் தொந்திரவுகளும் பாஸ்ட்தான்
    அறிந்து கொண்டேன்நன்றி நண்பரே

    ReplyDelete
  5. ஆத்தாடி....வந்தவருக்கு மட்டுமல்ல வராதவருக்கும் சேர்த்து சமைத்து விருந்தோம்பிய தமிழனா இப்படி....என்ன சொல்ல?

    ReplyDelete
  6. இந்த உண்மையை பகிர்ந்துக்கொண்டதற்கு மிக்க நன்றி.

    ReplyDelete

Post a Comment

வருக வருக