tag:blogger.com,1999:blog-52086111750485942932024-03-09T14:08:02.418+05:30மலர்த்தருகல்வி | சமூகம் | சினிமா | தொழில்நுட்பம் | அறிவியல் Kasthuri Renganhttp://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comBlogger976125tag:blogger.com,1999:blog-5208611175048594293.post-3503577690994263152023-12-26T11:17:00.004+05:302023-12-26T11:17:45.129+05:30ரெபல் மூன் 2023<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjf91VqcDt1tpiMM2WIX1L0IdQKCcH5QzKSsZfhssXluJxr1oqB91LP6K5JBXF4L8-Y062NgXARmuJc7xCb8YPp2pN4qif9Uf3KAY5XqpfE0fa3y7VnedW4DvDFNYMxkd5N0JAge_kI8wOu0_tzf6wn8xo4wUbAwl3rH0WRQIBYY_jdKRZJH0aXqbXA6s0/s300/rbm4.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="168" data-original-width="300" height="168" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjf91VqcDt1tpiMM2WIX1L0IdQKCcH5QzKSsZfhssXluJxr1oqB91LP6K5JBXF4L8-Y062NgXARmuJc7xCb8YPp2pN4qif9Uf3KAY5XqpfE0fa3y7VnedW4DvDFNYMxkd5N0JAge_kI8wOu0_tzf6wn8xo4wUbAwl3rH0WRQIBYY_jdKRZJH0aXqbXA6s0/s1600/rbm4.jpeg" width="300" /></a></div><br /><p> </p><p>ஜாக் ஸ்னைடர் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் நெட்பிளிக்ஸ் தொடர். </p><p>நாயகி மைய கதைக்களம், செயற்கை நுண்ணறிவு கொண்ட மனிதர்கள் என்பதை கடந்து ஆன்மாவை கொண்ட இயந்திர மனிதர்கள் இந்த தொடரில் புதுமையாக </p><p>அதைவிட மூர்ச்சையடையச் செய்யும் இன்னொரு விஷயம், ஜிம்னி என்கிற இந்த ரோபாட்டாக நடித்திருப்பது அசுரன் ஆந்தனி ஹாப்கின்ஸ்! குரல் நடிப்பு என்கிற பொழுதும் ரொம்ப அழுத்தமான கதாபாத்திரம். </p><p>தங்களின் ஒரே நம்பிக்கையான இளவரசி கொல்லப்பட்ட பொழுது வாட்களை துறக்கும் ஜிம்னி பிரிவு ரோபாட்கள், அமைதியான வாழ்வை தேர்தெடுக்கின்றன.</p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEheZRsT7FuMkuP8Vo-8XsKpySstBPFrMWa3MCfsop9imouzoZnTOZ6f6mJwfN7VNveaFJfYKg4uA7GW7ml4Hvhtu2U-61nENlvsqY8t51z-D2R0EMFNxLO8hZCQq3QiZSWQ1O420y_P-kWIKkZzqHMt-pGXBs9ypWZZ_QN89yiitDNagu010rbm8TLOKdY/s273/rbm2.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="273" data-original-width="184" height="273" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEheZRsT7FuMkuP8Vo-8XsKpySstBPFrMWa3MCfsop9imouzoZnTOZ6f6mJwfN7VNveaFJfYKg4uA7GW7ml4Hvhtu2U-61nENlvsqY8t51z-D2R0EMFNxLO8hZCQq3QiZSWQ1O420y_P-kWIKkZzqHMt-pGXBs9ypWZZ_QN89yiitDNagu010rbm8TLOKdY/s1600/rbm2.jpeg" width="184" /></a></div><br /><p><br /></p><p>ஆனால் மமதை கொண்ட மனித வீரர்கள் ஜிம்னிகளை துன்புறுத்தி ரசிக்கிறார்கள். இப்படி நகரும் கதையில், தனது அடிப்படை நம்பிக்கைகளை, கனவுகளை இழந்துவிட்டதாக சொல்கிறான் ஜிம்னி. </p><p>தொலைதூர கிரகத்திலிருக்கும் ஒருத்தி அதை மறுத்து, அந்த உணர்வுகள் உனக்குள்ளே இன்னும் இருக்கின்றன, என்று சொல்லி ஒரு மலர்கிரீடத்தை வைத்து அவன் இயந்திர கன்னத்தை வருடுகிறாள், அதுவரை ஒளிராத அத்துணை புள்ளிகளும் ஒளிர்கின்றன ஜிம்னிக்கு ! </p><p>சர்வ நிச்சயமாக ஒரு நல்ல காட்சி அனுபவம் இந்த தொடர். </p><p>வன்முறையை விரும்பி அல்ல, வேண்டா வெறுப்பாகவே கையிலெடுக்கும் கதாநாயகி, அசத்தலான அவளது குழு என இந்த தொடர் பார்வையாளனை கட்டிப்போட்டுவிடுகிறது. </p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhVHlbaca6w8I8D5RXpuoN6iQ8lmTK75V9cfgPC1o_MQGtNsH_F-D3hiphogrtDTIRLvYT902hefWylEaGQEqCUpbSDPKGKolcL5kqvoOGH8rikWmAAh2tPetWajldZTvSvbJSswuSzEM2FEy9TPn2vY5LAJ_obsTJ-dlcO1VFkYyoFoX9QkK3iHFdnRF0/s273/rmb3.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="273" data-original-width="184" height="273" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhVHlbaca6w8I8D5RXpuoN6iQ8lmTK75V9cfgPC1o_MQGtNsH_F-D3hiphogrtDTIRLvYT902hefWylEaGQEqCUpbSDPKGKolcL5kqvoOGH8rikWmAAh2tPetWajldZTvSvbJSswuSzEM2FEy9TPn2vY5LAJ_obsTJ-dlcO1VFkYyoFoX9QkK3iHFdnRF0/s1600/rmb3.jpeg" width="184" /></a></div><br /><p><br /></p><p>சில புள்ளிகளில் இந்த தொடர் தமிழ் திரையிலிருந்து இன்ஸ்பைர் ஆகியிருப்பது போல தெரிகிறது. ஜிம்னி ஒளிரும் புள்ளிகளில், மனதில் இசைக்கும் இரும்பிலே இருதயம் முளைத்ததே பாடல், இளவரசியை கொன்றது யார் என்கிற கேள்வியில் "பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்றான்?" என்கிற கேள்வி மனதில். </p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh2AIt5LRe5VWizIqiPs8dsli6hdNsT7UF3m_JTVNjU27X3UQIHYgavP9P1sIQq1mRztlzHlggchJ00XkHQS2e6TfXehyphenhyphenCdsgi5KGn9BMe9wL3M2KHYZyrd2JPwbIEKlaNU39AwvPeTxtDSXw_bga_hY58v77Jz3Sz1niUvthKrSTPA_dKI3b5KTKLr5n4/s273/rbm.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="273" data-original-width="184" height="273" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh2AIt5LRe5VWizIqiPs8dsli6hdNsT7UF3m_JTVNjU27X3UQIHYgavP9P1sIQq1mRztlzHlggchJ00XkHQS2e6TfXehyphenhyphenCdsgi5KGn9BMe9wL3M2KHYZyrd2JPwbIEKlaNU39AwvPeTxtDSXw_bga_hY58v77Jz3Sz1niUvthKrSTPA_dKI3b5KTKLr5n4/s1600/rbm.jpeg" width="184" /></a></div><br /><p><br /></p><p>இந்திய திரை தனது பாதிப்பை ஹாலிவுட்டுக்கு செலுத்தும் நாட்கள் இவை. </p><p>அவசியம் பாருங்கள்.</p><p>அன்பன் </p><p>மது </p>Kasthuri Renganhttp://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5208611175048594293.post-80335424078705903462023-12-23T23:57:00.002+05:302023-12-23T23:57:25.029+05:30பிளாட்லைனர்ஸ் (1990) <div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhqrmZTnJYIH4OmC97mDFrguRhIZWT1AAsSNSNoRxGW_fXR_dXa9m4MNJtuFHSH8-EIWTTzUqOVqxDRLeMiTjgGkx_2G3Yx0dIqX63BwP1SqzvgbdYVHpkUPLF2Lw8yOrcZKIGdyG5VO0cgiYtJAb7xs2P6QTEh6NdB6-S2HCj85x5r78ayJRkRlL59KkU/s1500/flat%20liners.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1500" data-original-width="1000" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhqrmZTnJYIH4OmC97mDFrguRhIZWT1AAsSNSNoRxGW_fXR_dXa9m4MNJtuFHSH8-EIWTTzUqOVqxDRLeMiTjgGkx_2G3Yx0dIqX63BwP1SqzvgbdYVHpkUPLF2Lw8yOrcZKIGdyG5VO0cgiYtJAb7xs2P6QTEh6NdB6-S2HCj85x5r78ayJRkRlL59KkU/s320/flat%20liners.jpg" width="213" /></a></div><br /><p><br /></p><p> ஜோயல் ஷூமேக்கர் இயக்கத்தில் பெருமளவு பேசப்பட்ட படங்களில் ஒன்று பிளாட்லைனர்ஸ், என்சாம்பில் காஸ்ட் எனும் அளவிற்கு பெரிய நட்சத்திரங்கள் அசத்திய படம். </p><p>மரணத்தின் அருகே சென்ற அனுபவத்தை என்.டி.ஈ என்று சொல்வார்கள். நியர் டெத் இக்ஸ்பீரியன்ஸ், இதைக்குறித்து தொடர்ந்து பதிவு செய்துவருகிறாள் டாக்டர் மானுஸ், (ஜூலியா ராபர்ட்ஸ்), அவளுடைய சகாக்கள் நான்கு பேர், இவர்களை சுற்றி சுழலும் கதை. </p><p>இந்த ஐந்து மருத்துவ மாணவர்களும் ரொம்ப விபரீதமான ஒரு பரிசோதனையில் இறங்குகிறார்கள். குறிப்பாக டாக்டர் நெல்சன் மற்ற நால்வரையும் தன்னுடன் இந்த பரிசோதனையில் ஈடுபட சொல்கிறான். </p><p>நெல்சனைப் பொறுத்தவரை அவனுடைய ஆய்வு மனிதகுலத்திற்கு அறிவியல் தரப்போகும் மிகப்பெரும் கொடை, ஆய்வு ரொம்ப சிம்பிள் மருத்துவ உதவியோடு செத்துப் போய் மீண்டும் உயிரோடு வரவேண்டும். </p><p>அப்படி இறக்கின்ற பொழுது உயிர் என்ன ஆகிறது, எங்கே போகிறது, என்ன என்ன அனுபவங்கள் ஏற்படுகின்றன என்பதை பதிவு செய்துகொள்வதுதான் ஆய்வு. </p><p>தன் கைப்பட இதுகுறித்து ஒரு கடிதத்தை எழுதி நண்பர்களிடம் கொடுத்துவிட்டு ஆய்வைத் துவங்குகிறான் நெல்சன். </p><p>இந்த புள்ளியிலிருந்து ஒரு அறிவியல் மற்றும் மருத்துவ வகைமையிலிருந்து திகில் பட வரிசைக்கு தாவுகிறது படம். </p><p>கதையை எழுதிய பீட்டர் பிளார்டி குறித்து ஒரு பெரிய வியப்பை ஏற்படுத்துகிறது படம். </p><p>கெவின் பேக்கன் தான் ஒரு நாத்தீகன் என்று சொல்வதும், அவனுடைய பிரச்சனையை நேரே எதிர்கொள்வதும் செமையான அனுபவம். </p><p>துவக்கத்தில் இந்த ஆய்வுக்கு உட்படமாட்டேன் என்று சொன்ன மற்ற நால்வரும் போட்டிபோட்டுக்கொண்டு ஆய்வில் ஈடுபடுவதும், அதன் பின்விளைவுகளில் சிக்கி சிதைவதும் செமை. </p><p>கிளைமாக்ஸ் வேற லெவல், அனுபவம். </p><p>திரைப்பட ரசிகர்கள் ஒருமுறையாவது பார்க்க வேண்டிய படம். </p><ul style="--tw-border-spacing-x: 0; --tw-border-spacing-y: 0; --tw-ring-color: rgba(69,89,164,.5); --tw-ring-offset-color: #fff; --tw-ring-offset-shadow: 0 0 transparent; --tw-ring-offset-width: 0px; --tw-ring-shadow: 0 0 transparent; --tw-rotate: 0; --tw-scale-x: 1; --tw-scale-y: 1; --tw-scroll-snap-strictness: proximity; --tw-shadow-colored: 0 0 transparent; --tw-shadow: 0 0 transparent; --tw-skew-x: 0; --tw-skew-y: 0; --tw-translate-x: 0; --tw-translate-y: 0; border: 0px solid rgb(217, 217, 227); box-sizing: border-box; color: #374151; display: flex; flex-direction: column; font-family: Söhne, ui-sans-serif, system-ui, -apple-system, "Segoe UI", Roboto, Ubuntu, Cantarell, "Noto Sans", sans-serif, "Helvetica Neue", Arial, "Apple Color Emoji", "Segoe UI Emoji", "Segoe UI Symbol", "Noto Color Emoji"; font-size: 16px; list-style-image: initial; list-style-position: initial; margin: 0px 0px 1.25em; padding: 0px; white-space-collapse: preserve;"><li style="--tw-border-spacing-x: 0; --tw-border-spacing-y: 0; --tw-ring-color: rgba(69,89,164,.5); --tw-ring-offset-color: #fff; --tw-ring-offset-shadow: 0 0 transparent; --tw-ring-offset-width: 0px; --tw-ring-shadow: 0 0 transparent; --tw-rotate: 0; --tw-scale-x: 1; --tw-scale-y: 1; --tw-scroll-snap-strictness: proximity; --tw-shadow-colored: 0 0 transparent; --tw-shadow: 0 0 transparent; --tw-skew-x: 0; --tw-skew-y: 0; --tw-translate-x: 0; --tw-translate-y: 0; border: 0px solid rgb(217, 217, 227); box-sizing: border-box; display: block; margin: 0px; min-height: 28px; padding-left: 0.375em;">Kiefer Sutherland, Julia Roberts, Kevin Bacon, William Baldwin, Oliver Platt, Kimberly Scott"</li><li style="--tw-border-spacing-x: 0; --tw-border-spacing-y: 0; --tw-ring-color: rgba(69,89,164,.5); --tw-ring-offset-color: #fff; --tw-ring-offset-shadow: 0 0 transparent; --tw-ring-offset-width: 0px; --tw-ring-shadow: 0 0 transparent; --tw-rotate: 0; --tw-scale-x: 1; --tw-scale-y: 1; --tw-scroll-snap-strictness: proximity; --tw-shadow-colored: 0 0 transparent; --tw-shadow: 0 0 transparent; --tw-skew-x: 0; --tw-skew-y: 0; --tw-translate-x: 0; --tw-translate-y: 0; border: 0px solid rgb(217, 217, 227); box-sizing: border-box; display: block; margin: 0px; min-height: 28px; padding-left: 0.375em;">"Cinematography by Jan de Bont"</li><li style="--tw-border-spacing-x: 0; --tw-border-spacing-y: 0; --tw-ring-color: rgba(69,89,164,.5); --tw-ring-offset-color: #fff; --tw-ring-offset-shadow: 0 0 transparent; --tw-ring-offset-width: 0px; --tw-ring-shadow: 0 0 transparent; --tw-rotate: 0; --tw-scale-x: 1; --tw-scale-y: 1; --tw-scroll-snap-strictness: proximity; --tw-shadow-colored: 0 0 transparent; --tw-shadow: 0 0 transparent; --tw-skew-x: 0; --tw-skew-y: 0; --tw-translate-x: 0; --tw-translate-y: 0; border: 0px solid rgb(217, 217, 227); box-sizing: border-box; display: block; margin: 0px; min-height: 28px; padding-left: 0.375em;">"Edited by Robert Brown"</li><li style="--tw-border-spacing-x: 0; --tw-border-spacing-y: 0; --tw-ring-color: rgba(69,89,164,.5); --tw-ring-offset-color: #fff; --tw-ring-offset-shadow: 0 0 transparent; --tw-ring-offset-width: 0px; --tw-ring-shadow: 0 0 transparent; --tw-rotate: 0; --tw-scale-x: 1; --tw-scale-y: 1; --tw-scroll-snap-strictness: proximity; --tw-shadow-colored: 0 0 transparent; --tw-shadow: 0 0 transparent; --tw-skew-x: 0; --tw-skew-y: 0; --tw-translate-x: 0; --tw-translate-y: 0; border: 0px solid rgb(217, 217, 227); box-sizing: border-box; display: block; margin: 0px; min-height: 28px; padding-left: 0.375em;">"Music by James Newton Howard"</li><li style="--tw-border-spacing-x: 0; --tw-border-spacing-y: 0; --tw-ring-color: rgba(69,89,164,.5); --tw-ring-offset-color: #fff; --tw-ring-offset-shadow: 0 0 transparent; --tw-ring-offset-width: 0px; --tw-ring-shadow: 0 0 transparent; --tw-rotate: 0; --tw-scale-x: 1; --tw-scale-y: 1; --tw-scroll-snap-strictness: proximity; --tw-shadow-colored: 0 0 transparent; --tw-shadow: 0 0 transparent; --tw-skew-x: 0; --tw-skew-y: 0; --tw-translate-x: 0; --tw-translate-y: 0; border: 0px solid rgb(217, 217, 227); box-sizing: border-box; display: block; margin: 0px; min-height: 28px; padding-left: 0.375em;">"Production Company: Stonebridge Entertainment"</li><li style="--tw-border-spacing-x: 0; --tw-border-spacing-y: 0; --tw-ring-color: rgba(69,89,164,.5); --tw-ring-offset-color: #fff; --tw-ring-offset-shadow: 0 0 transparent; --tw-ring-offset-width: 0px; --tw-ring-shadow: 0 0 transparent; --tw-rotate: 0; --tw-scale-x: 1; --tw-scale-y: 1; --tw-scroll-snap-strictness: proximity; --tw-shadow-colored: 0 0 transparent; --tw-shadow: 0 0 transparent; --tw-skew-x: 0; --tw-skew-y: 0; --tw-translate-x: 0; --tw-translate-y: 0; border: 0px solid rgb(217, 217, 227); box-sizing: border-box; display: block; margin: 0px; min-height: 28px; padding-left: 0.375em;">"Distributed by Columbia Pictures"</li><div><br /></div></ul>Kasthuri Renganhttp://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5208611175048594293.post-24798074976528840352023-12-14T17:47:00.003+05:302023-12-14T17:47:41.828+05:30பாஸ்ட் சார்லி 2023<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg_WWaYNa7ljXL1eiu6oMomOJfC8cs28g6Ukpi-wvgq6gxg9ZAxlvGoucZEQJfUhV3p9Vh-2pdNwBJEGCmx-sEcdZOiDCXUzn_A19NMzocFlDV7BjyOgde2_5dTNdjb9XUIIeXaPwkQgk3PWnMkZBAQ93LkB6k-YLdgbLaY-bXod3X2JDTgFdrBy75-a8k/s272/fc.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="272" data-original-width="185" height="272" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg_WWaYNa7ljXL1eiu6oMomOJfC8cs28g6Ukpi-wvgq6gxg9ZAxlvGoucZEQJfUhV3p9Vh-2pdNwBJEGCmx-sEcdZOiDCXUzn_A19NMzocFlDV7BjyOgde2_5dTNdjb9XUIIeXaPwkQgk3PWnMkZBAQ93LkB6k-YLdgbLaY-bXod3X2JDTgFdrBy75-a8k/s1600/fc.jpeg" width="185" /></a></div>ஜேம்ஸ் பாண்டாக முத்திரை பதித்த பியர்ஸ் பிராஸ்னன் கதாநாயகனாக நடித்திருக்கும் படம். நான் ப்ராஸ்னன் ரசிகன் என்பதால் பார்த்தேன். <div><br /></div><div>ஹாலிவுட் அடித்து துவைத்துக்கொண்டிருக்கும் திரைவகைமை, கூலிப்படை, திட்டமிடப்பட்ட குற்றச்செயல்கள் அதில் கதாநாயகன் ஒரு கூலியாக செயல்படுவதும் அவன் சந்திக்கும் மிரட்டல்கள் அவற்றை அவன் சமாளிக்கும் விதம். </div><div><br /></div><div>இதே வகையில் ஆயிரம் படங்களாவது தேறும், பிராஸ்னன் இருக்காரே என்று பார்த்தேன். அவசியம் பார்க்க வேண்டிய கட்டாயமெல்லாம் இல்லை. </div><div><br /></div><div>எதிர்பார்த்த திருப்பங்களோடு நகர்கிறது படம், படத்தில் துவக்கத்தில் வரும் இளம் கொலையாளி, காரை ஓட்ட தெரியாமல் ஒட்டி பரலோகம் செல்வதெல்லாம் சிரிப்பை வரவழைக்கவில்லை. </div><div><br /></div><div>பரிந்துரைக்க ப்ராஸ்னன் படம் என்பதைத்தவிர வேறு ஒன்றுமில்லை படத்தில். </div><div><br /></div><div><br /></div><div>போர்த ப்ரோடோகால்(1987) படத்தில் ஒற்றனாக வரும் ப்ராஸ்னன் தான் காரில் தான் கால்களுக்கிடையே ஒருவனை வைத்துக்கொண்டு, அவன் கழுத்தை அறுத்தவாறே காரின் மேற்கூரையை கைளால் சுழற்றி மூடும் இடத்தில் மனிதன் தெறிக்க விட்டிருப்பார். </div><div><br /></div><div>இப்படித்தில் அப்படி எதுவும் வாய்ப்புகள் இல்லை ப்ராஸ்னனுக்கு. </div><div><br /></div><div><br /></div><div>ஹாலிவுட் சறுக்கல்களில் ஒன்று. </div><div><br /></div><div><br /></div><div>தொடர்வோம் </div><div><br /></div><div>அன்பன் </div><div>மது </div><div><br /></div><div> </div>Kasthuri Renganhttp://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5208611175048594293.post-24505277787757262072023-12-13T23:42:00.005+05:302023-12-14T00:00:26.799+05:30தி கிரியேட்டர்<p><br /></p><p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgaPwOhf226iYBXsvEMmuXE2IN4ME2nGxoUuXM9xEgK_0_-z8VzOyXjJCKBUxSS-AEsePxp8NhSXJVjWvBaZvPCnmQi0m7Ic94pSHBvCnyvaTD1s4rhxmi22A15wJbORkuANV8dvBIrKNrbF6X0zMX5JLaKaOnlgsmmA6mn8qyv4dOa3eTInWlJlngXR9U/s180/the%20creator.jpeg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="180" data-original-width="140" height="180" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgaPwOhf226iYBXsvEMmuXE2IN4ME2nGxoUuXM9xEgK_0_-z8VzOyXjJCKBUxSS-AEsePxp8NhSXJVjWvBaZvPCnmQi0m7Ic94pSHBvCnyvaTD1s4rhxmi22A15wJbORkuANV8dvBIrKNrbF6X0zMX5JLaKaOnlgsmmA6mn8qyv4dOa3eTInWlJlngXR9U/s1600/the%20creator.jpeg" width="140" /></a></div><br />செயற்கை நுண்ணறிவு பாய்ச்சலை நிகழ்த்திக்கொண்டிருக்கும் இந்த காலத்தில், இதுகுறித்த படங்கள் தொடர்ந்து வெளிவந்துகொண்டிருக்கின்றன. தி கிரியேட்டர் அவற்றில் ஒன்று, வழக்கமான அதிரடி திரைப்படங்களில் ஒன்றாக இல்லாது தனித்து நிற்பது சில குறிப்பிட்ட காட்சிகளை ஒரு பேரலை போல மூழ்கடிக்கும் அற்புத இசையால்! <p></p><p>இசை ஹான்ஸ் ஸிம்மர் அப்புறம் வேறு எப்படி இருக்கும். படம் பார்க்கும் பொழுதும் பிறகும் பல்வேறு முறை கடைசி விவசாயி திரைப்படத்திற்கு இளையராஜா வழங்கிய இசையை மறுத்து அவரது பணியை புறந்தள்ளி வேறு ஒரு இசைக்கலைஞரை பயன்படுத்திக்கொண்ட மணிகண்டன் நினைவில் வந்தார். </p><p>இந்தப் படத்தைப் பார்த்த பிறகு இளையாராஜா இசையைப் புறக்கணித்ததற்காக மணியின்மீது இருந்த கோபம் வெகுவாக குறைந்துவிட்டது. இயக்குனர், கதை, காட்சி இவற்றையெல்லாம் தாண்டி அற்புதத்தை விளைவிக்கும் ஒரு இசைகோவை படத்திற்கு அவசியமா என்கிற கேள்வி மில்லியன் டாலர் கேள்வி மனதில் எழுந்தது. </p><p>நல்லவேளை காரத் எட்வர்ட்ஸ் தனது காட்சிகளை இசை மூழ்கடிப்பதை அனுமதித்திருக்கிறார். நம்ம மணிகண்டன் போல தூக்கிப் போட்டுவிடவில்லை. </p><p>செயற்கை நுண்ணறிவு குறித்து வந்த படங்களில், தி டெர்மினேட்டர், ஈகிள் ஐ, மாட்ரிக்ஸ் போன்ற படங்கள் மனிதகுலத்தை பூண்டோடு அழிக்கும் கொடூரமான தொழில்நுட்பமாக செயற்கை நுண்ணறிவை காட்டியிருப்பார்கள். </p><p>ஆனால், மனிதர்களிடமிருந்து தப்பிபிழைக்கும், தன்னை அழிக்கும் மனிதர்களைக் கூட நேசிக்கும் ஒரு செயற்கை நுண்ணறிவை இந்தப்படம் முன்வைக்கிறது. </p><p>இப்படியான ஒரு காட்சியில் மனிதனான ஜோஸ்வா செயற்கை நுண்ணறிவு கொண்ட இயந்திர குழந்தையான ஆல்பியிடம் பேசுகிறார், இயந்திர குழந்தை சுவர்க்கம் என்றால் என்ன என்று கேட்கிறது, மேலே இருக்கும் அமைதியான இடம், மரணத்திற்கு பிறகு மனிதர்கள் அங்கே போவார்கள் என்று சொல்ல, அதற்கு குழந்தை அப்போ நீ அங்கே போவாயா என்கிறாள், ஜோஷுவா, இல்லை நான் போக முடியாது, நல்லவர்கள் மட்டும்தான் அங்கே போக முடியும் என்று சொல்கிறான். </p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiduw8WtOJiRAhEgWUdClx2dFw8SHYV_Wz7JIOBPF0VZeLIrk7CB4BdbVu54krYVNT2ZMKIvljqnqPoMXB61nxdMeW5tMRxwbXNZnfqeQBUf1yIcpGWBdckEEt3ERUQe0JAabVCr3vvmnK74QZeN8TL7K6gJd6Zriwu2FpNxOMfXx2o9OWWlIdq5sVsyqg/s370/The_Creator_Teaser_Poster.webp" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="370" data-original-width="250" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiduw8WtOJiRAhEgWUdClx2dFw8SHYV_Wz7JIOBPF0VZeLIrk7CB4BdbVu54krYVNT2ZMKIvljqnqPoMXB61nxdMeW5tMRxwbXNZnfqeQBUf1yIcpGWBdckEEt3ERUQe0JAabVCr3vvmnK74QZeN8TL7K6gJd6Zriwu2FpNxOMfXx2o9OWWlIdq5sVsyqg/s320/The_Creator_Teaser_Poster.webp" width="216" /></a></div><br /><p><br /></p><p>இதற்கு இயந்திர குழந்தை, ஆக நீ நல்லவன் இல்லை என்பதால் சொர்க்கத்திற்கு போக முடியாது, நான் இயந்திரமென்பதால் போக முடியாது என்று சொல்ல, இந்த வாக்கியம் முடிகிற இடத்தில் ஹான்ஸ் சிம்மர் நிகழ்த்தியிருக்கும் இசை கோர்வை ஒரு பேரற்புதம். </p><p>எனக்கென்னவோ இயக்குனர் நமது தற்கால வாழ்வியல் முறை சுயநலமிக்க இயந்திரமாக நம்மை மாற்றிவிட்டதாக சொல்வதாகவேபடுகிறது. </p><p>இது எனக்கு ஒரு பிரதியோகமான பிரச்சனையை ஏற்படுத்திவிட்டது, DWD என்று படம் பார்ப்பவன் நான், (டௌன்லோட் வாட்ச் டெலீட்) இந்தப்படத்தை டெலீட் செய்ய மனம்வரவில்லை! இசைக் கோவையைத் தனியே வைத்திருந்தாலும் சில காட்சிகளை அவற்றின் இசைக்காகவே திரும்பத் திரும்ப பார்க்க வேணும் என்று தோன்றுகிறது. </p><p>படம் எடுத்து எண்பது மில்லியனில், வசூல் செய்தது நூற்றி நான்கு மில்லியன். நட்டமில்லை என்றாலும் இன்னும் நன்றாக போயிருக்கலாம். </p><p>படத்தின் நாயகனாக ஜான் டேவிட் வாஷிங்டன், நாயகியாக ஜெம்மா சென், குழந்தையாக மெடாலின் என நடித்திருக்கும் ஒவ்வொருவரும் மிக அற்புதமாக தங்கள் பங்களிப்பை செய்திருக்கிறார்கள். </p><p>செயற்கை நுண்ணறிவு பிரியர்கள், சாட் ஜிபிடி நண்பர்கள் தவிர்க்ககூடாத படம். </p><p>தொடர்வோம் </p><p>அன்பன் </p><p>மது </p><p>பி.கு.</p><p>காரிகனை ரொம்பவே மிஸ் பண்றேன். மனுஷன் பார்த்திருந்தா இன்னுமோர் அற்புத இசைப்பதிவு சாத்தியமாகியிருக்கும். </p>Kasthuri Renganhttp://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5208611175048594293.post-78464446423668519192023-04-09T20:35:00.003+05:302023-04-09T20:36:34.246+05:30ஒரு புகைப்படம் - பல கவிஞர்கள் - கவிதைகள் <p></p><div style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhWvKY69f1Dw3IcxqUZJtE3V6XhoWlmAhSIOzowYKGNPHsTkWHOcSwblNn4q_RhbWR09VgvlmYHC4uFxPsX58yX7Cnaest2qMbf2Wa2HKCRso1lHidnxpz-jC3S6CGVGfhqDzZdQCQ75iDmLwGgZJPt-gR6-i1VNiLpUJMmK8gDp0sm-a9RtpLrtFSK/s1000/ann%20isable.jpg" imageanchor="1"><img border="0" data-original-height="1000" data-original-width="667" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhWvKY69f1Dw3IcxqUZJtE3V6XhoWlmAhSIOzowYKGNPHsTkWHOcSwblNn4q_RhbWR09VgvlmYHC4uFxPsX58yX7Cnaest2qMbf2Wa2HKCRso1lHidnxpz-jC3S6CGVGfhqDzZdQCQ75iDmLwGgZJPt-gR6-i1VNiLpUJMmK8gDp0sm-a9RtpLrtFSK/s320/ann%20isable.jpg" width="213" /></a></div><br /> From <a href="https://www.facebook.com/annaisabellaphotography">https://www.facebook.com/annaisabellaphotography</a><p></p><p>இன்று காலை ஆனா இசபெல்லா போட்டோகிராபி பக்கத்திலிருந்து ஒரு படத்தை எனது முகநூலில் பகிர்ந்திருந்தேன். நண்பர்களிடம் அப்படத்திற்கேற்ற கவிதைகளை கேட்டேன். </p><p>என்ன மகிழ்வு இப்போதுவரை கவிதைகள் வரிசை கட்டி மலைக்கவைக்கின்றன. </p><p>1.</p><p>உன்னால் ஏற்பட்ட காயங்களை</p><p>ஒரு கவிதையில்</p><p>சொல்லலாம் என நினைத்தேன்.</p><p>காதலே புரியாத உனக்கு</p><p>கவிதை எங்கே புரியப்போகிறது.</p><p>- கவிவர்மன்</p><p><br /></p><p>2.</p><p>இதயப்பாறையை ஊடறுத்த</p><p>காதல்</p><p>அருவியாய்</p><p>உன் காலடியில்</p><p>நீயோ பார்வையில்</p><p>உள்வாங்கி</p><p>பூமிக்குள்</p><p>புதைக்கிறாய்</p><p>சு.பாபுஇராசேந்திரன்</p><p>பகல் 12.30</p><p>09 04 2024</p><p>3.</p><p>உன்னைப் பார்த்த அருவி</p><p>உருகி நின்றதே</p><p>- Samy Krish</p><div>4.</div><p>நான் அபாயமில்லை</p><p>என்கிறது சிவப்பு</p><p>எனக்கு சமாதானமில்லையென</p><p>சலசலக்கிறது வெள்ளை.</p><p>- யாழிசை மணிவண்ணன்</p><div><br /></div><p>5.</p><p>ஏன் கொட்டாது அருவி?</p><p>- Suresh Srinivasan</p><div><br /></div><div>6.</div><p>பெண்ணென்றால் பேயும் இரங்கும்</p><p>அருவி மட்டும் விதிவிலக்கா?</p><p>இரங்கி இறங்கி தவழ்கிறது.</p><p> - யாழிசை மணிவண்ணன்</p><div>7.</div><p>அருவி ஒரு பெண்ணாகி</p><p>உலவுகின்ற அழகோ</p><p>- Thangam Moorthy</p><div>8.</div><p>நீர் பாயும் நிலமெல்லாம்</p><p>பூத்துதான் நிற்கும்</p><p>ஏதேனும் ஒரு மலர்.</p><p>- யாழிசை மணிவண்ணன்</p><div>9. </div><p>மதிப்பெண் ஒன்று</p><p>பொருத்துக</p><p>கூந்தல் = அருவி</p><p>-யாழிசை மணிவண்ணன்</p><div>10.</div><p>தேவதைகளின் நிலம்</p><p>புகைமண்டலம்</p><p>குணம் ஈரம்.</p><p>-யாழிசை மணிவண்ணன்</p><div>11.</div><p>பேரழகியின்</p><p>பாதம் தொட்டு வணங்கும்</p><p>பேரருவி.</p><p>- Devatha Tamil Geetha</p><div>12.</div><p>ஆர்ப்பரிக்கும் அருவியே!</p><p>ஆரத்தழுவிக்கொள்....</p><p>அவளோடு</p><p>அமைதியாகு!</p><p>Kavibala Sethu</p><div>13.</div><p>உன் பேரிரைச்சலின்</p><p>அழகில்</p><p>மௌனம் கொள்கிறது</p><p>அருவி</p><p>-Srimalaiyappan Balachandran</p><div>14.</div><p>நூறடி அருவியும்</p><p>காலடி பணியும்</p><p>ஆறடி அருவி... அவள்!</p><p>-தகடூர் ப.அறிவொளி பொழிலமிழ்தன்</p><div>15.</div><p>அருவிக்கும் வெட்கம்வரும் </p><p>என்பதை </p><p>இன்றுதான் உணர்ந்தேன்</p><p>- Divanidikkasi</p><div>16.</div><p>தழுவத் துடிக்கும் நீர்ச் சாரல்,</p><p>தாங்கி நிற்கும் ஈரநிலம்,</p><p>அன்பை வெல்லப்போவது யார்?</p><p>அம்பை எண்ணம் மட்டுமே</p><p>உண்மையறியும்</p><p>-Sumathi</p><div>17.</div><p>ஆர்ப்பரிக்கும் அருவியும் அழகே</p><p>உன்னை கண்டு</p><p>-Thiru Gnani</p><div>18.</div><p>வெண் கூந்தலுக்குச்</p><p>செம்பூ சூடிக்</p><p>கொண்டாள்</p><p>இயற்கை அழகி</p><p>-Revathi Ram</p><div>19.</div><p>பெண் பார்க்கும்</p><p>விழிகளிலே மயங்கி</p><p>நிற்கிறது அருவி.....</p><p>- Saravanan Aarthy</p><div>20.</div><p>பேரருவி</p><p>-Karthik Deivanayagam</p><div><br /></div><p>21.</p><p>தேக்கரண்டியளவு</p><p>குளிர்</p><p>கையளவு</p><p>இரைச்சல்</p><p>ஒரு சிட்டிகை</p><p>ஆவல் என</p><p>என் நேசத்திடம்</p><p>வாங்கிய</p><p>கைமாற்றில் தான்</p><p>ஆர்ப்பரிக்கிறது</p><p>இந்த அருவி!!</p><p>புலப்படுகிற</p><p>அழகு மட்டுமே</p><p>புலனாகிறது</p><p>உனக்கு!!</p><p>- மைதிலி கஸ்தூரிரங்கன்</p><div>22.</div><p>உன்னை காணாத ஆறு</p><p>கண்டதும் அருவியானது</p><p>-யாழ் எஸ் ராகவன்</p><div>23.</div><p>உன்</p><p>மேனியை</p><p>தழுவ</p><p>அர்ப்பரிக்கிறது</p><p>என் மனம் !!</p><p>-Panneer Selvam</p><div>24.</div><p>பார்வையின்</p><p>சாரலை விட</p><p>கனவுகளின்</p><p>இரைச்சலை விட</p><p>மொத்தத்தில்</p><p>நம் நேசத்தை விட</p><p>அத்தனை ஒன்று</p><p>பெரியதில்லை தானே</p><p>இந்த அருவி!</p><p>-மைதிலி கஸ்தூரிரங்கன்</p><div><br /></div><p>25.</p><p><br /></p><p>வெள்ளருவி இரசிக்கும்</p><p>செவ்வருவி</p><p>-Madhavan Subramanian</p><div><br /></div><div>26.</div><p>****ஓரிடத்தில் ஈரருவி இருக்க கண்டேன் ஆடை களைந்ததொன்று</p><p>ஆடை நிறைந்தது ஒன்று</p><p>முன்னருவியில் நீர் விழ கண்டேன்</p><p>பின்னருவியில் நீர் (நானும் தான்)எல்லாம் விழ கண்டேன்......</p><p>***அருவி நீரில்</p><p>தழுவி மூழ்க</p><p>எனக்கும் ஆசை தான்</p><p>அங்கே நீ</p><p>இல்லாதிருந்திருந்தால்.........</p><p>இப்போது பார் ஆசைப் பெயர்ச்சி நடந்தேறி விட்டது......****</p><p>-Prakash Prakashraj</p><div><br /></div><p>27.</p><p>உன்னை பார்த்து நதியும் வழிகிறதே</p><p>-Vasanth Kumar</p><div><br /></div><div>28.</div><p>வழிந்தோடும் அருவியாய்</p><p>வருடும் உந்தன் கூந்தல் வாசத்தில் கரைந்ததே என் மனம்</p><p>-Ramanbarathwaaj Sridaran</p><div><br /></div><div>29.</div><p>உன் அழகின் முன் </p><p>அந்த அருவியும் தோற்றுப்போனது...</p><p>-செல்வ.தமிழரசன்</p><div>30.</div><p>அவள் ஒரு அன்பான அருவி.</p><p>கோடையிலும் வற்றாத குற்றாலம்.</p><p>பாச மழையில் என்னை நனைத்து </p><p>முந்தானையில் தலை துவட்டி விடும் என்றும்</p><p>புது அருவி.</p><p>-Selvaraju</p><div>31.</div><p>உள்ளத்தில் தகிக்கும் </p><p>காதல் கனலை </p><p>அணைக்க முடியுமா அருவியாலும்.</p><p>-Mani Karikalan</p><div><br /></div><p>32.</p><p>தூரத்தில் இருந்த வெண் மேகம் </p><p>உன்னை பார்க்க,</p><p>மழை நீராய் மாறி அருவியாக </p><p>உனது கருவிழி கடைக்கண் பார்க்க,</p><p>மோட்சம் என்ற கடலில் கலந்த தருணம்.</p><p>-Baskar Gopal</p><p>33.</p><p>மறந்து விடத்தான் ஒவ்வொரு அடியும் எடுத்து வைக்கின்றேன்,</p><p>அடுத்த நொடி</p><p>கொட்டும் அருவியாய் அலைபாய்கிறதே என்மனதிற்குள்</p><p>மந்திரப்புன்னகை மலர்ந்த</p><p>உன் நினைவுகள்....!</p><p>----அறந்தை மு.முபாரக்---(Mubarak Parveen Gift)</p><p>34.</p><p>A drop of water</p><p>from the</p><p>fringe of eyes</p><p>is turning</p><p>into cascade now!</p><p>Are you Glycerine?</p><p>Yes, you are!!</p><p>-Geethanjali Manchan</p><div>35.</div><p>உயரத்தில் அருவி</p><p>உதயத்தில் அழகி</p><p>ஜில்லென குளிப்பதுவோ எங்கள்</p><p>கண்கள் மட்டுமே......</p><p>-Anjalii Moorthy</p><div>36.</div><p>அவள் கடைக்கண் பார்த்தால்</p><p>"நீரற்று கிடக்கும் என் நெஞ்சம் எனும் நிலத்தில் மாரியாக பொழிந்து அருவியாக ஆர்ப்பரிக்கும் "</p><p>காதல் ❤️❤️❤️</p><p>-Iyalarasan Arasan</p><div>37.</div><p>என் வெம்மை யை உன்னாலும் குளிர்விக்க இயலவில்லை.!</p><p>என் மௌனத்தை உன் இரைச்சலும் உடைக்க வில்லை.!</p><p>-Ps Venkatesan</p><div><br /></div><p>38</p><p>(1)</p><p>எக்காரணம் கொண்டும்</p><p>கைகளை உயர்த்துவதோ</p><p>அல்லது அணைப்பது போலவோ</p><p>ஒரு போதும் அருவியை</p><p>கொண்டாடி விடாதே</p><p>வீட்டில் உன் செல்ல நாய்குட்டிக்கு</p><p>இடமிருக்காது.</p><p>39</p><p>(2)</p><p>குறிப்பாக சிகப்பு உடையோடு</p><p>வெள்ளை அருவியினருகே நிற்காதே</p><p>இத்தனை அழகாய்</p><p>இவ்வளவு இதமாய்</p><p>யாரோ தமக்கு முத்தமிடத்தான்</p><p>வருகிறார்கள் என</p><p>அந்த மலையும்</p><p>மொத்த இயற்கையும்</p><p>ஒரு வேளை</p><p>மண்டியிட்டுவிட்டால்</p><p>உன் அருவி இனி எங்கேதான் போகும்..</p><p>40.</p><p>(3)</p><p>நீர் தோட்டத்தில்</p><p>சிகப்பு நிற பட்டாம்பூச்சி</p><p>41.</p><p>(4)</p><p>அந்த நீர் வீழ்வதில்</p><p>ஒரு நியாயம் இருக்கிறது</p><p>அவரவர் காதல்</p><p>அவரவர் பாடு...</p><p>42.</p><p>(5)</p><p>நான் எங்கே துவங்கினால் என்ன</p><p>எவ்வளவு ஓடினாலென்ன</p><p>உன் பாதமோ</p><p>உன் பாதையோ</p><p>உன் விரல்களையோ</p><p>வந்தடையும்</p><p>நேரங்களில் தான்</p><p>காதலாகி</p><p>கசிந்துருகி</p><p>நான் நீர்தான் என</p><p>உணர்கிறேன்...</p><p>- Suresh Suriya</p><div><br /></div><div>43.</div><p>கவிதை எழுத வேண்டும் </p><p>என நினைக்கின்றேன்...</p><p>ஆனால் </p><p>ஏனோ அந்த சிவப்பழகி எ</p><p>ன் கண்களை மறைக்கின்றாள்...</p><p>-K Om Raj S</p><div><br /></div><p>44.</p><p>உன்னைப் பார்த்தவுடன்</p><p>அருவி கூட</p><p>கடந்து செல்ல</p><p>தடுமாறி நிற்கின்றதே</p><p>-Senthil Kumar</p><div>45.</div><p>மூலிகை வேர் - </p><p>வாசனை மரங்கள்-</p><p> குட்டிக் குட்டிச் செடிகள்-</p><p> காட்டுப் பூக்கள் - </p><p>என இயற்கையின் ஆன்மாவை பிழிந்து </p><p>வெண் ரசமாய் சடசடவென கொட்டுகிறாய் ..</p><p> சட்டென ஊடுருவும் நேசங்களை </p><p>- கனவில் தோன்றும் கற்பனைகளை - </p><p>பற்றிக்கொள்ள துடிக்கும் காதலை - </p><p>என்னுள் மொத்தமாக பிழிந்து ..</p><p>. நீயோ முகம் காட்டாமல் நின்று விடுகிறாய். </p><p>கொட்டும் அருவியில் உடல் நனைந்திட ..</p><p>... நிற்கும் உனதன்பில் உயிர் கரைந்திட ஏங்கும் </p><p>என்னை எள்ளி நகையாடிடும் எங்கிருந்தோ வரும் குயிலின் குரல். </p><p>( கவிஞராக முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்).</p><p>-Kumar Kumarseabird</p><div><br /></div><div>46.</div><p>கருத்த</p><p>மேகக் கூந்தலுடன்</p><p>தான் , நான்</p><p>காத்திருந்தேன் ,</p><p>ஆண்டுகள் பலவாய் ...!</p><p>என் தாடி</p><p>வெளுத்து</p><p>தொங்குதடி ,</p><p>உன் நினைவால்..!</p><p>-Srinivasan Vignesh</p><div><br /></div><div>47.</div><p>தயவுசெய்து திரும்பாதே </p><p>அப்படியே நில்</p><p> மின்னல் தாக்கிபார்வையற்றவனாவேன்</p><p>-Surjith Veeraiah</p><div><br /></div><div><br /></div><p>Sugantha Sundaram</p><p>Super coments la irukkum kavithaikalai oru book podalam</p><p><br /></p><p>48.</p><p>Ramanbarathwaaj Sridaran</p><p>சில்லெனப்பரவும் நீர்த்துளிகளுக்கு ..</p><p>சிவப்புக் கம்பள வரவேற்பு..</p><p><br /></p><p>49.</p><p>Kubenthiran Kuberan</p><p>உன் பாதங்களைத் தொடுவதற்காக </p><p>வானத்திலிருந்து கொட்டுகிறது </p><p>அந்த நீர் துளிகள். </p><p>ஆனால் என்னவோ</p><p> உன் பார்வை பட்டவுடன் </p><p>ஆவியாகி செல்கிறது. </p><p>நானோ உன் அழகை ரசித்துக் கொண்டிருக்கிறேன் </p><p>தயவு செய்து திரும்பி விடாதே </p><p>நானும் ஆவியாகி விடுவேன்.</p><p><br /></p><p>50.</p><p>என்னவளே</p><p>என்</p><p>அருகில்</p><p>வந்த</p><p>போது</p><p>உன்</p><p>அழகை</p><p>கண்டு</p><p>மிரண்டு</p><p>போய்</p><p>கொட்டுகிறேன்</p><p>பெரு</p><p>அருவியாக!!!!</p><p>Panneer Selvam</p><div><br /></div><p>51.</p><p>உன் அழகில்</p><p>பரவசப்பட்டு</p><p>ஆர்ப்பரிக்கிறது</p><p>அருவி...</p><p>தவப்புதல்வன்.(தவப்புதல்வன் சசிகுமார்)</p><p><br /></p><p>52.</p><p>நெடுங்காலம்</p><p>நெடுந்தூரம்</p><p>நெடுவுயரம்</p><p>வீழ்ந்து அழியாமல்</p><p>குதித்ததுக் குதூகலிக்க</p><p>பெருகும் பேரன்புப் பிரவாகம்</p><p>மறைக்கிறாய்</p><p>ஆடைக்குள்</p><p>அழகையெல்லாம்</p><p>தெரிகிறாய்</p><p>வாசம் பரப்பும்</p><p>மலர்க்காடினும்</p><p>மூப்பறியாப் பேரழகாய்</p><p>தள்ளி நின்று கொல்லாமல்</p><p>என்னுள் மூழ்கி</p><p>எனக்கு மோட்சம் தா</p><p>கால் கொண்டு நடக்கவும்</p><p>கை கொண்டு விசிறவும்</p><p>கார் கூந்தல் பரப்பவும்</p><p>கற்றப் பெண் நதியே...</p><p>-Sembai Muruganandham</p><p><br /></p><p>53.</p><p>படமே</p><p>கவிதையாய்...</p><p>இன்னொரு கவிதை எதற்கோ...</p><p>அய்ய்யே</p><p>இங்கே பாரேய்ன்...</p><p>அழகியின் அழகில் மயங்கி</p><p>வழியுது...</p><p>'ஜொள்' அருவி !</p><p>-கவிஞர் விடிவெள்ளி</p><p><br /></p><p> 54.</p><p>அருவி நீர் முழுவதும் பருகிவிட</p><p>ஆசையில் பறக்குது சின்னக்குருவி.</p><p>Nilaa Bharathi</p><div>(.இதைவிட வா சிறந்த கவிதை எனக்கு வரப்போவுது)</div><p><br /></p><p>55.</p><p>நீ நீர்மேல் மட்டுமா</p><p>நடக்கிறாய்</p><p>என் நினைவிலும்...</p><p>- Rajasekaran Raman</p><div><br /></div><p>56.</p><p>உன்</p><p> அசைவில் </p><p>அசையும்</p><p> அருவி!</p><p>- Kumar Sinnu</p><div><br /></div><div>57.</div><p>அவளின்</p><p>நீ</p><p>ண்</p><p>ட</p><p>கூ</p><p>ந்</p><p>த</p><p>ல்</p><p>- Panneer Selvam</p><div><br />59.</div><p>அருவி</p><p>உன்னை</p><p>பெண்ணைப்</p><p>பார்த்ததும்</p><p>உருகி பனியாகிப்</p><p>போனதேன்</p><p>-செல்வேந்திரன்</p><div><br /></div><div>60.</div><p>சிவப்பு ரோஜாவைக் கண்டு</p><p>சிலிர்த்து விழும் அருவி!</p><p>Ravi V</p><div><br /></div><div>61.</div><p>உன் காலடியில் வீழ்ந்து</p><p>கிடக்கிறேன் பேரருவியாய்!</p><p>அணையாக நின்றாலும்</p><p>உன் மதகுகளைக் கொஞ்சம் திற!</p><p>காதல் பாசனம் நடக்கட்டும்!</p><p>செந்தில் குமரன் சின்னதம்பி</p><p><br /></p><p>இதே படத்தில் ஒரு நண்பர் இதை நூலாக வெளியிடலாம் என்றார்...</p><p><br /></p><p>மின் நூலாக செய்வோம். </p><p><br /></p><p>அன்பன் மது </p><p><br /></p><p><br /></p>Kasthuri Renganhttp://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-5208611175048594293.post-28211404335031218172022-04-06T23:32:00.003+05:302022-04-06T23:34:28.783+05:30இனியும் தேவையா ஒதுக்கீடு? <div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhiZsg3hwZihYmRq4hT-ta2WSUtVH2gjQTDZa7mDFyos8Y1Yx3ytHFKHpQxuG-r_Yo2WkYHHBWBdE3APwczYSMEw-7oFOkG4lrZrnfh9XEe8fSWbPwAZa1ELxjReTJZ2V9BgIymWMfBFlsbULfW_bV5KkN957dy-3S72Mskexe_nbvcTI6IZ0ycPtcy/s299/reservation.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="169" data-original-width="299" height="169" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhiZsg3hwZihYmRq4hT-ta2WSUtVH2gjQTDZa7mDFyos8Y1Yx3ytHFKHpQxuG-r_Yo2WkYHHBWBdE3APwczYSMEw-7oFOkG4lrZrnfh9XEe8fSWbPwAZa1ELxjReTJZ2V9BgIymWMfBFlsbULfW_bV5KkN957dy-3S72Mskexe_nbvcTI6IZ0ycPtcy/s1600/reservation.jpg" width="299" /></a></div><br /><div><br /></div><div><br /></div><div>ஊழ்வினை ஊழ்வினை என்பார்களே அதுதான் இது </div><div><br /></div><div>ஒரு இலக்கிய அரங்கிற்கு சென்றிருந்தேன், நிகழ்வின் நடுவே ஒருவர் அரங்கை விட்டு வெளியேற அவருக்கு தேநீர் வழங்கப் பணிக்கப்பட்டேன். </div><div><br /></div><div>சில மிடறுகள் உள்ளே சென்றதும் சார் நான் ஒன்று சொல்லவா என்றார்... சொல்லுங்க என்றேன்.</div><div><br /></div><div><br /></div><div><br /></div><div>அய்யா சொன்னார் இனி எதுக்கு சார் இட ஒதுக்கீடு? பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு தருவதுதான் முறை என்றார். </div><div><br /></div><div>என்னை அவருக்கு தேநீர் வழங்கச் சொன்ன நண்பருக்கு நான் எதோ பெருந்தீங்கை செய்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் இப்படி ஒருவருக்கு தேநீர் வழங்க சொல்லி என்னை பணித்திருப்பாரா என்ன?</div><div><br /></div><div>நான் மௌனமாக இருக்கவும் அதை சம்மதமாக எடுத்துக்கொண்டு மேலும் விளக்கினார். </div><div><br /></div><div>சார் நான் ஒரு டாக்டர். என் பிள்ளையை நான் பணம் கட்டியே படிக்கவைக்க கூடிய அளவில் செல்வம் இருக்கிறது. இன்னும் எனக்கு எதற்கு இட ஒதுக்கீடு என்றார்.</div><div><br /></div><div>நான் திருமாவிடம் நேரே கேட்கிறேன் எதற்கு இடஒதுக்கீடு என்று என்றார். ஏற்கனவே ஒரு முன்னாள் சட்ட மன்ற உறுப்பினரிடம் கேட்டிருக்கிறேன், அதற்கு அவர் அதை எடுத்தால் எங்களால் வாழ முடியாது என்று சொன்னதாக சொன்னார் </div><div><br /></div><div>இந்த உரையாடல் நடந்துகொண்டிருக்கும் பொழுதே என் வகுப்பில் நீண்ட நாள் வராத மாணவர்களின் பின்புலம் நினைவில் வந்து வலித்தது. </div><div><br /></div><div>வாயில் வந்த தடித்த வார்த்தைகளை நசுக்கி விட்டு அய்யா நீங்கள் என்ன சாதி என்றேன். </div><div><br /></div><div>சொன்னார், எம்.பி.சி. </div><div><br /></div><div>அமெரிக்க கல்வி நிறுவனம் வெள்ளை மாணவர்களுக்கும் கறுப்பின மாணவர்களுக்கும் இடையே இருக்கும் கற்றல் அடைவுகளை குறித்த ஒரு ஆய்வை செய்திருக்கிறதே தெரியுமா என்றேன்.</div><div><br /></div><div>தெரியாதே எனவும் தொடர்ந்தேன் </div><div><br /></div><div><div>தேர்வு எழுத சென்ற வெள்ளை மாணவர் குழுவிடமும், கறுப்பின மாணவர் குழுவிடமும் அவர்களின் நிறம் குறித்த சில வாக்கியங்களைச் சொல்லி தேர்வு எழுத சொல்லியிருக்கிறார்கள். </div><div><br /></div><div>ஏய், நீ வெள்ளை இனம், செமையா தேர்வு எழுது என்றும், கறுப்பரிடம் நீங்கள் கறுப்பர்கள், அசிங்கம், தேர்வு தேவையா என்கிற ரீதியில் பேசி தேர்வறைக்கு அனுப்பபட்டார்கள் மாணவர்கள். </div><div><br /></div><div><br /></div><div>தேர்வு முடிவுகள் சுமாராக படிக்கும் வெள்ளை இன மாணவர்கூட தன் இயல்பாக வாங்கும் மதிப்பெண்ணை விட அதிகமாக பெற்றிருப்பதையும், நன்கு படித்து நல்ல மதிப்பெண் பெரும் கறுப்பின மாணவர்களின் மதிப்பெண் சரேலென சரிந்திருப்பதையும் பதிவு செய்திருக்கிறார்கள். </div><div><br /></div><div>இன உணர்வு எப்படி ஒரு மாணவரின் கற்றலை பாதிக்கும் என்பதற்கான நிரூபிக்கப்பட்ட ஆதாரம் இது. </div><div><br /></div><div>நிலவுக்கு நாலு ராக்கெட் விடும், செவ்வாயில் குடியேறும் திட்டம் வைத்திருக்கிற ஆனானப்பட்ட அமெரிக்காவின் சமூக நிலை இது. </div><div><br /></div><div>சமரசம் உலவும் இடமே என்று பாடும் இங்கே புதைப்பதைக் கூட பதைத்து பதைத்து செய்ய வேண்டியிருக்கிறது, என்கிற பொழுது குறிப்பாக சாதிய உணர்வு மரபுப் பண்புகளில் கடத்தப்பட்ட சமூக அமைப்பான டிசிட்டல் இந்தியாவில் இடஒதுக்கீடுகளை மறுப்பது மன்னிக்க முடியாத பெரும் குற்றம் என்றேன்.</div><div><br /></div><div>இந்த தகவல்கள் எனக்குப் புதிது என்றார். </div><div><br /></div><div>யோசிக்கட்டும் ...அவர் </div></div>Kasthuri Renganhttp://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5208611175048594293.post-66299275819945648082022-03-25T22:39:00.004+05:302022-03-25T22:40:02.411+05:30பச்சை ரத்தமும் பதவிஉயர்வுக் கலந்தாய்வும்<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj12DEpi8nBllECa_QMN_2x0PsCECYFARQ3Q90fw22znYCVodT8mkzQi6m8WzgKm2weIs3pc2FQtP_Y0DnbuSpiKAdQjAhTdpn9VkoIXaYAxwk3NJvv_c6cASjImS3GXTZy6if86DEQ2jG2rlEpsycNSxSW1KQB_f4IdPS1mEvNJt0qrztddj0jPP6a/s1230/pachchai-raththam-bharathi-puthakalayam_FrontImage_169.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1230" data-original-width="750" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj12DEpi8nBllECa_QMN_2x0PsCECYFARQ3Q90fw22znYCVodT8mkzQi6m8WzgKm2weIs3pc2FQtP_Y0DnbuSpiKAdQjAhTdpn9VkoIXaYAxwk3NJvv_c6cASjImS3GXTZy6if86DEQ2jG2rlEpsycNSxSW1KQB_f4IdPS1mEvNJt0qrztddj0jPP6a/s320/pachchai-raththam-bharathi-puthakalayam_FrontImage_169.jpg" width="195" /></a></div><br /><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">கடந்த பதினெட்டு ஆண்டுகளாக ஒரே பள்ளியில் பணியாற்றிய எனக்கு திடுமென பதவி உயர்வு வாய்ப்பு ஒன்று கிட்டியது. கடந்த 8/03/2022 அன்று பதவி உயர்வுக் கலந்தாய்வு என்று அறிவிக்க சற்றே தயக்கத்துடனேயே கலந்தாய்வில் கலந்துகொண்டேன். </div><div><br /></div><div style="text-align: justify;">ஆனால் 08/03/2022 அன்று கலந்தாய்வு நடைபெறுவதில் தொழில்நுட்பச் சிக்கல்கள் இருந்தன. காலை 9:30 மணிக்கு கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட நாங்கள் காத்திருக்க பணிக்கப்பட்டோம். முதல் நாளே முடிந்திருக்க வேண்டிய முதுகலை உயிரியல் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு பல்வேறு தொழில்நுட்பக் காரணங்களால் நிறைவுறவில்லை. இந்த சிக்கல் தீர்ந்தால் மட்டுமே பதவி உயர்வுக் கலந்தாய்வு நடைபெறும் என்று அறிந்தோம். காலை ஒன்பது மணிக்கு துவங்கிய காத்திருப்பு மதியம் ஒருமணிவரை நீளவே அயர்ச்சி துவங்கியது. </div><div><br /></div><div style="text-align: justify;">கலந்தாய்வுக்கு வந்த இளவல் தென்னரசுவுக்கு அன்று பிறந்தநாள், மதியம் அவர் அளித்த சிறப்பு விருந்து, இதைக் கடந்து மாலை ஐந்து மணிவரை ஒரு முன்னேற்றமும் இல்லை. இப்படிப்பட்ட நீண்ட காத்திருக்கும் வாய்ப்புகளை வாசிப்பு எளிதாக்கிவிடும் என்பதால் இல்லம் திரும்பி மூன்று புத்தகங்களை எடுத்துக்கொண்டேன்.</div><div><br /></div><div>கவிஞர் இந்திரன் குறித்த ஒரு நீண்ட நூல், இந்திர ஜாலம், இன்னொன்று பச்சை ரத்தம். </div><div><br /></div><div style="text-align: justify;">கவிஞர் ந.வே.அருள் அவர்களின் இந்த இரண்டு நூட்களோடு கூடவே தி ஹாபிட் என்கிற நூலையும் எடுத்துக்கொண்டு உணவை தவிர்த்துவிட்டு கலந்தாய்வுக்கு திரும்பினேன். இரவு ஒன்பதுக்குள் பச்சை ரத்தம் முழுவதையும் படித்துவிட்டேன். கலை மக்களுக்காவே என்று இயங்கும் இடதுசாரி பின்னணியில் ஊறிப்போன ஒருவர் கவிநயம் மிக்கவராக, கலாச்சார படிமங்களை அனாயசமாக கையாளத் தெரிந்தவராக இருந்தால் இப்படி ஒரு படைப்பு சாத்தியம். </div><div><br /></div><div style="text-align: justify;">டெல்லி குளிரில் நின்று போராடி வென்ற பஞ்சாப் விவசாயிகளுக்கு அர்ப்பனமாய் எழுதப்பட்ட தொகுப்பு இது. ஒரு முழுக் கவிதைத் தொகுப்பையும் ஒரு போராட்டத்திற்கு அர்ப்பணிக்க முடியுமா? இவ்வளவு மொழி ஆளுமையோடு சமூகக் கவிதைகளை எழுத முடியுமா என்கிற வியப்பெல்லாம் தாண்டிய அற்புதம் இந்த தொகுப்பு. </div><div><br /></div><div style="text-align: justify;">இந்த வாசிப்பு தந்த நிறைவில் இந்திர ஜாலத்தையோ, ஹாபிட்டையோ தொட விளையவில்லை மனம். ஒருவழியாய் இரவு ஒன்பது மணிக்கு எங்களுக்கு கலந்தாய்வு துவங்கியது, பதினோரு மணி சுமாருக்கு எனது முறை வந்தது. நான் ஆற்றல்மிகு தலைமையாசிரியரை கொண்ட காவேரி நகர் பள்ளியை தேர்ந்தெடுத்தேன். </div><div><br /></div><div>நண்பர்களில் பலரின் முறை வரும் வரை காத்திருந்துவிட்டு, இரவு ஒன்னரை மணிக்கு வீடு திரும்பினேன். </div><div><br /></div><div><div>அனுபவங்கள் </div><div>தொடரும் </div><div><br /></div><div>இவன் </div><div>அன்பன் மது </div></div>Kasthuri Renganhttp://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-5208611175048594293.post-53671460669407927912021-06-04T13:08:00.003+05:302021-06-05T22:04:40.332+05:30தமிழ்நாடா தமிழகமா ? <p><br /></p><p>கவிஞர் <a href="https://www.facebook.com/magudeswaran.govindharajan">மகுடேசுவரன்</a></p><p> தமிழ்நாடா தமிழகமா ? </p><p>**</p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgliCudAn01KOj0-B2zrvLlQR3Zha-9oAUu9DJ3xl4ZOhWE5GrdZXrvgMVudkUg5ZqkyMFA_3K-Tl8jLqml6AwNpOS4eGxnyl_V2J0WV6_TFnW-fquBpR8aYx2mnnXwPaRoZ0jf1V1fryk/s720/IMG_20210604_130544.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="638" data-original-width="720" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgliCudAn01KOj0-B2zrvLlQR3Zha-9oAUu9DJ3xl4ZOhWE5GrdZXrvgMVudkUg5ZqkyMFA_3K-Tl8jLqml6AwNpOS4eGxnyl_V2J0WV6_TFnW-fquBpR8aYx2mnnXwPaRoZ0jf1V1fryk/s320/IMG_20210604_130544.jpg" width="320" /></a></div><br /><p><br /></p><p>ஒவ்வொரு மாநிலப் பெயரும் எவ்வாறு வந்திருக்கிறது என்று பார்ப்போம். </p><p><br /></p><p>முதலில் கேரளத்தை எடுத்துக்கொள்வோம். மூவேந்தர்களான சேர சோழ பாண்டியரில் சேரன் முதலாமவன். சேரனின் ஆட்சிக்குட்பட்ட நாடு சேர நாடு. சேரன் என்னும் சொல் சேரல் என்பதிலிருந்து வந்தது. சேரமன்னர்களின் பெயர்களில் சேரன் என்றிருக்காது. சேரல் என்றிருக்கும். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் (சேரல் + ஆதன்), பெருஞ்சேரல் இரும்பொறை, கோப்பெருஞ்சேரல் இரும்பொறை என்று சேர மன்னர்களின் பெயர்கள் இருக்கின்றன. சேரல்கள் ஆண்ட நாடு சேரலம். இந்தச் சேரலம் என்ற சொல்லே பிற்காலத்தில் திரிபடைந்து ‘கேரளம்’ ஆயிற்று. ஆங்கிலேயர்கள் ஒவ்வொரு பெயரின் ஈற்று மெய்யையும் அகற்றி அவர்களுடையே மொழிக்கேற்ப வழங்கினார்கள். Raman என்பதை Rama என்றதைப்போல கேரளத்தைக் ‘கேரளா’ என்றாக்கிவிட்டார்கள். அவர்களுடைய மொழி மலையாளம். ‘மலை ஆள்’ பயன்படுத்துகின்ற மொழி என்பதால் ‘மலையாளம்’. மலையாளம் பேசுபவன் மலையாளி. </p><p><br /></p><p>கருநாடகத்தின் பெயர்க்காரணம் என்ன ? முதலில் அது அகநாடு. அகம் என்றால் வாழ்விடம், நிலம், ஒன்றின் தனிச்செம்மை உயர்ந்து நிலைத்த இருப்பிடம். எதிர்ச்சொல்லைக்கொண்டு அதற்குரிய தெளிந்த பொருளை அடைய வேண்டும். புறம் என்றால் ஒட்டிக்கொண்டு வெளியிருப்பது. அகம் என்றால் நீங்காமல் உள்ளிருப்பது. அதனால் அகம் என்பதன் அழகிய பொருள் குறித்து நமக்குச் சிறிதும் ஐயம் வேண்டா.</p><p> </p><p>நாடு என்பது என்ன ? நாடு என்பதும் இடம்தான். நிலம்தான். வாழ்வதற்கென்று, வணிகத்திற்கென்று மக்கள் நாடிவரும் சிறந்த பகுதி நாடு. நாட்டிற்கென்று தனித்தனியே அரண்கள் இருக்கும். கலை பாட்டு இசை கூத்து உணவு விளைபொருள் பேச்சு என யாவும் தனித்த ஒன்றாகவும் இருக்கலாம். நாடு பேருறுப்பு. அதனில் ஊர் சிற்றுறுப்பு. நாடும் ஊருமாய் விளங்குபவை நம்முடைய பண்டைப் பெரும்பரப்பு. ஓரியல்பு பெருகிச் சிறக்குமிடம் நாடு. இதனையும் எதிர்ச்சொல் கொண்டு உணரப் புகுந்தால் நாடு X காடு. காட்டில் உள்ள எத்தகைய கடினங்களும் நாட்டில் இருப்பதில்லை. கொல்லுயிர்த் தொல்லை இல்லை. காவல் உண்டு. காவலன் உள்ளான். வாழ்வு சிறக்க வழியுண்டு. நாடு என்பது வாழ்விடச் செம்மை வளர்ந்தோங்கிய இடம். </p><p><br /></p><p>கருமை என்பதற்கு வளம் என்றும் ஒரு பொருளுண்டு. பயிர் நன்கு வளர்ந்திருப்பதை இன்றும் ஊர்ப்புறத்தில் எப்படிச் சொல்கிறார்கள் ? ‘பயிரு நல்லாக் கருகருன்னு வளர்ந்திடுச்சு’ என்பார்கள். கருமையை அகத்தே கொண்ட நாடு. கருமை அகம் நாடு. </p><p><br /></p><p>இலக்கணப்போலி என்று கேள்வியுற்றிருப்பீர்கள். ஒரு சொல் இலக்கணப்படி எப்படி இருக்கவேண்டுமோ அதற்கு மாறாகவும் அதே இலக்கணத் தன்மையோடு அமைந்திருப்பதுதான் அது. இல்முன் என்பது முன்றில் என்று மாறுவது. நகர்ப்புறம் என்பது புறநகர் என்றாவது. அகநாடு என்பது நாடு அகம் = நாடகம் என்று மாறுவது. இப்போது பாருங்கள் கரு அகநாடு, கருநாடகம். அச்சொல் தோன்றிய இலக்கண வழி முற்றிலும் தமிழுக்குரியது. கருநாடகம் என்பது தூய தமிழ்ச்சொல்லும்கூட.</p><p><br /></p><p>ஆந்திரத்தை எடுத்துக்கொள்வோம். ஆந்திரம் என்ற சொல்லின் பொருளைத் தேடிய வகையில் எனக்கு இரண்டு பொருள்கள் கிடைத்தன. ஒன்று குடல். இன்னொன்று தெலுங்கு. தெலுங்கிற்கு இன்னொரு பெயர் ஆந்திரம். பிரதேசம் வடசொல். அதற்கும் நாடு என்றே பொருள் கொள்ளலாம். தேயம் என்பது தூய தமிழ்ச்சொல். அதுவே தேசம் ஆயிற்று. அச்சொல் இருமொழிகளிலும் பயில்கிறது. ஆந்திரப் பிரதேசம் = தெலுங்கு நாடு. </p><p><br /></p><p>இனித் தமிழ்நாட்டிற்கு வருவோம். பண்டைத் தமிழகத்தின் வடவெல்லையாகக் கரும்பெண்ணை (கிருட்டிணை) ஆறுவரைக்கும் விரிக்கலாம். தமிழ்நாடு, தமிழகம், தமிழ்கூறு நல்லுலகு என எல்லாம் தமிழ் நிலத்தைக் குறிப்பதாக ஆயின. இலக்கிய ஆட்சியுடையன.</p><p><br /></p><p>மூவேந்தர்கள் எனப்படுவோர் தமக்கென்று நாடு உடையவர்கள். சேரர் ஆண்டதால் சேர நாடு. சோழர் ஆண்டதால் சோழநாடு. பாண்டியர் ஆண்டது பாண்டியநாடு. தொண்டைமான்கள் ஆண்டது தொண்டைநாடு. கொங்குவேளிர் ஆண்டது கொங்குநாடு. பல்லவர் ஆண்டது பல்லவ நாடு. </p><p><br /></p><p>பழந்தமிழகத்தில் ஊரும் நாடும் முதல் அடையாளங்கள். ஒருவன் இன்ன ஊரன், இன்ன நாடன் என்பதே அவனுடைய சிறப்பைக் கூறும். குடிகளும் புலவர்களும் இன்ன ஊரன், இன்ன நாடன் என்று அறியப்படுவர். இதனால் மன்னனும் தன் தலைநகரத்தின் பெயரால், சிறந்து விளங்கும் நகரங்களின் பெயரால் இன்ன ஊரன் என்று புகழப்படுவான். இன்ன நாடன் என்று மன்னன் புகழப்படுதலும் உண்டு. </p><p><br /></p><p>மலைகளால் ஆன நாட்டின் அரசன் என்பதால் மலைநாடன் எனப்பட்டான் சேரன். காவிரியால் வளங்கொழித்தமையால், வெள்ளம் பெருகியமையால் வளநாடன், புனல்நாடன் எனப்பட்டான் சோழன். பாண்டியன் எத்தகைய நாடனாக அறியப்பட்டான் தெரியுமா ? பாண்டியன் தென்னாடன். பாண்டியனைக் குறிக்கும் இன்னொரு பெயர் தமிழ்நாடன். ஏனென்றால் பாண்டிய மன்னனே தமிழுக்குச் சங்கம் வைத்து புலவர்களைப் புரந்து வாழ்ந்த மன்னன். பாண்டியனோடு மட்டுமே அப்புகழ்ச்சி நின்றுவிட்டதா என்று பார்த்தால் ‘மூவருலா’வில் சோழ மன்னனையும் ’கங்கைத் துறைவன் பொறையன் தமிழ்நாடன் சோணாட்டு இறைவன்’ என்று புகழ்கின்றார் ஒட்டக்கூத்தர். அதனால் தமிழ்நாடன் என்ற பெயர் மூவேந்தர்க்கும் உரிய புகழ்ச்சிப் பெயராகிறது. </p><p><br /></p><p>தமிழ்நாடா, தமிழகமா என்று பார்த்தால் பரிபாடல் திரட்டின் எட்டாம் பாடல் தெளிவான சான்றினைத் தருகிறது. ‘தண்டமிழ் வேலித் தமிழ்நாட்டகத்தின்’ என்று கூறுகிறது அப்பாடல். தமிழை வேலியாகக்கொண்ட இந்த நிலப்பரப்பு தமிழ்நாடுதான். </p><p><br /></p><p>கருநாடகத்தைப்போல ’தமிழ் அகநாடு அதாவது தமிழக நாடு’ என்று சொல்ல முடியுமா ? அதற்கான பொருள்தேவையோ புகழ்ச்சித் தேவையோ எழவில்லை. ஆனால் ‘தமிழ்நாட்டு அகம்’ என்று மேற்சொன்ன பாடலே சொல்கிறது. எனவே ’தமிழ்நாடு’ என்பதே வலிமையான முதலொட்டு. தமிழகம் என்ற சொல் தமிழ்விளங்கும் பாரளாவிய நிலங்கள்வரைக்கும் பாயட்டும். இங்கே தமிழ்நாடு என்பதே மாநிலப் பெயராய் விளங்கட்டும். இம்மாநிலத்திற்குத் தமிழ்நாடு என்பதனைவிடவும் சிறந்த பெயர் வேறில்லை. </p><p><br /></p><p>- கவிஞர் மகுடேசுவரன்</p><p><br /></p><p>(பண்பான சொற்களால் கருத்துரையாடுக. அனைவர்க்குமான புன்னகையைக் காக்க.)</p>Kasthuri Renganhttp://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5208611175048594293.post-343953327260054292021-03-31T21:12:00.002+05:302021-03-31T21:12:16.092+05:30கனவை விதைப்பவன் மற்றும் ஏனைய இற்றைகள் <p> ஆசிரியம் என்பது குறித்த பல்வேறு கருத்துக்கள் உண்டு </p><p>இங்கே ஒரு செய்தி </p><p><br /></p><p>#அமெரிக்க_பள்ளிகள்</p><p>#தலைமைத்துவ_பயிற்சி </p><p>கல்வி என்பது ?</p><p>நாலு எழுத்து சொல்லித் தருவது, </p><p>எழுதப் படிக்க சொல்லித் தருவது என்பதே இங்கே பெரும்பாலான கிராமத்து பெற்றோரின் நிலையாக இருக்கிறது </p><p>ஆசிரியர் குறித்து பாவ்லோ பிரைரே என்ன சொல்கிறார் என்பதை விட ஒவ்வொரு ஆசிரியருக்கும் ஒரு நிலைப்பாடு இருக்கும். </p><p>பாஸ் செய்ய, </p><p>நல்ல மதிப்பெண் பெற </p><p>நல்ல பழக்கங்களை உருவாக்க </p><p>இதோடு கூடுதலாய் கனவை விதைப்பவர்கள் என்று சொல்வேன் நான். </p><p>அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர் அன்பு நண்பர் பாலா, ஒருமுறை பேசிக்கொண்டிருக்கும் பொழுது தனது மகள் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்புகிறாள் என்றார். </p><p>வியந்து போனேன் </p><p>அதன்பின்னர் அருமை சகோதரி கிரேஸ் மருமகன்கள் அவரோடு சண்டையிடுவதாகவும், இந்தியாவில் பிறப்பு என்பதால் அதிபர் வாய்ப்பு தவறிவிட்டதாகவும் வருந்தியதாகச் சொல்லவும் எனக்கு புரிந்தது </p><p>அமெரிக்க பள்ளிகள் தலைமை பண்பு பயிற்சியில் எல்லா மாணவர்களுக்கும் தலைமை பீடத்தின் உச்ச நிலையான அதிபர் கனவை விதைக்கின்றன. </p><p>தன்னை அதிபர் தேர்தலுக்கு தகுதிப் படுத்திக் கொள்ள விரும்பும் ஒரு குழந்தை என்ன விதமான பண்பு நலன்களைப் வளர்த்துக் கொள்ளும், எப்படி தன்னை தானே முனைந்து மேம்படுத்திக் கொள்ளும் என்பதெல்லாம் ஒரு ஆசிரியராக என்னால் உணர்ந்து பார்க்க முடிகிறது. </p><p>என்ன ஒரு அற்புதமான விசயத்தை செய்கின்றன அமெரிக்க பள்ளிகள் !</p><p>இங்கே நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம் ?</p><p>ஹும் ஒரு நீண்ட பெருமூச்சு...(விளக்கம் வேண்டுமா என்ன?)</p><p><br /></p><p>இந்த படங்களை உருவாக்கி பார்த்தேன் நன்றாக இருகின்றனவா ?</p><p><br /></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhl6K8VhADD9nnlrI08-EilymjgLiV_L_IqrqnTO2f4-SOWZ_gB_-Zyq8v-_j8lxPLbsJ02V-_XvufD-MUXISd8sdi2LH-gqJz4UqQHMBaNJm6unabh3Vq__OofyWyKkc65ZtBWfd5RrwY/s940/%25E0%25AE%25A8%25E0%25AE%25BF%25E0%25AE%25A9%25E0%25AF%2588%25E0%25AE%25B5%25E0%25AF%2581%25E0%25AE%2595%25E0%25AE%25B3%25E0%25AF%2588+%25E0%25AE%25A8%25E0%25AE%25BF%25E0%25AE%25B1%25E0%25AF%2581%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AF%2581%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%25B0%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A4+%25E0%25AE%25A4%25E0%25AE%25B0%25E0%25AE%25BE%25E0%25AE%259A%25E0%25AF%2581+%25E0%25AE%2589%25E0%25AE%25A9%25E0%25AF%258D+%25E0%25AE%25AA%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25AE%25E0%25AF%2587+%25E0%25AE%259A%25E0%25AE%25BE%25E0%25AE%25AF%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25BF%25E0%25AE%25B1%25E0%25AE%25A4%25E0%25AF%2581+..png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="788" data-original-width="940" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhl6K8VhADD9nnlrI08-EilymjgLiV_L_IqrqnTO2f4-SOWZ_gB_-Zyq8v-_j8lxPLbsJ02V-_XvufD-MUXISd8sdi2LH-gqJz4UqQHMBaNJm6unabh3Vq__OofyWyKkc65ZtBWfd5RrwY/s320/%25E0%25AE%25A8%25E0%25AE%25BF%25E0%25AE%25A9%25E0%25AF%2588%25E0%25AE%25B5%25E0%25AF%2581%25E0%25AE%2595%25E0%25AE%25B3%25E0%25AF%2588+%25E0%25AE%25A8%25E0%25AE%25BF%25E0%25AE%25B1%25E0%25AF%2581%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AF%2581%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%25B0%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A4+%25E0%25AE%25A4%25E0%25AE%25B0%25E0%25AE%25BE%25E0%25AE%259A%25E0%25AF%2581+%25E0%25AE%2589%25E0%25AE%25A9%25E0%25AF%258D+%25E0%25AE%25AA%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25AE%25E0%25AF%2587+%25E0%25AE%259A%25E0%25AE%25BE%25E0%25AE%25AF%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25BF%25E0%25AE%25B1%25E0%25AE%25A4%25E0%25AF%2581+..png" width="320" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj1PUkShdTcVa-axMMYyT4x7wBgZmRNmRkMfsfJ492seuu3m5s5OB4KRUaAaCUVMo4mT3e6RuBvc8jWnrhdJ7ZEHxbgsMLO0emKzTyLMV0leb4Hph3XAx3iLLc21BdkSXWhBzSxt5JndpM/s940/%25E0%25AE%25A8%25E0%25AE%25A9%25E0%25AE%25BF%25E0%25AE%25A8%25E0%25AE%25A9%25E0%25AF%258D%25E0%25AE%25B1%25E0%25AF%2581.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="788" data-original-width="940" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj1PUkShdTcVa-axMMYyT4x7wBgZmRNmRkMfsfJ492seuu3m5s5OB4KRUaAaCUVMo4mT3e6RuBvc8jWnrhdJ7ZEHxbgsMLO0emKzTyLMV0leb4Hph3XAx3iLLc21BdkSXWhBzSxt5JndpM/s320/%25E0%25AE%25A8%25E0%25AE%25A9%25E0%25AE%25BF%25E0%25AE%25A8%25E0%25AE%25A9%25E0%25AF%258D%25E0%25AE%25B1%25E0%25AF%2581.png" width="320" /></a></div><br /><p><a href="https://www.tronbrook.com/2021/03/facebook-cover-files-indian-social.html">இவற்றையும்தான் முயற்சித்தேன் </a></p><p>சந்திப்போம் </p><p>அன்பன் </p><p>மது </p><p><br /></p>Kasthuri Renganhttp://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5208611175048594293.post-90265775461883483312021-02-25T22:03:00.003+05:302021-02-25T22:06:51.050+05:30மாபெரும் சபைதனில் வீதி 81<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjGNjnpmwzEl8hy2KwEM-42m9Pv2X6zGEqWLWV0Ar0t2Sc5o2HwKfU895vD2-SJcTWFnyDZH2zubdvS7OmF6UgmhYVLEjIpWNAsfWcExueq4bNcPluzjf-1x_QS-eFExXUcZOde0iszXdg/s1600/IMG-20210223-WA0020.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1600" data-original-width="1197" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjGNjnpmwzEl8hy2KwEM-42m9Pv2X6zGEqWLWV0Ar0t2Sc5o2HwKfU895vD2-SJcTWFnyDZH2zubdvS7OmF6UgmhYVLEjIpWNAsfWcExueq4bNcPluzjf-1x_QS-eFExXUcZOde0iszXdg/s320/IMG-20210223-WA0020.jpg" /></a></div><br /><p>கொரோனா பேரலைக்கு பிறகு நேரடியாக நடைபெற்ற முதல் வீதிக் கூட்டம், பெருமகிழ்வு. விழா குறித்தும் வீதி குறித்தும் நீங்கள் அறிய நான் இன்னொரு பதிவை எழுதுகிறேன் இப்போது வீதியில் நான் பேச நினைத்த உரை.... இந்த உரையில் சில வாக்கியங்கள் விடுபட்டுவிட்டன அவையில் பேசும் பொழுது இதோ முழுமையான உரை </p><p>மாபெரும் சைபைதனில் வீதி 81</p><p>வாழ்வென்பது மாயப் புள்ளிகளாலானது.</p><p>புள்ளிகளை இணைக்கும் வளைகோடுகள் வண்ணக் கோலங்களாலாக விரிகின்றன. ஒருவர் பொறியியல் படிப்பில் துவங்கி தமிழ் இலக்கியம் நோக்கி நகர்ந்தார் நமக்கு ஒரு அதிகாரி கிடைத்தார். இன்னொருவர் தமிழ் இலக்கியத்தில் துவங்கி தொழில் நுட்பம் நோக்கி நகர்ந்தார் நமக்கு இன்னொரு அதிகாரி கிடைத்தார். இருவரும் பெருமாள் முருகனின் கூட்டுப் பறவைகள் என்பதும், கூட்டிலிருந்து துவங்கியதுதான் வீதி என்பதும் நமக்கு உணர்த்துவது இதைத்தான். </p><p>ஆக, தமிழ் தம்மை நேசித்தவர்களை உயர்த்தும் மாபெரும் சபையில் அமர்த்தும் என்பதற்கான நல்உதாரணங்கள் இவர்கள். </p><p>ஆம், நண்பர்களே வாழ்வு புள்ளிகளாலானது, அவை இணைகிறபோழுது வண்ணக் கோலங்கள் விரிகின்றன, கூட்டிலிருந்து வீதி, வீதியிலிருந்து கணினித்தமிழ்ச்சங்கம், இந்த அமைப்புகளில் நான்பெற்ற அனுபவங்களின் நீட்சியாக இன்று பசுமை புரட்சியை செய்துகொண்டிருக்கும் வீதியின் பசுமை விழுது விதைக்கலாம் என எத்துணைப் புள்ளிகள் கோலங்கள்!</p><p>கலை மக்களுக்காகவே என்கிற தளத்தில் இயங்கும் வீதி இன்று வந்தடைந்திருக்கும் இந்த மாபெரும் சபையில் உங்களையெல்லாம் சந்தித்ததில் பெருமகிழ்வு. </p><p>வெறும் நூல் விமர்சனம், படைப்பு என்று மட்டும் சுருங்கிவிடாமல், சக மனிதர்களின் துயர் துடைப்பதில் வீதி தனித்துவம் மிக்கது. </p><p>வீதியின் கூட்டங்களில் வெளிச்சமாய் இருந்த வைகறை திடுமென மறைந்த பொழுது அவர் குடும்பத்திற்கு ஐந்து லெட்சம் ரூபாய் திரட்டிக் கொடுத்த தளம் இது. </p><p>கஜா நம் மாவட்டத்தை கிழித்தெறிந்த பொழுது 247கிராமங்களுக்கு சில கோடி மதிப்பில் நிவாரணப் பொருட்களை வழங்கி களம் கண்ட தளமிது. அந்த நிகழ்வில் தங்கள் சேவையை வழங்கிய இளம் தோழர்கள், சமீபத்தில் திருமணமான லெட்சியா, விரைவில் திருமணமாகவிருக்கிற சினேகா இப்போது அவையை தன் குரலால் மகிழ்வித்திருக்கிற சுபா என்கிற பெரும் படையின் சாதனை அது. ஜெரால்ட், யூசுப் என இளம் தன்னார்வலர்கள் அப்படி கஜாவில் துவங்கி விதைக்கலாமில் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். </p><p>கொரோனா பெருந்தொற்று முடக்கிய நாட்களிலும் களத்தில் நின்றது வீதி. </p><p>வீதிக் கூட்டங்களை பெருந்தொற்றுக் காலத்தில் எப்படி நிகழ்த்துவது, முடங்கிவிடுவோமோ என்ற கலக்கதை தவிடுபொடியாக்கி ஜூம் சந்திப்புகள் மூலம் வீதியை உலகமெங்கும் எடுத்துச் சென்று வேறு லெவலில் நிறுத்தியிருக்கும் கவிஞர் கீதா</p><p>வீதியின் எல்லா அசைவுகளுக்கும் பின்புலமாக இருக்கும் அண்ணன் நிலவன், உலகத்தரம்வாய்ந்த விமர்சகர் அண்ணன் ராசி, அய்யா திருப்பதி, கவிஞர் அமிர்தா தமிழ், அன்பு சகோதரி விஜய லெட்சுமி, சங்கத்தமிழ் ஐ.ஏஎஸ் அகடமியின் நிறுவனர்கள் மற்றும் நாளைய ஐ.ஏ.எஸ் அலுவர்கள் அனைவர்க்கும் வணக்கம். </p><p>ஒரு தேர்வறையில் ஆசிரியர் தோளுக்கு பின்னிருந்து எட்டிப்பார்க்க தேர்வை எழுத சிரமப்படும் ஒரு மாணவனின் நிலையில்தான் நான் இப்போது இருக்கிறேன், வீதியின் நிறுவனர் அய்யா அருள்முருகன், அய்யா உதயச்சந்திரன் என இருவரும் இருக்கும் அவையில் பேசுவது சவாலாகவே இருக்கிறது எனக்கு. </p><p>குறிப்பாக நிறுவனர் முத்தொள்ளாயிரம் குறித்து எழுதிய திறனாய்வுக் கட்டுரை ஒரு மைல்கல் கட்டுரை, அவரது பேச்சுக்கு பின்னர் நான் பேசுவது இயலுமா?</p><p>இவர்களெல்லாம் பேசிய ஒரு நூலை இவர்கள் பேசிய பிறகு பேசுவது ?</p><p>நான் பேச விழைந்திருந்த ராஜாமார்த்தாண்டன் அனுபவம் குறித்தும், பாம்படம் ஆட ஜல்லிக்கட்டை ஆண்டாண்டுகாலமாக நடத்திய இடத்திலேயே நடத்தவேண்டும் என்ற பாட்டி குறித்தும் அன்புச் சகோதரி கிரேஸ் பேசிவிட்டார். </p><p>இனி பேச என்ன இருக்கிறது என்று தோன்றலாம், ஆனால் நண்பர்களே </p><p>அளவிற்கு மீறிய வளர்ச்சியில் </p><p>எலி </p><p>பயத்தில் </p><p>பூனை </p><p>என்கிற நான்கு வரிக் கவிதையை ஒரு வலதுசாரி சொன்னால் அது இட ஒதுக்கீட்டுக்கு எதிராகவும், இடதுசாரி சொன்னால் சமூக நீதிக்காகவும் புரிந்து கொள்ளப் படுகிற மாஜிக் இருக்கிறது இல்லையா?</p><p>அதே போல தோழர்களே எனக்கு ஏற்பட்ட ஒரு வாசிப்பு அனுபவத்தை மட்டும் உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். </p><p>ஈரோட்டு விவசாயிகள் குறித்த அந்தக் கட்டுரை, ஒருமுறை ஈரோட்டுக்குச் சென்று அவர்களோடு கரம் குலுக்க தூண்டுகிறது. ஒற்றை நெல் நடவை ஆட்சியர் முன்னெடுத்த பொழுது வெறும் 50 ஹெக்டேரில் நடந்த சோதனையை, கலக்டர் விரும்பினால் 500 ஏக்கருக்கு விரிவடைய செய்யலாம் என்ற அதிகாரிகள் பரிந்துரைக்க, ஆட்சியரோ ஈரோட்டின் விவசாயிகளை குறைத்து மதிப்பிடவேண்டாம் 5000 ஹெக்டேருக்கு திட்டமிடுங்கள் எனப் பணிக்க பயிற்சி துவங்குகிறது. </p><p>இந்த பயிற்சியின் பொழுது ஏற்பட்ட பின்னடைவு புதுமையை விரும்பிய விவசாயிகள் சக விவசாயிகளின் கேலியையும் தாண்டி சங்கடப்பட்ட விஷயம் தங்கள் மனைவிமார்களின் எள்ளல். </p><p><br /></p><p>இதை அறிந்த ஆட்சியர் தன் குழுவை தீர்வுகளை கண்டறியச் சொல்ல ஒரு இளம் அதிகாரி பயிற்சியில் கணவன் மனைவி இருவரையுமே ஈடுபடுத்துவோம் என்று சொல்ல மாற்றம் சாதியப்படுகிறது. </p><p>ஆணும் பெண்ணும் இணைந்தால்தான் சமூக மாற்றங்கள் சாத்தியம் என்பதை சொன்ன அனுபவ பாடம் இது.</p><p>ஒரு நூல் வாசிக்கப்படும் பொழுது நம்மை வியக்க வைக்கும், திகைக்க வைக்கும், சிரிக்க வைக்கும்.</p><p>காலண்டர்களின் கதை சொன்ன அத்தியாத்தில் ராஜா ரவிவர்மா குறித்த தகவல்கள் எனக்கு ஒரு பெரும் அனுபவம். </p><p>ராஜா ரவிவர்மா குறித்து எனக்கு ஒரு தட்டையான புரிதல் உண்டு. அவர் ராஜ வம்சத்தில் பிறந்து, கடவுளர் ஓவியங்களை, இதிகாச ஓவியங்களை வரைந்தவர். </p><p>சுக வாழ்வு வாழ்ந்து, பெரும் கடனோடு மரித்துப் போனவர் என்றவரைதான் என் புரிதல். திருமணத்திற்கு பிறகு இணையர் மேனகையின் ஓவியத்தை காண்பித்து இடப்புறம் மெல்லிருளும் வலப்புறம் வெளிச்சமும் இருப்பதை பாருங்கள் என்று சொன்ன பொழுது ரவிவர்மா குறித்து ஒரு சின்ன மரியாதை மனசுக்குள்.</p><p>கடவுளர் ஓவியங்களை வரையும் ஒரு ஓவியர் என்ற அளவில் ஒருவிதமான காழ்ப்பு அவர்மீது எனக்கு உண்டு. கிட்டத் தட்ட ஒரு குருடன் யானையின் வாலை பிடித்துப் பார்த்துவிட்டு யானை ஒரு விளக்குமாறு போல் இருக்கிறது என்று சொன்னது போல.</p><p>இந்த மனநிலையில் ராஜ ரவிவர்மா குறித்த கட்டுரை, அவரது வாழ்வை சுருக்கமாக அறிமுகம் செய்து, அவர் எப்படி மேற்கத்திய தொழில் நுட்பங்களை உள்வாங்கி தனது ஓவியங்களை சர்வதேச தரத்தில் அச்சிட்டு அயல்நாடுகளுக்கும் அனுப்பி வைத்தார். பிரிட்டிஷ் மக்கள் அவற்றை எப்படி கொண்டாடினார்கள், என்பதையெல்லாம் சொல்லி வரும் பொழுது எனக்கு ஏற்பட்ட புரிதல் திடுக்கிட வைத்தது. </p><p>அருகே இருந்து பார்க்க அனுமதிக்கபடாத கடவுளர்களை லேட்சோப லெட்சம் சாதாரண மனிதர்களின் கரங்களில் தவழ விட்டவர் ராஜா ரவிவர்மா என்கிற செய்தி என்னை ஆட்டிவிட்டது. படித்துவிட்டு பக்கத்தில் இருந்த சோபாவில் ஆனந்த விகடனை போட்டுவிட்டு அழுதேன். </p><p>இதைப் புரிந்துகொள்ள நீங்கள் பெரியாருக்கு முந்தைய தமிழகத்தை உணரவேண்டும். சாமான்ய மனிதர்களை கோபுர தரிசனம் கோடிப் புண்ணியம் என்று சொல்லி கோவில்களுக்குள்ளேயே விட மறுத்த அந்தக் காலகட்டத்தில் ராஜ ரவிவர்மா தனது கலை மூலம் ஒரு பெரும் புரட்சியை அல்லவா ஏற்படுத்தியிருக்கிறார்?</p><p>இந்த நூலை படிக்கும் முன் நான் அறிந்த ராஜா ரவிவர்மாவிற்கும் இப்போது நான் அறிந்திருக்கும் ராஜா ரவிவர்மாவிற்கும் எத்துனை வித்தியாசம்? </p><p>அவர் நான் வெறுத்த ஒரு கலைஞர். இன்றோ அவரே நான் கைதொழும் தலைவர்! </p><p>இந்த நூலைப் படிக்கும் நானே வேறு கஸ்தூரி ரெங்கன் படித்த பின்னர் வேறு கஸ்தூரி ரெங்கன். </p><p>வாசிப்போம் நண்பர்களே, காந்தியார் டால்ஸ்டாயை வாசித்தார் நமக்கு விடுதலை கிடைத்தது, அனைவர் உள்ளங்களிலும் அன்பும் நட்பும் மலர்ந்தது. அவரை கொன்றவர்களும் வாசித்தார்கள். </p><p>நாம் நம்மை காந்தியின் பக்கம் நிறுத்தும் நூற்களை வாசிக்கும் பெருங்கூட்டமாக மாறுவோம். </p><p>அய்யா உதயச் சந்திரன் அவர்களின் இந்த நூல் நம்மை காந்தியின் பக்கம் நிறுத்தும். </p><p>வாய்ப்புக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன் </p><p>வணக்கம். </p>Kasthuri Renganhttp://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-5208611175048594293.post-82117785668024927912020-08-16T22:26:00.001+05:302020-08-16T22:26:12.893+05:30வகுப்பறையில் ஆசிரியர்கள் பகிரவேண்டிய பதிவு -1 must share post classroom worthy <p>முகநூல் நண்பர் Pyaree Priyan அவர்களின் பதிவு </p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhttQfUPPNzXRlQABbRENhvYDvB8MGSmxrJX8ibQvFdftKJJ3ZFmHbvBcvjHa5M_ps9JxCT2uxDQ8USwGB_Xy0j_xM7l19Q4heQyBOoq_nRN9uz_r8B0nHr9SIJIxTImpq27zJMsDF3OeQ/s542/117355380_3268185443264437_1185298078110646346_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="540" data-original-width="542" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhttQfUPPNzXRlQABbRENhvYDvB8MGSmxrJX8ibQvFdftKJJ3ZFmHbvBcvjHa5M_ps9JxCT2uxDQ8USwGB_Xy0j_xM7l19Q4heQyBOoq_nRN9uz_r8B0nHr9SIJIxTImpq27zJMsDF3OeQ/s0/117355380_3268185443264437_1185298078110646346_n.jpg" /></a></div><p><br /></p><p> <a class="_58cn" data-ft="{"type":104,"tn":"*N"}" href="https://www.facebook.com/hashtag/%E0%AE%85%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D?__eep__=6&source=feed_text&epa=HASHTAG" style="color: #385898; cursor: pointer; font-family: inherit; font-size: 14px; text-decoration-line: none;"><span class="_5afx" style="direction: ltr; font-family: inherit; unicode-bidi: isolate;"><span aria-label="hashtag" class="_58cl _5afz" style="color: #365899; font-family: inherit; unicode-bidi: isolate;">#</span><span class="_58cm" style="font-family: inherit;">அயநுட்பம்</span></span></a><span face="" style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px;">..</span></p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 0px 0px 6px;">நாம் இழந்ததில் மிகவும் முக்கியமானதாக கருதப்படும் <a class="_58cn" data-ft="{"type":104,"tn":"*N"}" href="https://www.facebook.com/hashtag/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D?__eep__=6&source=feed_text&epa=HASHTAG" style="color: #385898; cursor: pointer; font-family: inherit; text-decoration-line: none;"><span class="_5afx" style="direction: ltr; font-family: inherit; unicode-bidi: isolate;"><span aria-label="hashtag" class="_58cl _5afz" style="color: #365899; font-family: inherit; unicode-bidi: isolate;">#</span><span class="_58cm" style="font-family: inherit;">இரும்புஉருக்குநுட்பம்</span></span></a> குறித்து.திரு.அண்ணாமலை சுகுமாரன் அவர்களின் பதிவுத்தொகுப்பு...<br />அனைவரும் அறிய...</p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;"><a class="_58cn" data-ft="{"type":104,"tn":"*N"}" href="https://www.facebook.com/hashtag/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?__eep__=6&source=feed_text&epa=HASHTAG" style="color: #385898; cursor: pointer; font-family: inherit; text-decoration-line: none;"><span class="_5afx" style="direction: ltr; font-family: inherit; unicode-bidi: isolate;"><span aria-label="hashtag" class="_58cl _5afz" style="color: #365899; font-family: inherit; unicode-bidi: isolate;">#</span><span class="_58cm" style="font-family: inherit;">வரலாற்றில்_போர்_வாட்கள்</span></span></a>-பகுதி1<br />தொல் தமிழர் வணிகத்தில் சிறந்து விளங்கினர் என்று வரலாறு கூறுகிறது. அவர்கள் வெளிநாடுகளுக்கு வணிகத்துக்கு அனுப்பிய பொருள்கள் எனும்போது மிளகு கிராம்பு போன்ற உணவு மணமூட்டிகள் , சந்தனம், அகில் , மயில்தோகை யானைத்தந்தம் என்று தந்திரமாக வேளாண்மை பொருள்களையே அனுப்பியதாக வரலாற்றுக்குறிப்புகளில் சொல்லுவது வழக்கம் .</p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">ஆனால் தொல் தமிழர்கள் பல பொருள்களின் உற்பத்தித்துறையில் தலை சிறந்து விளங்கினர் , உற்பத்திதுறையில் உலகின் தலை சிறந்து இருந்ததால் தான் பல நாட்டினரும் இங்கேத்தேடி வந்தனர் உற்பத்தியில் சிறந்து விளங்கியவரைதான் இந்தியா செல்வம் மிக்க நாடாக இருந்தது இன்றுவரை பல நாட்டினருக்கு புதிராக இருக்கும் பல தொழில் நுட்பங்கள் தமிழரிடம் பண்டைக்காலத்தில் இருந்து வந்திருக்கிறது .</p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">இப்போது இது எதிர்மறையாக உள்ளது ? இத்தகைய சீர்கேடு எப்படி நிகழ்ந்தது என்பதன் பதில் வரலாற்றை ஆழமாகத் தேடினால் தான் கிடைக்கும் .</p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">நாம் இழந்ததில் முக்கியமானது இரும்பு உருக்கு தொழில் நுட்பம் .</p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">அப்போதைய இந்தியாவின் ( அப்போது இந்தியா 56 நாடுகளாக இருந்தது எங்கும் தமிழர்கள் பரவி வாழ்ந்தனர் இரும்பு தாது கிடைக்கும் இடமெல்லாம் பரவியிருந்தனர்) உற்பத்தி செய்யப்பட்ட போர்வாட்கள் உலகின் பல நாடுகளிலும் போற்றி போட்டிபோட்டு வாங்கப்பட்டிருக்கிறது .<br />நமது வணிகப் பொருள்களில் போர்வாட்கள் முக்கிய பங்கு வகித்திருக்கக் கூடும் என்பதை கிடைத்திருக்கும் சான்றுகளால் அறியலாம்.<br />தென்னிந்திய மக்கள் வாள் வீச்சிலும் அதன் உற்பத்தியிலும் உயர்புகழ் பெற்றுவிளங்கினார் .<br />போரின் போது அணியும் கவசத்தை துளைத்து கொண்டு செல்லும் இரும்பை விட கடிமையான ஒரு தனிப்பட்ட தனிமனால் செய்யப்பட்ட அரிய வாள்கள் நம்நாட்டில் இருந்துள்ளன. அதிலும் அதிச்சிறந்த வாளாக கருதப்படுவது கிமு 300 – 500 காலகட்டத்தில் தமிழகத்தின் தயாரிக்கப்பட்ட வூட்ஸ் எஃகு வாள் எனப்படும் உருக்கு வாள்.</p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgXhq37kLX7JXeCrd3Ag3fRRVlzQCfwkrqfxvfKdQU5CwtgV3PlpiL6kes8ruA3AA2xAVy9qLXinB_1F3RE0_faexT9Cfo32a2fAvEYH0B36Nr_jLW84rSZiKBuQlkRcgxmS4YIaoI4Cpg/s640/117341054_3268233856592929_1497265046358388339_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="640" data-original-width="549" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgXhq37kLX7JXeCrd3Ag3fRRVlzQCfwkrqfxvfKdQU5CwtgV3PlpiL6kes8ruA3AA2xAVy9qLXinB_1F3RE0_faexT9Cfo32a2fAvEYH0B36Nr_jLW84rSZiKBuQlkRcgxmS4YIaoI4Cpg/s0/117341054_3268233856592929_1497265046358388339_n.jpg" /></a></div><p></p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">Wootz Steel எனப்படும் உலையில் உருக்கப்பட்டு தயாரிக்கப்படும் இவ்வகை எக்கு இரும்புகள்(Crucible Steel) கார்பன் அளவை மிக அதிகமாக கொண்டிருக்கும். உயர்வெப்ப உலையில் வைத்து தயாரிக்கும் முறை தமிழகத்தின் அப்போதைய சேர மன்னர்களிடம் இருந்தது. சொல்லப் போனால் உலகிலேயே அவர்களிடம் மட்டுமே அப்போது இருந்தது.</p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">மூன்று உற்பத்தி கட்டங்களைத் தாண்டிய இவை மிக உறுதியானவை அதேநேரம் வளைந்து கொடுக்கும் தன்மை கொண்டவை. நேர்த்தியான வடிவமைப்புடன் கைப்பிடிகள் அழகான வேலைப்பாடுகள் கொண்டதால் பண்டைய காலத்தில் இதன் மதிப்பு அதிகமாக இருந்தது.</p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">புராதன தமிழகத்தின் கொடுமணல் இதன் தயாரிப்பின் மிக முக்கிய பகுதியாகவும் தெலுங்கானாவின் கோல்கொண்டா, கர்நாடகா மற்றும் இலங்கையிலும் தயாரிக்கப்பட்டு சீனா, ஆப்பிரிக்க மற்றும் மத்திய தரைகடல் நாடுகளுக்கு ஏற்றமதி செய்யப்பட்டு இருக்கிறது.</p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhyRAvyTjN0s9rirwmbbnIw786gPD4-undH8LpF_dnn_brjoJXwETfhRh9RwDtbnv-AkZu8xu5xQPUavdsnAqtsNXE68oWl1m3oQbSNtlVvo4Drx3mpA9QTwqRKnjP1if27loScZZguk54/s264/117581872_3268185656597749_4575398716407644748_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="264" data-original-width="191" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhyRAvyTjN0s9rirwmbbnIw786gPD4-undH8LpF_dnn_brjoJXwETfhRh9RwDtbnv-AkZu8xu5xQPUavdsnAqtsNXE68oWl1m3oQbSNtlVvo4Drx3mpA9QTwqRKnjP1if27loScZZguk54/s0/117581872_3268185656597749_4575398716407644748_n.jpg" /></a></div><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;"><br /></p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">அலெக்ஸ்சாண்டரின் இந்திய படையெடுப்பின் போது அவரை வழியனுப்பும் விதமாக தலைசிறந்த எக்கு இரும்பால் தயாரிக்கப்பட்ட தென்னிந்திய வாள்(எடை 15kg) ஒன்று பரிசாக அளிக்கப்பட்டது. உலகில் இதுவரை அறியப்பட்ட இரும்புகளில் மிகவும் மேன்மையானது தென்னிந்திய உருக்கு இரும்புகளே என்கிறது உலக கனிமவியல் தொல் ஆராய்ச்சி.</p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">வூட்ஸ் என்ற சொல் உக்கு என்ற பண்டைய தமிழில் இருந்து பிரிந்த கன்னட சொல் அல்லது உருக்கு என்ற தமிழ் சொல்லில் இருந்து வந்தது. மேலும் சில உள்ளூர் மக்கள் அந்த சொல்லிற்கு உயர் சிறப்பு வாய்ந்தது(Superior Iron) எனும் பொருள் இருந்ததாகவும் சொல்கிறார்கள். டச்சுக்காரர்கள் இந்த கத்தியை இந்துவாணி (Hindwani) என்ற அழைத்தார்கள்.</p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">அதிக அளவில் கப்பல் வழியாக ஏற்றுமதி செய்யப்பட்ட உருக்கு வாள்கள் அன்றைய காலகடத்தில் நடந்த பெர்சியா,இரான், ஐரோப்பிய போர்களில் முக்கிய இடம் வகித்தன. அரபு மொழியில் Jawab-E-hind என அந்த கத்திகளில் பொறிக்கப்பட்டிருந்தது. அதற்கு உலகிற்கு இந்தியாவின் பதில் என பொருள். இறக்குமதி செய்யபட்ட வாளையும் குத்துவாளையும் வைத்திருப்பதை அவர்கள் பெருமிதமாக கருதினார்கள்.</p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">இந்தியாவில் நடந்த பல போர்களில் இவ்வகை வாள் முக்கியத்துவமாக இருந்துள்ளது. திப்பு சுல்தான் வாள் புகழ் பெற்றது .பஞ்சாப் மன்னர்கள் வளையும் தன்மை கொண்ட வாள்களை உற்பத்தி செய்து கொண்டு போனார்களாம். போர்க்கத்தி என்றாலே நினைவுக்கு வரும் சப்பானிய சமுராய் கத்திகளை விட இவை சிறப்புவாய்ந்தவை.. கிலிஜ்(Kilij Swords) எனப்படும் துருக்கிய வாள்கள் உலகின் வலிமையான வாள்கள் பட்டியலில் உள்ளது. இவை வூட்ஸ் இரும்புகளாலே தயாரிக்கப்பட்டவை</p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">பிற்காலத்தில் உருக்கு எக்கு தயாரிக்கும் தொழிற்நுட்பம் மெல்ல அரபு நாடுகளுக்கு பரவியது. கொடுமணம் உள்ளிட பல இடங்களில் இருந்த தயார் செய்யப்பட்ட எக்குகள் மலபார், ஆந்திரா கடற்கரை வழியாக கப்பல் கப்பலாக அரபு தேசங்களுக்கு பயணப்பட்டது. அங்கே டமாஸ்கஸ் என்ற இடத்தில் போர் வாள்கள் தயார் செய்யப்பட்டு உலகமெங்கும் பரவியது.</p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhAyJjHHGKO9eSRFwtX541HJ3tcuA-dWr2QvoYTQd-jHrzntQlWElCy55TF7qjHa0_lBfMWvikccI_K2dog-VGXgfQ1jrgVliKHXZyMEKzq0WfI7ElN9dZkuHZrHUeGxS-meFYlQrw26hc/s544/117543400_3268185609931087_8322326374868268092_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="395" data-original-width="544" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhAyJjHHGKO9eSRFwtX541HJ3tcuA-dWr2QvoYTQd-jHrzntQlWElCy55TF7qjHa0_lBfMWvikccI_K2dog-VGXgfQ1jrgVliKHXZyMEKzq0WfI7ElN9dZkuHZrHUeGxS-meFYlQrw26hc/s0/117543400_3268185609931087_8322326374868268092_n.jpg" /></a></div><p></p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">இந்திய தொழிற்நுட்பத்தை கண்டுகொண்ட சிரியா நாட்டவர் டமாஸ்கஸில் பெரும் சந்தையை உருவாக்கினர். அதனாலே டமாஸ்கஸ் கத்திகள் என உலகம் அதனை அறிந்தவாறு உள்ளது. அப்படித்தான் நமது பல பண்டைய பெருமைகள் பறிபோயின.</p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">16 நூற்றாண்டுகளில் நெதர்லாந்துக்கு மட்டும் 1,50,000 பவுண்ட் உருக்கு இரும்புகள் அனுப்பபட்டன. என்றுகூறப்படுகிறது அரபு நாடுகள் வழி நெப்போலியன் காலத்தில் பிரான்ஸ் சென்றடைந்த உருக்கு இரும்புகள் அங்கு பல்வேறு ஆய்வுக்கு உட்படுத்தபட்டு பல வலிமையான கத்திகள் உருவாக காரணமாக இருந்திருக்கிறது.</p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">பல நூற்றாண்டுகளாக இப்படியொரு வலிமை வாய்ந்த ஆயுதத்தை பற்றி அறிந்திராத ஐரோப்பிய தேசங்கள் அதன் திறன் கண்டு ஆச்சரியமடைந்தனர். டச்சுக்காரர்களுக்கு பின்(1670-1681) இந்தியா வந்த ஆங்கிலேயர்கள் ஆட்சி பொறுப்பு கிடைத்ததும் சக்தி வாய்ந்த இந்த ஆயுதங்களை தமக்குரியதாக மட்டுமே மாற்றிக்கொள்ள ,பிறருக்குக்கிடைக்கக்கூடாது என விழைந்தனர்.</p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது 1851 ஆண்டு நடைபெற்ற லண்டன் கண்காட்சியில்(The Great Exhibition) இடம்பெற்ற இந்திய வாள்கள் தாம். பல இந்திய மன்னர்கள் தங்கள் பேரரசின் அடையாளமாக வூட்ஸ் கத்திகளை ஆங்கிலேயர்களுக்கு பரிசளித்தனர். 1862ம் ஆண்டு அதே லண்டனில் நடைபெற்ற சர்வதேச கண்காட்சியிலும் அரசர்கள் அனுப்பி வைத்த போர்க்கத்திகள் பார்வைக்கு வைக்கப்பட்டன.</p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhASwlJzmbBH1vaC3kDL3-wAeotLjhoA78VgvMnXjbIz5XjqZPTU9CPkE5ChbVOKXqM_awtGPFvydVs0su2xkqHQtt8lSlvmUxdQBnkR5B4R-svZFulGDaq9GrvWnIIo5oZbW-ao5NEclk/s545/117731461_3268185546597760_4356050138529685040_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="320" data-original-width="545" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhASwlJzmbBH1vaC3kDL3-wAeotLjhoA78VgvMnXjbIz5XjqZPTU9CPkE5ChbVOKXqM_awtGPFvydVs0su2xkqHQtt8lSlvmUxdQBnkR5B4R-svZFulGDaq9GrvWnIIo5oZbW-ao5NEclk/s0/117731461_3268185546597760_4356050138529685040_n.jpg" /></a></div><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;"><br /></p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">17-19 நூற்றாண்டு முழுதும் பிரிட்டிஷ் அரசு இதனை ஆய்வு செய்தது. ஆங்கிலேய பேராசை ஆதிக்கத்தின் போது இந்தியாவிலிருந்த அத்தணை உருக்கு ஆலை கூடங்களும் முழுவதுமாக தடை செய்யப்பட்டன. அதன் தொழிற்நுட்பம் முழுவதுமாக வழக்கொழிந்து அழிக்கப்பட்டது என சொல்லப்படுகிறது.</p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">உலகின் பல்வேறு பகுதிகளிலும் வெவ்வேறு காரணமாக இந்த அபூர்வ வாள்கள் புதைந்து போயின. தற்போது உலகில் இரான், துருக்கி, லண்டன் போன்ற ஒரு சில அருங்காட்சியங்கள் தவிர வேறு எங்கும் இத்தகைய அரிய வகை வாள்கள் காண கிடைப்பதில்லை.</p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">Zschokke என்ற ஆராய்ச்சியாளர் கிடைக்கப்பெற்ற பல்வேறு கத்திகளை ஆராய்ந்து இப்பொழுதிருக்கும் கத்திகள் முழுமையான வரைமுறையில் உருவாக்கப்பட்டதில்லை எனவும் Fe3C அணுக்கள் அவற்றில் உருவாவதில்லை என்கிறார். அதாவது சரியான வெப்பநிலை, பதம், தாதுக்கள் சேர்த்து மட்டுமே தயாரிக்கபட்ட இவற்றின் சரியான கலவை அளவீடு இப்போது உயிர்வாழும் யாருக்கும் தெரியாது.</p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">ரகசியமாக பாதுகாக்கப்பட்ட இதன் தொழிற்முறை வம்சவளிக்கு மட்டுமே பகிரப்பட்டது. ஒரு காலகட்டத்தில் அத்தியாவசிய தாதுத்துகள் கிடைக்கபெறாமல் போக இதன் ரகசியம் அடுத்த தலைமுறைக்கு தெரியாமலே அழிந்து போயிருக்கலாம் என எண்ணப்படுகிறது. இந்திய உருக்கு முறையின் அழிவுக்கு ஓரளவிற்கு ஏற்குபடியான காரணமாக இருப்பினும் உண்மை இன்னும் மர்மமாகவே உள்ளது.</p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjgL0XNXWo7a0JoaQ2ZyvITGk6X4ZWdx_Wv2tT57m_AMa58NDLR5dLTn_IqrhaOyH5DgS0L1u6KLUthRhLJCenlK_cLOFxzDY7U2KHiAtdhyphenhyphenZdonZpEhJx16JSl7FI3a2DFUY70sbQBq_s/s602/117802745_3268185726597742_8270095992487109747_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="452" data-original-width="602" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjgL0XNXWo7a0JoaQ2ZyvITGk6X4ZWdx_Wv2tT57m_AMa58NDLR5dLTn_IqrhaOyH5DgS0L1u6KLUthRhLJCenlK_cLOFxzDY7U2KHiAtdhyphenhyphenZdonZpEhJx16JSl7FI3a2DFUY70sbQBq_s/s0/117802745_3268185726597742_8270095992487109747_n.jpg" /></a></div><p></p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">இவை வெறும் போர் ஆயுதமாக மட்டுமில்லாமல் நவீன அறிவியல் வளர்ச்சியிலும் தனிமவியல் கோட்படுகளிலும் பெரும் தாக்கத்தை உண்டாகின. தாதுக்களிருந்து உலோகங்களை பிரித்தெடுக்கும் முறையிலும் பயன்பட்டுள்ளது. பல்கலைக் கழகங்கள் உலோகவியலின் (Metallurgy) இன்றைய ஆராய்ச்சி பயன்பாடுகளில் வூட்ஸ் கத்திகள் பெரும் பங்காற்றியதாக பாராட்டுகின்றன.<br />சாதாரண கார்பன் இரும்போடு ஒப்பிடும் போது 1-2% அதிக கார்பன் வூட்ஸில் இருக்கிறது. ஜெர்மன் அறிவியலார்கள் 1991 ஆம் கிடைக்கபெற்ற கத்தியை ஆராய்ந்து அவை கார்பன் நானோகுழாய்களால்(CNT) உருவாக்கப்பட்டு இருக்கலாம் என தெரிவித்தனர். எனவே 2000 வருங்களுக்கு முன்பே நானோ தொழிற்நுட்பம் பயன்படுத்தியதாக சொல்கிறார்கள்.</p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg3AIXXQC-BSCkzbbG3zoYjzpcH6icAjuAu0VnJYpUo8Y8ksUxK8RtNUUXwooq3zVvCC4H4L1OetHUuc5AwY4x8H1kEdPt84QfDLiFCyPb8IQlyTrpYAeIWfbZHApsBiiY1sRdTwgO38GM/s554/117891457_3268185776597737_3385966955282107944_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="554" data-original-width="480" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg3AIXXQC-BSCkzbbG3zoYjzpcH6icAjuAu0VnJYpUo8Y8ksUxK8RtNUUXwooq3zVvCC4H4L1OetHUuc5AwY4x8H1kEdPt84QfDLiFCyPb8IQlyTrpYAeIWfbZHApsBiiY1sRdTwgO38GM/s0/117891457_3268185776597737_3385966955282107944_n.jpg" /></a></div><p></p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">இன்றைய நவீனத்தால் பல வலிமையான கத்திகள் உருவாக்கப்பட்டாலும் அவற்றின் நிலைப்புத் தன்மை இந்திய உருக்குக்கு நிகராக வருவதில்லை. சில உலோவியலார்களால்(metallurgists) நெருங்கிய போதும் தொன்மைக்கு இணையான அதே கட்டுமான நுட்பத்தில் தென்னிந்திய வாள்களை யாவராலும் இத்தனை நூற்றாண்டுகள் கடந்தும் உருவாக்க முடியவில்லை, ஆராய்ச்சிகள் இன்னமும் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன.</p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">நுண்துளையுள்ள இரும்பை, அதீத வெப்பத்திலிருக்கும் போது அடித்து உருவாக்கப்படும் இத் தொழில்நுட்பம் தமிழர்களால் உருவாக்கப்பட்டது.</p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">இவ்வாறு அடிக்கப்பட்ட இரும்புப்பட்டை, மரத்துண்டுகள் உள்ள, ஒரு களிமண் உறையில் இடப்பட்டு வெப்பப்படுத்தப் படும். அதீத வெப்பத்தினால் மரம் கரியாகி அது இரும்புடன் பிணைப்பை ஏற்படுத்தி எஃகாக மாறும். இதுதான் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் என உறுதியாகக் கூற நம்மிடம் ஆதாரங்கள் இல்லையெனினும், இதனையொத்த அல்லது இதை விட மேம்பட்ட தொழில் நுட்பத்தை தமிழர்கள் பயன்படுத்தியுள்ளனர் என்பது தெளிவாகிறது. காலத்தின் பெருவெள்ளத்தில் இந்த தொழில்நுட்பங்கள் அடித்து செல்லப்பட்டு விட்டன அல்லது வன்முறையால் அழிக்கப்பட்டன .இப்போது அது உண்மையென்று நிரூபிக்க நெருக்கமான ஆதாரங்களை, பெங்களூரு, தேசிய உயர்கல்விக்கான மையத்தின் பேராசிரியர். சாரதா சீனிவாசன் அவர்களின், ஒன்றோடொன்று தொடர்புடைய இரு ஆய்வுக்கட்டுரைகள் முன் வைக்கின்றன.</p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">பேரா. சாரதா உலோகவியல் முக்கியத்துவமுள்ள பல ஆராய்ச்சி கட்டுரைகளை ஏற்கனவே சமர்ப்பித்து உள்ளார்.</p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">நம் பண்டைய தொழில்நுட்பங்களைப் பாதுகாக்க வேண்டியதும், இளம் தலைமுறையினருக்கு நம் பாரம்பரியப் பெருமைகளை உணர்த்த வேண்டியதும் நம் கடமை’’ என்று சொல்லும் சாரதா சீனிவாசனுக்கு, அதுவே அவரின் பணி இயல்பு. பெங்களூரில் உள்ள தேசிய உயர் ஆராய்ச்சி அமைப்பில் (National Institute Of Advanced Studies) துறைத் தலைவராகப் பணிபுரியும் பேராசிரியர் சாரதா, உலோகவியலில் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்த 60-க்கும் அதிமுக்கியமான ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியவர். 2011-ம் ஆண்டுக்கான ‘கல்பனா சாவ்லா’ விருது உட்பட பல விருதுகளைப் பெற்றவர். உலோகவியல் துறையில் பல புதிய ஆராய்ச்சிப் படிப்புகளை உருவாக்கி மாணவர் களுக்கு வழிகாட்டி வருகிறார். சாரதாவை பேட்டி கண்டு விகடனில் வெளியிட்டிருக்கிறார்கள் .</p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">பண்டைய தமிழர்களின் ஆயுத உலோக ஆராய்ச்சியில் தன்னை வியக்கவைத்த தரவுகளைப் பற்றிப் பேசினார். திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் உள்ள ஆதிச்ச நல்லூர் என்ற இடத்தில் தொல்லியல் துறையினர் அகழ்வாய்வு செய்தபோது பல சான்றுகள் கிடைத்தன. அவற்றை நானும் ஆய்வு செய்தேன். சர்வதேச அளவில் ஆய்வாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் உலோகம், உருக்கு. தமிழ் மன்னர்கள் போரில் பயன்படுத்திய வாள், இந்த உலோகத்தினால் தயாரிக்கப் பட்டது. ஆறாம் நூற்றாண்டில் இந்த உலோகம் தமிழகத்தில் புழக்கத்தில் இருந்திருப்பதை ஆராய்ச்சிகளால் நிரூபிக்கப்பட்டுள்ளது. எந்த வித அதி நவீன தொழில்நுட்பமும் இல்லாத பண்டைய தமிழகத்தில், கொல்லர்கள் போரில் பயன்படுத்தக்கூடிய ஓர் உலோகத்தை உருவாக்கியது இன்றளவும் உலோகவியல் ஆய்வாளர்களை வியப்பில் ஆழ்த்தும் விஷயம்.<br />வளையாத, உறுதியான, துருப்பிடிக்காத ஓர் ஆயுதத்தைத் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், பலகட்ட தோல்விகளுக்குப் பின் தமிழகக் கொல்லர்கள் உருக்கு உலோகத்தைக் கண்டுபிடித்திருக்க வேண்டும். உலக நாடுகள் எதிலும் புழக்கத்தில் இருந்திராத உலோகத்தை உருவாக்கி, ஆயுதங்களைத் தயாரித்து உலகுக்கே வழிகாட்டியிருக்கிறார்கள், பண்டைய தமிழகக் கொல்லர்கள்’’ என்று தன் ஆய்வு குறித்து ஆர்வமாகப் பேசும் சாரதா, நம் பிள்ளைகளுக்கு, தமிழராகப் பிறந்ததன் பெருமையைச் சொல்லி வளருங்கள்” என்று வேண்டுகோள் விடுக்கிறார்.<br />~~~~~~~~~~~~~~~~~~~~<br /><a class="_58cn" data-ft="{"type":104,"tn":"*N"}" href="https://www.facebook.com/hashtag/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?__eep__=6&source=feed_text&epa=HASHTAG" style="color: #385898; cursor: pointer; font-family: inherit; text-decoration-line: none;"><span class="_5afx" style="direction: ltr; font-family: inherit; unicode-bidi: isolate;"><span aria-label="hashtag" class="_58cl _5afz" style="color: #365899; font-family: inherit; unicode-bidi: isolate;">#</span><span class="_58cm" style="font-family: inherit;">வரலாற்றில்_போர்_வாட்கள்</span></span></a> -பகுதி 2</p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">பண்டைய தமிழர்களின் கடல் வணிகத்தை மூன்று பெரும் காலகட்டமாக பிரிக்கலாம்.</p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">முதல் காலகட்டம் என்பது கி.மு. 3000ம் முதல் கி.மு. 700 வரையான, வரலாற்றுக்கு முந்தைய காலகட்டம்.</p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">இரண்டாம் காலகட்டம் என்பது வரலாற்றுத் தொடக்கத்துக்கு சற்று முந்தைய கி.மு. 700 முதல், சங்க காலத்தின் இறுதிக்கட்ட காலமான கி.பி. 300 வரையான 1000 ஆண்டுகள்.</p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">மூன்றாவது காலகட்டம் என்பது சங்க காலத்திற்கு பிந்தைய காலமான கி.பி. 300 முதல், பிற்கால பாண்டியர்களின் இறுதிக் காலமான கி.பி. 1300 வரையான 1000 ஆண்டுகள்.<br />அதற்குப்பிறகு நமது தமிழர்களின் வணிகம் என்பது முகமதியர் ஆதிக்கம் ,அயல்நாட்டவர் ஆதிக்கம் ,நாயக்கர் ஆதிக்கம் ,மராட்டியர் ஆதிக்கம் என பல்வேறு ஆதிக்க சக்திகளின் கீழ் சிக்கி சீரழிந்தது .பல்வேறு அரிய தொழில் நுட்பங்களை நமது தொல் தமிழர்மூலம் வழிவழியாக வந்தது இந்தகாலகட்டத்தில் தான் அழிவுற்றது .</p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">நமது வரலாறு என்பது சங்ககாலத்தை எல்லையாக கொண்டு கட்டமைக்கப்பட்டு விட்டது . தமிழர்களின் உண்மையான சிறப்புகள் அதற்கு முந்தியவை .அதிகம் உண்டு</p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">ஏனோ சொல்லும் போதெல்லாம் சங்ககாலத்தை தமிழர் வரலாற்றின் எல்லையாக குறிப்பிடுகிறோம் அவ்வாறே சிந்துவெளியும் நமது வரலாற்றின் எல்லை அல்ல .சங்க இலக்கியங்கள் என்பது அந்த காலகட்டத்திற்கு முன் 1000 ஆண்டுகள் தமிழர் வாழ்ந்த விதத்தை விவரிக்கும் பல ஆயிரம் பாடல்களில் குறிப்பிட்ட சில மட்டும் தொகுக்கப்பட்டது ஆகும். இன்னமும் முழுமையாக ஆழமாக செல்லவேண்டும்.</p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">இதற்க்கு தக்க ஆதாரங்களைத் திரட்டவேண்டும் .முதல் காலகட்டம் என்பது கி.மு. 3000ம் முதல் கி.மு. 700 வரையான, வரலாற்றுக்கு முந்தைய காலகட்டம். இந்தக்காலத்திய பண்டைய எகிப்து ,மெசபடோமியா சுமேரிய ரோம் மற்ற பண்டைய நாகரீகங்களுடன் தமிழர் தொடர்பு இருப்பது தெரிகிறது ஆனால் நமது பக்க தரவுகள் இன்னமும் வேண்டும் .</p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">அப்போது நமதுதொல் தமிழர்களால் தயாரிக்கப்பட்ட மிக நேர்த்தியான வாட்கள் உலகம் எங்கும் வியந்து நோக்கப்பட்டது போட்டி போட்டுக்கொண்டு வாங்கப்பட்டன .</p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">உலக நாகரிகங்களில் இரும்புப் பண்பாடு என்பது மனித இனப் பரிணாம வளர்ச்சிப் படிநிலைகளில், புதிய கற்காலத்துக்குப் பிறகு செம்பு உலோகப் பண்பாட்டுக்கும், வெண்கல உலோகப் பண்பாட்டுக்கும் அடுத்து மூன்றாவதாக உருவானப் பண்பாடாகும்.</p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">ஆனால், இரும்புக் காலத்துக்கு தென்னிந்தியா நுழைந்தது என்பது உலகலாவிய தனித்துவமிக்க ஒரு பண்பாட்டு வளர்ச்சி நிகழ்வாக உள்ளது</p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">தென்னிந்தியாவில் புதுக் கற்காலத்தின் இறுதிக்கட்டத்தில் இரும்பு தோன்றிவிட்டது என்று ஒரு பொதுவான கருத்து முன்வைக்கப்படுகிறது. பெருங் கற்படைப் பண்பாட்டுச் சுவடுகள் வெளித்தெரியத் தொடங்கிய கி மு 1500 அளவிலான காலகட்டக் புதுக் கற்காலத்தின் இறுதிக்காலம் என்று ஒரு பொது வரையறையை அடையலாம்.</p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">ஐரோப்பாவில் இரும்புத் தொழில் தொடங்குவதற்கு வெகு முன்பே தென்னிந்தியாவில் இரும்புத் தொழில்நுட்பம் செய்யப்பட்டு வந்ததாக அறிஞர்கள்.கருதுகின்றனர்;</p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">கற்கால மக்கள் பெரிதும் குன்றுகளிலும், மலைச்சரிவுகளிலும், வளமிக்க செறிந்த காடுகளின் ஓரங்களிலும் வாழ்ந்தனர்;</p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">இரும்பினைக் கண்டறிந்த பிறகே, ஆதி மனிதர் காட்டினைத் தம்முடைய வாழிடமாகக் கொண்டு இருக்கலாம் என்று எண்ணுவதே பொருத்தமாகக் தோன்றுகிறது;</p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">இரும்புக் கருவிக்கால நாகரிகமே, குன்றுகளில் வாழ்ந்த மக்களைக் காடுகளில் சென்று வாழுமாறு தூண்டியது;</p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">மிகப் பழைய காலம் முதலே இரும்பைப் பயன்படுத்தி வருவதற்குரிய தடயங்கள் இந்தியாவில் கிடைத்து உள்ளன.</p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">மேலும், துருப்பிடிக்காத வகையில் இரும்பைச் செய்யும் சிறப்புமிக்க ஒரு முறையையும் அவர்கள் அறிந்திருந்தனர்” என்று தென்னிந்தியாவில் இரும்புக் காலம் தோன்றியது குறித்து உலோகத் தொழில் கலையியல் வல்லுநர் போராசிரியர் கெளலாந்து குறிப்பிடுவது கவனிக்கத் தக்கதாக உள்ளது</p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">உயர்தர இரும்பு செய்ய உயர்தர இரும்புத்தாது தேவை .மாக்னடைட், ஹேமடைட், லிமோனைட், சிட்ரைட் ஆகிய நான்கு வகை இரும்புத் தாதுக்களில் இருந்து இரும்பு கிடைக்கிறது.</p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">இவற்றுள், மாக்னடைட் தாதுவில் இருந்துதான் மிக அதிக சதவீத இரும்பு கிடைக்கிறது.<br />இது இயற்கையாகவே நல்ல கருப்பு நிறம் கொண்டதாகும். ஹேமடைட் வகை தாதுவிலும் இரும்பு நிறைய இருக்கிறது. இது இயற்கையாக சிவப்பு நிறம் கொண்ட தாதுவாகும். லிமோனைட் தாது மற்ற தாதுக்களைவிட குறைவான இரும்பையும், பழுப்பு நிறத்தையும் கொண்டது.</p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">சிட்ரைட், மஞ்சள் நிறம் கொண்ட இரும்புத் தாதுவாகும்.மாக்னடைட் தாது அதிக வெப்பம் தாங்கிக் கற்களையும், சாணைக் கற்களையும் செய்ய பயன்படுத்தப் படுகிறது. இத்தாதுவைக் கொண்டு, பல்வேறு துறையினர் பல்வேறு பயன்பாட்டைக் கொண்ட பொருட்களைத் தயாரிக்கின்றனர். இதுவே தேனிரும்பு என்று தமிழில் அழைக்கப்படுகிறது</p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">தமிழ்நாட்டில், முதல்தரமான மாக்னடைட் இரும்புத் தாதுக்கள் சேலம் அருகே அமைந்துள்ள கஞ்சமலை, கோதுமலை, தருமபுரி மாவட்டத்தில் அரூர் வட்டத்தில் அமைந்துள்ள தீர்த்தமலை, நாமக்கல் மாவட்டத்து கொல்லைமலை, திருச்சி மாவட்டத்து பச்சமலை ஆகிய பகுதிகளில் மிகுதியாகக் கிடைக்கின்றன. இங்கு கிடைக்கும் இரும்புத் தாதுக்கள் உலகிலேயே சிறந்தவை என்பதால், உலகளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலையை அடுத்து அமைந்துள்ள வேதியப்பன் மலைக் குன்றுப் பகுதிகளில் கிடைக்கும் இரும்பும், தருமபுரி மாவட்ட தீர்த்தமலை இரும்புத்தாதுவும் படிவுப் படுகைகளாகக் கிடைக்கின்றன,</p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">இரும்பு உருக்கும் தொழிலுக்கு இன்றியமையாத துணைப்பொருளான சுண்ணாம்புக்கல்லும் இன்றைய சேலம், தருமபுரி, நாமக்கல் மாவட்டப் பகுதிகளில் பெருமளவு கிடைக்கிறது. இது, இப்பகுதிகளில் இரும்பு உருக்கும் தொழில் தொன்மையான காலத்தில் இருந்தே மேற்கொள்ளப்பட்டு இருக்க வேண்டும் என்ற கருத்துக்கு வலுகூட்டுவதாக உள்ளது.</p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">கஞ்சமலைப் பாறைகளின் வயது ஏறத்தாழ 450 கோடி ஆண்டுகள் பழைமை வாய்ந்தது என ஆய்வின் மூலம் அறியப்பட்டுள்ளது.</p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">கஞ்சமலை, கோதுமலை, தீர்த்தமலை, கொல்லிமலை, பச்சமலை ஆகியவை அமைந்துள்ள நில அமைப்பானது கவனிக்கத்தக்க ஒன்றாகும். இம்மலைகள் கிழக்குத் தொடர்ச்சி மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகளும் சந்திக்கும் புள்ளியில், பெரும்பான்மையாக இரு மலைத்தொடர்களின் தொடர்பு அற்றும், ஒன்றுக்கொன்றும் தொடர்பற்ற தனித்தனி குன்றுகளாகவும், சிறிதே இரு மலைத்தொடர்களின் அறுபட்ட தொடர்பைக் கொண்டும் இருப்பதைக் காணலாம். இதனாலேயே, எண்ணிக்கை மிகுதியான சிறுசிறுபள்ளத்தாக்குகளால் நிரம்பியதாக இப்பகுதி காட்சி அளிக்கிறது.</p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">மேற்குறிப்பிட்ட இடங்களன்றி, தமிழகம் முழுவதும் பரவலாக இரும்புத்தாது கிடைத்து உள்ளதை, கொடுமணல், ஆதிச்சநல்லூர், இன்றைய கிருஷ்ணகிரி மாவட்டத்து குட்டூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட அகழாய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன.</p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">பொதுவில், இரும்புத் தாதுக்கள் பூமிக்கடியிலும், மலைக் குன்றுகளிலும் கிடைத்தாலும், இரும்பை நேரடியாக எடுத்துவிட முடியாது. ஏனெனில், இரும்புத் தாதுக்களில் இரும்பைத் தனிமைப்படுத்தி எடுக்க அதிக அளவு வெப்பம் தேவைப்படும்.</p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">அதனால், அந்த வெப்பத்தை உண்டாக்கக்கூடிய எரிபொருள் மரமாகவோ, நிலக்கரியாகவோ, வேறு எந்தப் பொருளாகவோ இருக்கலாம்.</p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">இந்த எரிபொருள் பெரும்பாலும் இரும்புத்தாதுக்கள் கிடைக்கும் இடத்தின் பக்கத்திலேயே இருந்திக்க வேண்டும். ஏனெனில், எரிபொருளை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்குக் கொண்டு செல்வதில் நடைமுறைச் சிக்கல் இருப்பதால், இரும்புத் தாதுக்கள் கிடைக்கும் இடத்துக்கு அண்மையிலேயே கிடைக்கும் எரிபொருளையே பண்டைக் காலத்தில் மக்கள் பயன்படுத்தியிருக்க வேண்டும்.</p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">ஒருபுறம் பெரிய தொழிற்சாலைகள் அமைத்து இரும்பு உருக்கும் தொழில் நடைபெற்றது போலவே, ஆங்காங்கே அடர்காடுகளின் நடுவேகூட சிறு உருக்கு உலைகள் மூலம் இரும்பை உருக்குவது குடிசைத்தொழிலாக செய்யப்பட்டு வந்ததை தருமபுரி, பென்னாகரம், கிருஷ்ணகிரி, ஒசூர், மேட்டூர் வட்டங்களில் ஆங்காங்கே காணக் கிடைக்கும் இரும்பு உருக்கிய கசடுகளின் எச்சங்களில் இருந்து அறிய முடிகிறது.<br />பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளில்கூட, இவ்வாறு சிறுசிறு அளவில் நடைபெற்று வந்ததைக் கண்ணுற்று புச்சனன் என்ற ஆய்வாளர் விவரித்துள்ளார். ஆனால் இவை அனைத்தும் நம்மை ஆண்ட ஆங்கிலேயர் ஆட்சியில் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டது .</p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">கி மு 450-ல், க்டேசியஸ் (Ktesias) புராதன இந்தியா எனும் நூலின் தமது குறிப்பில், பெர்சிய அரசனுக்கு இந்திய உருக்கு வாள்கள் ப்ரியமாக பரிசளிக்கப்பட்ட விவரத்தையும், தென்னிந்தியர்கள் கி மு 5-ம் நூற்றாண்டிலேயே உருக்குத் தொழிலில் சிறந்து காணப்பட்டதாகவும் குறிப்பிடுகிறார்</p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">வார்மிங்டன் எனும் வரலாற்றாளரும் இதே கருத்தை, “இந்தியாவிலுள்ள எஃகில் இருந்து நல்ல உறுதிவாய்ந்த வாள்கள் செய்யப்பட்டன என்றும், அவை க்டேசியஸ் காலத்தில் பெரும்புகழுடன் விளங்கின என்றும், இந்தக்கால கட்டத்தில் இந்தியாவிலுள்ள இரும்பு மற்றும் எஃகு, எகிப்து நாட்டு வாணிபத்தில் சிறப்பிடம் பெற்றிருந்தது” என்றும் குறிப்பிடுகிறார்.</p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">மு.பொ.ஆ. 300 அளவில் ஆப்பிரிக்கா, கிரேக்கம் மற்றும் கிழக்கித்திய நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து இரும்பு ஏற்றுமதி செய்யப்பட்டது என குறிப்பிட்டுள்ளார்ர் கே.என்.பி. ராவ்.என்னும் ஆய்வாளர் .</p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">பேரரசன் அலெக்சாந்தர் உலக வரலாற்றில் பெரும் வெற்றிகளைப் பெற்ற இராணுவத் தலைவர்களில் ஒருவராகப் போற்றப்படுகிறார். இவர் ஈடுபட்ட எந்தப் போரிலும் தோல்வியடைந்ததில்லை எனவும் சொல்லப்படுகிறது. ஆனால் பஞ்சாப் பகுதியை ஆண்டு வந்த இந்திய மன்னன் போரஸை போராடி வென்றார். அதுவரை யானைப்படையையே பார்த்திராத அலெக்ஸாண்டரின் படைகள் முதல் முறையாக யானைப்படையை போரஸின் படையில் பார்த்ததில் பிரமித்து பயந்து முதல்முறையாக பின்னோக்கி அடியெடுத்து வைத்தனர். ஹைடஸ்பேஸ்-ஸில் கி.மு.326-ல் நடந்த இந்த போர்களில் ஆச்சர்யம் அடைந்த அலெக்ஸாண்டர் மன்னர் போரஸின் வீரத்தை கண்டு பிரமித்து போரஸிடம் நட்பு பாராட்டினார். அவருக்கு போரஸ் @ புருஷோத்தமன் ஒரு சிறந்த எஃகு வாளை ப்ரியமாக கொடையாகக் கொடுத்தார் என்றுக் கூறப்படுகிறது .</p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">கி மு .327-ல், கிரேக்க மன்னன் அலெக்சாண்டர் இந்தியா மீது படையெடுத்து வந்தபோது, புருஷோத்தமன் (புருஸ்) சேலம் பகுதியில், அதாவது கஞ்சமலையில் வெட்டியெடுக்கப்பட்ட 38 பவுண்டு எஃகையே கொடையாகக் கொடுத்தான் என்று அறியமுடிகிறது. இது குறித்து, புகழ்பெற்ற உலோகவியலாளர் ஹீத், குயிண்டஸ் கர்டியஸ் (Quintus Curtius) வியந்து தெரிவிப்பதை எடுத்துக் காட்டுகிறார். அது - “உலகையே வெற்றிகொண்ட மகா அலெக்சாண்டருக்கு போரஸ் (புருஷோத்தமன்) நாட்டின் (இந்தியா) மீது படையெடுத்தபோது, அந்நாட்டு அரசன் 30 பவுண்டு 16 எடையுள்ள இந்திய எஃகை பரிசாக வழங்கியதாகவும், அந்த எஃகு பரிசாகப் பெற்றுக்கொள்ளும் அளவுக்கு மதிப்புமிக்கதாக விளங்கியது என்பதையும் நாம் நம்புவதற்கு கடினமாக உள்ளது”. மிகவும் தொன்மையான காலத்தில் இருந்தே தென்இந்தியாவின்<br />மலபார் கடற்கரைக்கும், பெர்சிய வளைகுடாவுக்கும் சிந்துவெளிக்கும், செங்கடலுக்கும் இடையே நல்ல வணிகத்தொடர்பு இருந்தது ஆகையால், தென்னிந்தியாவின் எஃகு வட இந்தியாவைச் சேர்ந்த போரஸ் நாட்டின் வழியாக ஐரோப்பிய மற்றும் எகிப்து நாடுகளுக்குச் சென்றது என முடிவு செய்வதற்கு தக்க காரணங்கள் உள்ளது எனலாம் என்கிறார் .</p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">அவர் மேலும் குறிப்பிடுகையில், புகழ்பெற்ற “டெமாஸ்கஸ் வாள்”கள் செய்ய இந்திய இரும்பு அனுப்பப்பட்டது என்று பல சான்றுகள் மூலம் நிறுவுகிறார்.</p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">சர் ஜார்ஜ் பெர்டுவுட் குறிப்பிடும்போது, “இந்திய எஃகானது மிகவும் பழமையான காலத்தின் தொடக்கநிலையிலேயே வெகுவாகப் போற்றப்பட்டது; மேலும், டெலிடொ வாள்கள் (Toledo blades)பிற்காலத்தில் போற்றப்பட்டபோதும், இந்திய எஃகு கொண்டு செய்யப்பட்ட டெமாஸ்கஸ் வாள் தன்னுடைய முந்தைய தலைமை இடத்தை தக்க வைத்துக் கொண்டு இருந்தது.</p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">1875-ம் ஆண்டு, சர் ஜான் ஹிக்ஷா (Sir John Hicksha), என்பவர் தனது ஜனாதிபதி உரையில் குறிப்பிடும்போது, “நான்காம் ஐந்தாம் நூற்றாண்டுகளின் துவக்கத்தில் இந்தியாவிலிருந்து இரும்பின் ஏற்றுமதி எல்லை அற்றதாக இருந்தது. இந்தியா, மேற்கு உலகின் முந்தைய நாகரிகச் சமூகங்களில் இருந்து எந்தவகையில் பயன் அடைந்திருந்தாலும், மேற்கு உலகுக்கு இரும்பையும் எஃகையும் வழங்கியதன் மூலம், அதற்கு மிகச் சிறந்த கைமாற்றை செய்திருக்கிறது”.</p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">அவர் மேலும் குறிப்பிடும்போது, “பண்டைய எகிப்தின் கருங்கல் தூண்களை செய்யப் பயன்படும் மிக உறுதியான துளைப்புக் கருவிகள் (drills) இந்திய இரும்பு கொண்டு செய்யப்பட்டவை. மேலும், முதலில் பெர்சியர்களும், பின்னர் அரேபியர்களும் இந்தியாவிடம் இருந்தே இரும்பை உறுதியாகும் எஃகுத் தொழில்நுட்பத்தை அறிந்தனர்; இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக இருப்பது, இடைக்கால வரலாற்றில் புகழ்பெற்ற <a class="_58cn" data-ft="{"type":104,"tn":"*N"}" href="https://www.facebook.com/hashtag/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?__eep__=6&source=feed_text&epa=HASHTAG" style="color: #385898; cursor: pointer; font-family: inherit; text-decoration-line: none;"><span class="_5afx" style="direction: ltr; font-family: inherit; unicode-bidi: isolate;"><span aria-label="hashtag" class="_58cl _5afz" style="color: #365899; font-family: inherit; unicode-bidi: isolate;">#</span><span class="_58cm" style="font-family: inherit;">டெமாஸ்கஸ்_வாள்கள்</span></span></a> ஆகும்.” என்கிறார் .</p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">ரோஸ்ஸி மற்றும் ஸ்கொலெம்மர், தங்களின் புகழ்பெற்ற “வேதியியல் ஆய்வுகள்” நூலில், “இரும்பு இந்தியாவின் தாதுக்களில் இருந்து முதலில் பெறப்பட்டது எனத் தோன்றுகிறது எனக் குறிப்பிடுகின்றனர்”. இங்கு இந்தியா எனக் குறிப்பிட்டாலும், அது பண்டையத் தமிழகமான தென்னிந்தியாவைக் குறிக்கும் என்பதை நினைவில் கொள்வோம்.<br />~~~~~~~~~~~~~~~~~~~<br />இந்தியாவின் 18 ஆம் நூற்றாண்டின் ஆசியாவின் முதல் இரும்பு ஆலைப் பற்றியும் சித்தர்கள் இரும்பை வைத்து செய்த வித்தைகளைப்பற்றியும்..</p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;"><a class="_58cn" data-ft="{"type":104,"tn":"*N"}" href="https://www.facebook.com/hashtag/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?__eep__=6&source=feed_text&epa=HASHTAG" style="color: #385898; cursor: pointer; font-family: inherit; text-decoration-line: none;"><span class="_5afx" style="direction: ltr; font-family: inherit; unicode-bidi: isolate;"><span aria-label="hashtag" class="_58cl _5afz" style="color: #365899; font-family: inherit; unicode-bidi: isolate;">#</span><span class="_58cm" style="font-family: inherit;">வரலாற்றில்_போர்_வாட்கள்</span></span></a> -பகுதி 3</p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">பொன்முடியார் எனும் சங்ககாலப்பெண்புலவர்,<br />“ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே<br />சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே<br />வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே<br />நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே<br />ஒளிறு வாள் அருஞ்சமம் முருக்கி களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே” – (புறம்: 312)<br />எனப் புறநானூற்றில் கூறியுள்ளார்.</p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">இதில் வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே என்று கொல்லர்களை சிறப்பிக்கிறார். .பிறகு அங்கே வடிக்கப்பட்ட வாளைக்கொண்டு அதாவது ஒளிறு வாள் கொண்டு , யானையே வெல்லும் காளையர் வீரம் பற்றி சிறப்பிக்கிறார் .</p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">சமுதாயத்தில் வேலும், வாளும் செய்யும் கொல்லர் இன்றும் அதேபெயரில் கொல்லர் என்று 2000 ஆண்டுகள் கழித்தும் வழங்குவது தமிழின் சிறப்பு .</p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">தென்னிந்தியாவில் செய்யப்பட்ட போர்வாட்களுக்கு உலகெங்கும் பெரும் வரவேற்பு இருந்தது. எகிப்தில் பிரமிடுகள் கட்டும் போது அங்கு பாறைகளை வடிக்க தென்னிந்திய உளி முதலிய கருவிகள் பயன்பட்டதாகக் கூறப்படுகிறது .</p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">தொல்தமிழகத்தின் வெளி நாடுகளுக்கான ஏற்றுமதியில் போர்வாட்களுக்கு சிறப்பான இடம் இருந்திருக்கக்கூடும் .</p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">ஒவ்வொரு குடியிருப்பு கிராமங்களிலும் பலவித தொழில் நிபுணர்கள் இடம் பெற்றிருந்தனர் .அவர்களில் கொல்லர்களின் முக்கியப்பணியாக மன்னர்களின் படைகளுக்கு வேண்டிய போர்க் கருவிகள் தொடர்ந்துசெய்தல் இருந்து இருக்கிறது .</p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">அதேசமயம் அத்தகைய கொல்லர்களுக்கு வேண்டிய எஃகிரும்பு தனியே அடர்ந்த காடுகளின் நடுவே இரும்புதாதுக்களும் , அவைகளை உருக்கத்தேவையான எரிபொருளாக மரங்களும் கிடைக்கும் இடங்களில் அமைந்திருந்தன .</p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">அவர்கள் இத்தகையை இரும்புத்தாதுக்களை உருக்கவும் நுண்ணிய தரம் வாய்ந்த இரும்பாக மாற்ற சில மூலிகைகளையும் அப்போது ப்ரியமாக பயன்படுத்தி இருக்கின்றனர் .</p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">19 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருந்த ஒருஆய்வு கட்டுரையில் அந்த மூலிகை ஆவாரம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது .<br />இதை பயன்படுத்திப் பார்க்கவேண்டும்<br />.<br />அத்தகைய உயர்வெப்பம் கிடைக்க சில தனி வகை மரங்களும் அறிந்திருக்கக் கூடும் .இத்தகைய தொழில் நுட்பங்கள் இப்போது மறைந்துவிட்டது .</p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">நம்மை ஆண்டு கொண்டு இருந்த ஆங்கிலேயர்கள் இங்கிருக்கும் தொழில் நுட்பம் ,தாது இவைகளை தாங்கள் மட்டுமே பயன்படுத்தி இலாபமடைய அவர்களும் இத்தகைய தொழில் நுட்பங்களை அழிக்க துணைபோயினர் .</p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">தொழில்புரட்சி காரணமாக ஐரோப்பியாவிலும் பல்வேறு தொழில்கள் பெருகின . அவர்கள் அப்போது நிலக்கரி பயன்படுத்த அறிந்திருந்தனர். இந்தியர்களுக்கு அப்போது நிலக்கரி என்பது அறிந்து இருக்கவில்லை .</p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">இந்தியாவில் உருக்கிரும்பு செய்தால் 40% செலவு மிச்சம் ஆகும் என்று இந்தியாவில் இரும்பு தயாரிக்க எண்ணினர் அதற்கு ஆசியாவிலேயே முதலில் அமையவிருந்த இரும்பு தாதுவை உருக்கும் ஆலை அமைந்த இடம் தமிழ் நாட்டில் இருந்த <a class="_58cn" data-ft="{"type":104,"tn":"*N"}" href="https://www.facebook.com/hashtag/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88?__eep__=6&source=feed_text&epa=HASHTAG" style="color: #385898; cursor: pointer; font-family: inherit; text-decoration-line: none;"><span class="_5afx" style="direction: ltr; font-family: inherit; unicode-bidi: isolate;"><span aria-label="hashtag" class="_58cl _5afz" style="color: #365899; font-family: inherit; unicode-bidi: isolate;">#</span><span class="_58cm" style="font-family: inherit;">பரங்கிப்பேட்டை</span></span></a> தான். இதில் இருந்தே இரும்பு உருவாக்கத்தில் தமிழ்நாடு பெற்றிருந்த முக்கியத்துவத்தை உணரலாம் .</p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">கடலூரிலிருந்து 35கி.மீ. தூரத்தில் கடற்கரையில் அமைந்துள்ள பரங்கிப்பேட்டை முன்பு "போர்டோ நோவோ' என்று அழைக்கப்பட்டது! இங்கு போர்ச்சுகீசியர், டச்சுக்காரர்கள், பிரிட்டிஷார் என அடுத்தடுத்து அங்கே ஆதிக்கம் செலுத்தினர். மேலும் இங்குதான் மைசூர் மன்னருக்கும் பிரிட்டிஷ்காரர்களுக்கும் இடையே போர் நடந்தது.<br />பல நதிகள் கடலில் சங்கமிக்கும் கழிமுகப் பகுதியான இம்மாவட்டத்தினை தென்பெண்ணையாறு, கெடிலம், வெள்ளாறு, மணிமுத்தாறு, கொள்ளிடம் ஆகிய நதிகள் கடந்து செல்கின்றன.</p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">இவ்வூர் முகமதியர் காலத்தில் மஹ்மூதுபந்தர், எனவும் போர்ச்சுகீசியர், காலத்தில் போர்டோநோவோ (புதிய துறைமுக நகரம்) மற்றும் நாயக்கர் காலத்தில் முத்து கிருஷ்ணபுரி என்றும் அறியப்பட்டிருக்கிறது</p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">வங்காள வளைகுடா கடலோரத்தில் அமைந்துள்ள இவ்வூர் போர்ச்சுகீசியர்கள் மற்றும் பிரிட்டிசாரால் காலனி ஆதிக்கத்தில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இது முக்கிய கப்பல் துறைமுகமாகவும் விளங்கியது.</p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">ஆசியாவின் முதல் இரும்பு தொழிற்சாலை இங்கு நிறுவப்பட்டிருந்தது.</p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">1830 இல் ஆசியாவின் முதல் பெரிய அளவிலான இரும்பு ஊருக்கு ஆலை பரங்கிப்பேட்டையில் கிழக்கிந்திய நிறுவனத்தில் முதலில் வேலை செய்த திரு ஹீத்( JOSHUA MARSHALL HEATH )என்பவரால் வெள்ளாறு கடலில் சேரும் முகத்துவாரத்தில் அருகே ஆரம்பிக்கப்பட்டது.</p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">ஆரம்பத்தில் POTONOVO IRON WORKS எனும் பெயரில் இரும்பு ஆலை நடத்தப்பட்டது. பிறகு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் கிழக்கிந்திய கம்பனியில் இருந்து வாங்கிய கடனால் The Indian Iron and Steel Company என்று பெயர் மாற்றம் பெற்றது .</p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">பின்பு தொடர்ந்து நீடித்த நெருக்கடியால் கிழக்கிந்திய கம்பெனியால் எடுக்கப்பட்டு The East India Iron Company’என்று பெயர் மாற்றம் பெற்று சில ஆண்டுகள் கழித்து 1874 இல் நிரந்தரமாக மூடப்பட்டது .</p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">ஆனால் இதில் உற்பத்தி செய்யப்பட்ட இரும்புகள் அதன் தரத்தால் உலகெங்கும் பயன்படுத்தப்பட்டது .<br />இன்றும் <a class="_58cn" data-ft="{"type":104,"tn":"*N"}" href="https://www.facebook.com/hashtag/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D?__eep__=6&source=feed_text&epa=HASHTAG" style="color: #385898; cursor: pointer; font-family: inherit; text-decoration-line: none;"><span class="_5afx" style="direction: ltr; font-family: inherit; unicode-bidi: isolate;"><span aria-label="hashtag" class="_58cl _5afz" style="color: #365899; font-family: inherit; unicode-bidi: isolate;">#</span><span class="_58cm" style="font-family: inherit;">எழும்பூர்</span></span></a> ரயில் நிலையத்தில் அதன் இரும்புத் தூண்களில் Made in Porto Novo'. என்ற பொறிப்பைக்காணலாம் என்று கூறப்படுகிறது .</p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">மேலும் பறங்கிப்பேட்டையில் தயாரிக்கப்பட்ட இரும்பு, அதன் தரத்தின் காரணமாக இங்கிலாந்தில் உள்ள BRITAANICA TUBULAR மற்றும் STAIN STRAIT BRIDGE ஆகியவற்றில்<br />பயன்படுத்தப்பட்டது-</p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">மும்பையில் உள்ள Bandra ரயில் நிலையத்தில் பயன் படுத்தப்பட்டது என்று S.B. JOSHI எனும் ஆய்வாளர் “HISTORY OF METAL FOUNDING ON INDIAN SUBCONTINENT SINCE ANCIENT TIMES” (pp97)தனது எனும் நூலில் குறிப்பிடுகிறார்.</p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">இத்தகைய உயர்தர இரும்பு உருக்கு சேலத்திற்கு அருகில் இருக்கும் கஞ்சமலை எனும் மலையில் சுற்றி உதிரியாகக் குவிந்திருந்த தாதுக்களில் இருந்து பெறப்பட்டது .<br />கஞ்சமலை என்பது சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு மலை ஆகும். இந்த மலை சித்தர்கள் அதிகம்<br />வாழ்ந்த பகுதியாகக் கருதப்படுகிறது. மலையின் உச்சியில் மேல்சித்தர் கோயில், கரியபெருமாள் கோயில் ஆகியன உள்ளன. சித்தர் கோயிலின் அருகில் ஒரு நீரோடை ஓடுகிறது.</p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">இந்த மலையில் காளங்கிநாதர் என்ற சித்தர் வாழ்ந்தார் என்பதற்கான குறிப்பு திருமூலர் திருமந்திரத்தில் உள்ளது. மலையின் தென்பகுதியில் சடையாண்டி ஊற்று உள்ளது. மேல்சித்தர் கோயில் அருகில் ஒரு ஊற்றும் நீரோடையும் நல்லணம்பட்டி அடிவாரத்தில் உள்ளது. இந்த மலையில் சடையாண்டி சித்தர் வாழ்ந்ததற்கான அடையாளம் காணப்படுகிறது.மேலும் சித்தர் கோவில்,வற்றாத நீருற்றைக் கொண்டுள்ளது.</p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">இந்த மலையில் இரும்புத்தாது அதிகம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இம்மலையில் மூன்று அடுக்குகளாக இரும்புத்தாதுகள் உள்ளன. இவை நல்ல தரம் வாய்ந்தவை.</p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">சுமார் 5 ஆண்டுகளுக்கு முன் நான் கஞ்சமலை சென்று அங்கே இருக்கும் நீர்நிலையில் குளித்து சித்தரை வழிபட்டதுண்டு ..</p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">நான் சில நாட்களாக கஞ்சமலையைப் பற்றியும் சித்தர் காலாங்கி நாதர் பற்றியும் படித்து வந்தபோது ,சென்னை மறைமலை நகரில் வசிக்கும் திரு சரவணன் என்பவரும் எனோ சித்தர் காலாங்கி நாதர்க்குறித்து கஞ்சமலைக் குறித்து சில ஐயங்களை எழுப்பினார் . அப்போதுதான் இவைகளைக்குறித்து சிந்தித்திருக்கும் போது இவரும் காலாங்கி நாதர் பற்றி கேட்டது எனக்கு வியப்பாகவே இருந்தது .சித்தர்களின் ஆளுமை உலகில் பரவும் காலம் விரைவில் வரும் .</p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">கஞ்ச மலையைச் சுற்றி சிதறிக் கிடக்கும் float ore எனும் உதிரித் தாதுதான் அள்ளிச் செல்லப்பட்டு இருக்கிறது. அதுவே பல லட்சம் டன்கள் இருக்கும். புதியதாகத் தாது வெட்டி எடுத்ததாகத் தெரியவில்லை.</p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">கிட்டத்தட்ட இருநூறு ஆண்டுகளுக்கு முன், சாலை வசதி இல்லை, ரயில் வசதி இல்லை. சுமார் இருநூறு கி.மீ. தூரம். கனமான இரும்புத் தாதுவை சேலத்தில் இருந்து பரங்கிப்பேட்டைக்கு எப்படிக் கொண்டு சென்று இருப்பார்கள் ?<br />இப்போது வியப்பாக இருக்கலாம்</p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">ஆனால் அப்போது காவேரி-கொள்ளிடம்- வெள்ளாறு வழியே பரிசல்களில் கொண்டு சென்று இருக்கிறார்கள். அப்போது “வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரி” யில் ஆண்டில் ஆறு மாதம் தண்ணீர் ஓடிக் கொண்டு இருந்திருக்கிறது அப்போது கர்நாடகாவில் கே.ஆர். சாகர், கபினி அணை , இங்கே மேட்டூர் எதுவும் இல்லை</p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">ஆனி முதல் மார்கழி-தை வரை தண்ணீர் ஓடியிருக்கும். சுமார் முந்நூறு கி.மீ. கஞ்சமலை இரும்புத் தாது. காவிரியில் மிதந்து வந்திருக்கிறது,</p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">இது ஆங்கிலேயருக்கு சாத்தியம் ஆகி இருந்திருக்கிறது .<br />சேலத்தை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள இரும்புத்தாதுவின் அளவு சுமார் 75 மில்லியன் டன்கள். மலையைச் சுற்றியும் கீழே விழுந்த தாதுதான் இதுவரை எடுக்கப்பட்டுள்ளது.</p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">1960களில் இந்தத் தாது சேலத்திலிருந்து ரயில் மூலம் கடலூர் துறைமுகம் சென்று அங்கிருந்து ஜப்பான் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.</p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">சேலத்தில் தற்போது செயல்படுவது இரும்பு உருக்காலை அல்ல;இரும்பு உருட்டாலை. இங்கே எந்தக் கனிமமும் உருக்கப்படுவது இல்லை. மாறாக ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தகடுகள் தயாரிக்கப்பட்டு அனுப்பப்படுகின்றன.<br />(இந்தத்தகவல்களைப்பற்றி மறைந்து விட்ட நண்பர் சிங்கநெஞ்சம் சம்பந்தம். அவரது வலைதளத்தில் எழுதி இருக்கிறார்)</p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">இவைகளை அறியும் போது என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ! என்றுதான் ஏங்கத்தோன்றுகிறது. நம்மிடம் கிராமங்களில் இருந்த கொல்லர்கள் இரும்பை பயன்படுத்தி வேளாண்மை ,மற்றும் போர்க்கருவிகளான வேல் ,வாள் இவைகளை செய்து குவித்தனர்.</p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">அடர்ந்த காடுகளில் உள்ளே இரும்புத்தாதுக்கள் கிடைக்கும் , அவைகளை உருக்க எரிபொருளாக தனித்துவமான மரங்கள் மூலிகைகள் அங்கே கிடைக்கும் அத்தனைப்பகுதிகளுக்கும் சென்று ஆங்காங்கே சிறிய அளவில் இரும்பு உருக்கி தொழில் செய்தவர்கள் உயர்தரஇரும்பைத் தந்தவர்கள் எப்படி மறைந்து போனார்கள் ,?<br />எப்படி அழித்து ஒழிக்கப்பட்டார்கள் என்ற சோக வரலாறு இன்னமும் உண்டு.</p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">இது ஒரு புறம் என்றால் நமது பண்டைய சித்த மருத்துவர்கள் இரும்பை உண்ணும் மருந்தாகச் செய்து அற்புதங்கள் செய்திருக்கிறார்கள் .</p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">உடம்பு இரும்பு போல் இருக்கிறது என்றுகூறுவார்கள்<br />நமது வைத்தியர்கள். இரும்பையே எளியமுறையில் உண்ணத்தக்க மருந்தாக மாற்றிருந்திருக்கிறார்கள் .</p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">அயபற்பம் எத்தகைய நோயையும் தீர்க்கும் என்று அறியப்பட்டுள்ளது .இன்னம் அயசெண்தூரம் ,அய வெள்ளை என எத்தனையோ அற்புத மருந்துகள் இன்னமும் கிடைக்கிறது .</p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">இவைகளின் செய்முறைகளில் அதிக வெப்பம் தேவைப்படாமல், சில எளிய மூலிகைகளைப் பயன்படுத்தியே இரும்பின் தன்மையை மாற்றி இருந்திருக்கிறார்கள்<br />.<br />இத்தகைய மருத்துவ தயாரிப்பில் விழுதி இலை , பொற்றிலைகையான் , புளிப்பு, மாதுளை இன்னமும் நிறைய மூலிகைகள் பயன்படுத்தி இத்தகைய அற்புதங்களை சாதித்திருக்கிறார்கள் .</p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">பெரிய அளவில் இரும்பை உருக்க ஆவாரம் பயன்படுத்தப்பட்டு இருப்பதை இன்னமும் நாம் மறைத்து வைத்திருந்து பயனில்லை .</p><p style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">இத்தகைய தொழில் நுட்பம் நம்மிடம் இருந்து பறிபோவதற்கு முன் அல்லது மறக்கடிக்கப்படுவதற்குமுன் , இவைகளைப்பற்றி எழுதி அவைகள் நம்முடையவை என்று உலகிற்கு அறிவிக்கும் கடமை தமிழருக்கு உண்டு.</p><p style="background-color: white; color: #1d2129; display: inline; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px 0px;">படம் பரங்கிப்பேட்டையில் 1830 செயல்பட்ட ஆசியாவின் முதல் இரும்பு உருக்காலை<br />படம் அலெக்சாண்டருக்கு போரஸ் @ புருஷோத்தமன் அளித்த வாள் குறித்த ஓவியம்<br />படம்: ராணா ப்ரதாப் அவர்களின் போர்வாள். இதன் எடை 50 கிலோ.!<br />படம்: திப்பு சுல்தான் போர்வாள்<br /><a class="_58cn" data-ft="{"type":104,"tn":"*N"}" href="https://www.facebook.com/hashtag/%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D?__eep__=6&source=feed_text&epa=HASHTAG" style="color: #385898; cursor: pointer; font-family: inherit; text-decoration-line: none;"><span class="_5afx" style="direction: ltr; font-family: inherit; unicode-bidi: isolate;"><span aria-label="hashtag" class="_58cl _5afz" style="color: #365899; font-family: inherit; unicode-bidi: isolate;">#</span><span class="_58cm" style="font-family: inherit;">ப்யாரீப்ரியன்</span></span></a>..<br /><a href="https://www.facebook.com/pyareeman143/posts/3268185906597724" style="color: #385898; cursor: pointer; font-family: inherit; text-decoration-line: none;">https://m.facebook.com/story.php?story_fbid=3268185906597724&id=100002190405617</a></p>Kasthuri Renganhttp://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-5208611175048594293.post-91088611212682151562020-08-16T21:58:00.002+05:302020-08-16T21:58:41.741+05:30 கோவிட் - பொருளாதாரம் கடந்த காலமும் - எதிர் காலமும் covid the future from the past <p><br /></p><p style="background-color: white; color: #1c1e21; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">நல்லாட்சி தந்ததற்காக தண்டிக்கப்பட்ட அரசியல்வாதி உண்டென்றால் அதிலும் கலைஞர் வருகிறார்.</p><p style="background-color: white; color: #1c1e21; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">1996-2001 ஆட்சியில் அவர் செய்த சாதனைகள் அதிகம்.</p><div class="text_exposed_show" style="background-color: white; color: #1c1e21; display: inline; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px;"><p style="font-family: inherit; margin: 0px 0px 6px;">ஆனால் பொதுமக்கள் வேறு மாதிரி பேசினார்கள்.</p><p style="font-family: inherit; margin: 6px 0px;">அந்த அம்மா ஆட்சியில் இருந்துச்சு எல்லார் பையிலும் முழு ஐநூறு ரூவாத்தாள் இருந்துச்சு</p><p style="font-family: inherit; margin: 6px 0px;">ஆனா பாருங்க இன்னைக்கு சீட்டு கூட நடத்த முடியவில்லை, போலிஸ் கெடுபிடி இருக்கு என்று ஆட்சியை மாற்றி அம்மாவை உட்கார வைத்தார்கள்.</p><p style="font-family: inherit; margin: 6px 0px;">உண்மையில் அவை உலக பொருளாதார மந்த நிலை நிலவிய நாட்கள்.</p><p style="font-family: inherit; margin: 6px 0px;">இந்தியர்களின் தனித்த சேமிப்பு பழக்கங்களினால் நாடு துவம்சமாகாமல் தப்பியது.</p><p style="font-family: inherit; margin: 6px 0px;">ஆனால் பல்வேறு நாடுகளில், குறிப்பாக கிழக்காசிய நாடுகளில் நடந்ததே வேறு.</p><p style="font-family: inherit; margin: 6px 0px;"><br /></p><p style="font-family: inherit; margin: 6px 0px;">மெர்சிடிஸ் பென்ஸ் காரில் சென்றவர்கள் ஒரே இரவில் ரோட்டில் நூடுல்ஸ் விற்று பிழைக்கவேண்டியதாயிற்று.</p><p style="font-family: inherit; margin: 6px 0px;"><br /></p><p style="font-family: inherit; margin: 6px 0px;">கிட்டத்தட்ட இரு தசாப்தங்களுக்கு பிறகு நம் முன் பின் அனுபவித்திராத கோவிட் பொருளாதார மந்தம் வந்துவிட்டது.</p><p style="font-family: inherit; margin: 6px 0px;"><br /></p><p style="font-family: inherit; margin: 6px 0px;">அன்றய இந்தியர்கள் சிறுசேமிப்பு பழக்கம் உள்ளவர்கள், ஆனால் நாம் கிரடிட் கார்டு அடிமைகள், எத்துனை வங்கிக் கடன் உண்டோ அத்துணையும் வாங்கி குவிப்பவர்களாக மாறியிருக்கிறோம்.</p><p style="font-family: inherit; margin: 6px 0px;"><br /></p><p style="font-family: inherit; margin: 6px 0px;">இந்த நிலையில் அமெரிக்காவின் பெரு நிறுவனங்கள் தொடர்ந்து திவால் அறிக்கைகளை வெளியிட்டுவருகின்றன.</p><p style="font-family: inherit; margin: 6px 0px;"><br /></p><p style="font-family: inherit; margin: 6px 0px;">அமெரிக்க வரலாற்றின் மறக்கமுடியாத பொருளாதார மந்தநிலை "கிரேட் டிப்ரெசன்" எனப்படுகிறது. 1929 முதல் 1933 வரை அமரிக்கர்கள் அடைந்த துயருக்கு அளவே இல்லை.</p><p style="font-family: inherit; margin: 6px 0px;"><br /></p><p style="font-family: inherit; margin: 6px 0px;">இன்று அமெரிக்காவில் இருக்கும் நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர்கள் மீண்டும் ஒரு மந்தநிலை வரவிருக்கிறது என்று கலக்கமூட்டும் அறிக்கையை வெளியிடுகிறார்கள்.</p><p style="font-family: inherit; margin: 6px 0px;"><br /></p><p style="font-family: inherit; margin: 6px 0px;">இந்தியா டாக்டர் மன்மோகன் சிங் இருந்த போதே தள்ளாடியது. இந்த சங்கி மங்கிகள் என்ன செய்துவிட முடியும்?</p><p style="font-family: inherit; margin: 6px 0px;"><br /></p><p style="font-family: inherit; margin: 6px 0px;">என்ன இன்னொரு பொருளாதார அறிஞர் நம் நாட்டை பற்றி சொல்வது கொஞ்சம் ஆறுதல்</p><p style="font-family: inherit; margin: 6px 0px;"><br /></p><p style="font-family: inherit; margin: 6px 0px;">"நீங்கள் என்னவேண்டுமானாலும் கணிக்கலாம் ஆனால் அவற்றை இந்தியா பொய்யாக்கும்" அது மீண்டெழும். இந்தியாவை குறித்து நீங்கள் எதிர்மறையாக முடிவெடுத்துவிட முடியாது"</p><p style="font-family: inherit; margin: 6px 0px;"><br /></p><p style="font-family: inherit; margin: 6px 0px;">இந்த நம்பிக்கை வரிகள்தான் இப்போதைய என் கலங்கரை விளக்கம்.</p><p style="font-family: inherit; margin: 6px 0px;"><br /></p><p style="font-family: inherit; margin: 6px 0px;">இனி வரும் காலங்களில் செல்வத்தை குவிப்பதைவிட அதை பகிர்ந்துகொள்வது நல்லது என்கிற புரிதலை கொடுக்கும் அனுபவங்கள் வரவிருக்கின்றன என்று அனுமானிக்கிறேன்.</p><p style="font-family: inherit; margin: 6px 0px;"><br /></p><p style="font-family: inherit; margin: 6px 0px;">தொடர்வோம் </p><p style="font-family: inherit; margin: 6px 0px;">அனபன் </p><p style="font-family: inherit; margin: 6px 0px;">மது </p></div>Kasthuri Renganhttp://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5208611175048594293.post-79724046266805202902020-08-16T21:49:00.004+05:302020-08-16T21:50:25.826+05:30அண்ணன் முத்துசாமி ஒரு நினைவு <p>15/08/2020 </p><p><br /></p><p><span style="background-color: white; color: #1c1e21; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px;">இரண்டு நாட்களாக நிலைகொள்ளாமல் அலைகிறது மனம்.</span></p><div><span style="background-color: white; color: #1c1e21; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px;"><br /></span></div><p><span style="background-color: white; color: #1c1e21; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px;">மேஜர் டோனர் ரோட்டரியன் முத்துசாமி அவர்களின் மறைவு இன்னும் ஏற்றுக் கொள்ள முடியாத விசயமாக இருக்கிறது</span></p><p style="background-color: white; color: #1c1e21; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin: 6px 0px;">முதலில் இளம் கதிர்தான் இந்தத்தகவலை எனக்குச் சொன்னான்.</p><div class="text_exposed_show" style="background-color: white; color: #1c1e21; display: inline; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px;"><p style="font-family: inherit; margin: 0px 0px 6px;">நான் நம்ப இயலாது திரு.பெல் அவர்களுக்கு அழைத்து கேட்டேன்.</p><p style="font-family: inherit; margin: 6px 0px;">உண்மைதான் என்றார்.</p><p style="font-family: inherit; margin: 6px 0px;">அண்ணன் தங்கம் மூர்த்தியின் கட்செவி இற்றையை இணையர் என்னிடம் காட்ட நீண்ட பெருமூச்சு.</p><p style="font-family: inherit; margin: 6px 0px;">முத்துசாமி அவர்களின் புன்னகை இல்லாத முகத்தை நினைவில்கூட கொணர இயலவில்லை.</p><p style="font-family: inherit; margin: 6px 0px;">இன்று காலை பள்ளி வளாகத்தில் கொடியேற்றிய சில நிமிடங்களில் நண்பர்கள் அதிர்ச்சியோடு இந்த விசயங்களை பேச, நான் வளாகத்தில் உயர்ந்து நிற்கும் சில மரங்களை காட்டி இவை அவர் வைத்தவை என்றேன்.</p><p style="font-family: inherit; margin: 6px 0px;">பெண்குழந்தைகளுக்கான கழிவறை ஒன்றை பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கம் நிறுவி, பயன்பாட்டுக்கு வழங்கியபொழுது நட்ட மரக்கன்றுகள் அவை.</p><p style="font-family: inherit; margin: 6px 0px;">ஏனைய ரோட்டரி பிரமுகர்கள் வருவதற்குள்ளாகவே தானே ஒரு மண்வெட்டியை எடுத்து குழிகளை அகழ்ந்து நிகழ்வில் அர்பணிப்போடு செயல்படத் துவங்கினார்.</p><p style="font-family: inherit; margin: 6px 0px;">மண்வெட்டி பிடித்து குழி அகழும் ஒரு ரோட்டரியனை பார்த்த அதிர்ச்சியிலிருந்தேன் நான்.</p><p style="font-family: inherit; margin: 6px 0px;">மெல்ல நிகழ்வு முடிந்து உரையாடச் சந்தர்ப்பம் கிடைத்த பொழுது இதுகுறித்து எப்படிண்ணே என்றேன்.</p><p style="font-family: inherit; margin: 6px 0px;">அதுனால என்ன நம்ம நிகழ்வு நம்ம பள்ளி என்றார் இயல்பாக.</p><p style="font-family: inherit; margin: 6px 0px;">சூழ்ந்து நின்றுகொண்டிருக்கும் ரோட்டரி ஆளுமைகளுக்கு நடுவே அண்ணன் முத்துசாமி மண்ணில் முழங்காலிட்டு குழிகள் அகழ்ந்த அந்த நிகழ்வு ஒரு சித்திரம் போல இன்னும் மனதில் அழியாமல் இருக்கிறது.</p><p style="font-family: inherit; margin: 6px 0px;">கோவிட் இப்படி ஒரு நல்ல மனிதரின் உயிர்குடிக்கும் என்று நினைத்துப் பார்த்தது கூட இல்லை.</p><p style="font-family: inherit; margin: 6px 0px;">நிகழ்ந்துவிட்டது</p><p style="font-family: inherit; margin: 6px 0px;">எங்கள் பகுதியின் சிவா இவரெல்லாம் சாவாரா என்று அதிர்ச்சி விலகாமல் கேட்கிறார்.</p><p style="font-family: inherit; margin: 6px 0px;">புதுகையின் அத்துணை முக்கியமான இடங்களிலும் அண்ணன் சிரித்தவாக்கில் ப்ளக்சில் இருக்கிறார்.</p><p style="font-family: inherit; margin: 6px 0px;">அவர் என்னவோ வழக்கம் போல் மகிழ்வாகத்தான் சிரிக்கிறார்.</p><p style="font-family: inherit; margin: 6px 0px;">நமக்குத்தான் கண்ணீர் முட்டுகிறது. தலையை வெண்டி வேறுபக்கம் திருப்பிக் கொள்ள வேண்டியிருக்கிறது.</p><p style="font-family: inherit; margin: 6px 0px;">தடுப்பு மருந்து வரும்வரை நம் மரணம் தள்ளிப்போடப்பட்ட மரணம் தான் என்று தோன்றுகிறது.</p><p style="font-family: inherit; margin: 6px 0px;"><br /></p><p style="font-family: inherit; margin: 6px 0px;"><br /></p></div>Kasthuri Renganhttp://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5208611175048594293.post-34853501400793583902020-08-07T22:22:00.000+05:302020-08-07T22:22:23.715+05:30கே எல் ஆர் தி போட்டோ குரு KLR THE PHOTO GURU<div>உலகில் கூகிளுக்கு பிறகான மிகப்பெரிய தேடு பொறி யூ டயூப் என்பது பழைய செய்தி. </div><div><br /></div><div>அடியேன் நீண்ட நாட்களாக எக்செல் மற்றும் புதிய ஹாலிவுட் ட்ரைலர்களை பார்க்க மட்டுமே யூ டியூபை பயன்படுத்தி வந்தேன். </div><div><br /></div><div>இந்த லாக்டவுன் துவக்கத்தில் வேளாண் காணொளிகள், தொழில் முனைவு காணொளிகள் என பார்க்கத் துவங்கினேன்.</div><div><br /></div><div><br /></div><div>அடுத்து எனது நீண்டநாள் விருப்பமான போட்டோகிராபி குறித்து பார்க்கத் துவங்கினேன். ஆங்கிலத்தில் பல அருமையான சானல்கள் இருக்கின்றன.</div><div><br /></div><div><br /></div><div class="separator" style="clear: both;"><iframe allowfullscreen="" class="BLOG_video_class" height="266" src="https://www.youtube.com/embed/6XX970WbG68" width="320" youtube-src-id="6XX970WbG68"></iframe></div><div><br /></div><div><div>ஆனால் தமிழில் ? </div><div><br /></div><div>போட்டோகிராபி குறித்து அறிய விரும்பும் இளம் தலைமுறைக்கு யூ டியூப் காணொளிகள் ஒரு பெரும் உந்துதல்.</div><div><br /></div><div>எதேச்சையாக பார்த்த காணோளிகளில் எல்.ஆர் தி போட்டோ குரு எனும் சானல் செமையாக இருந்தது.</div><div><br /></div><div>நான் கே.எல்.ராஜா பொன்சிங், என்று இவர் கணீர் குரலில், அசாத்தியமான சரளத்தோடு, தமிழில் புகைப்படக் கலையின் நுட்பங்களை சொல்லும் பாங்கு அசாத்தியம்.</div></div><div><br /></div><div>தொழில்முறை ரகசியங்களை இவ்வளவு வெளிப்படையாக வாரி வழங்கும் இவர் ஆம்பிசன்4 எனும் புகைப்பட பயிற்சியையும் நடத்திவருகிறார். பல்லாயிரம்பேருக்கு பயிற்சியளித்திருக்கிறார்.</div><div><br /></div><div>ஒரு பின்னரவில் இவரது காணோளிகளின் தொழில் நுட்ப அடர்வைக் கண்டு, இவரது கம்பீரத் தமிழ் கண்டு ஒரு வாட்சப் தகவலை அனுப்பி வைத்தேன். </div><div><br /></div><div>பிறகு ஒரு சின்ன உரையாடல் அலைபேசிவழியே. </div><div><br /></div><div>அசத்தல் மனிதர்.</div><div><br /></div><div>யூ டியூப் இன்றய சூழலில் விளைவித்திருக்கும் அறிவுப் புரட்சி அசாதரமானது. </div><div><br /></div><div>இவரது சானலை புகைப்படக் கலையின் நுட்பங்களை தெரிந்து கொள்ள விரும்பும் நண்பர்கள் தவிர்க்கவே கூடாது.</div><div><br /></div><div>ஒரு பெல்லை அடித்துவையுங்கள்,</div><div><br /></div><div>அன்பன்</div><div>மது </div><div><br /></div>Kasthuri Renganhttp://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-5208611175048594293.post-5626688184112922972020-07-19T16:07:00.002+05:302020-07-19T16:09:44.686+05:30டுவல்வ் ஆங்கிரி மென் <br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiI0KV0UKNExF6JA-P0Jv97KBxTtC8BAwbJS1ztD7QGQjnH0Ullzu7vVlHZNUjexjVQQ7J99JM8FodzbbBuF-dvYch04137_7i3Vt9q1Yh06YOcKdSkS90K8NR_SEyAgqQ-eZ4YgKass-s/s1198/784px-12_Angry_Men_%25281957_film_poster%2529.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1198" data-original-width="784" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiI0KV0UKNExF6JA-P0Jv97KBxTtC8BAwbJS1ztD7QGQjnH0Ullzu7vVlHZNUjexjVQQ7J99JM8FodzbbBuF-dvYch04137_7i3Vt9q1Yh06YOcKdSkS90K8NR_SEyAgqQ-eZ4YgKass-s/s320/784px-12_Angry_Men_%25281957_film_poster%2529.jpg" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: justify;">ஆங்கிலப் படங்கள் என்றால் துப்பாக்கி சண்டைகள், ஜேம்ஸ் பாண்ட் பாணி கிளுகிளு காட்சிகள் என்பதே எண்பதுகளின் பி மற்றும் சி ஆடியன்ஸ் மைன்ட் செட். (மைனாரிட்டிகள் மன்னிக்க).</div><div class="separator" style="clear: both; text-align: center;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: justify;">இன்றுவரை மலையாளப் படங்கள் என்றால் ஏற இறங்க பார்க்கும் மக்களும் உண்டு. ஏன் இதுகுறித்து ஒருமுறை மம்மூட்டியிடம் கேட்ட பொழுது அவை தமிழர்களுக்காக தயாரிக்கப்படுபவை என்றார்! (இந்த பேட்டிகொடுத்த சில ஆண்டுகளுக்கு பின்னர் கேரள திரையுலகே திரண்டு ஷகீலா படங்களை தடைசெய்க என்று விழுந்துபுரண்டு அம்மணியை கேரளாவை விட்டு வெளியேற்றியது வேறு கதை!, நினைத்துப் பார்த்தால் சிரிப்பாக இருக்கிறது).</div><div class="separator" style="clear: both; text-align: center;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: justify;">உண்மையில் பலதரப்பட்ட கழிவுகளுக்கு இடையே மிக அற்புதமான திரைப்படங்கள் எல்லா மொழிகளிலுமே இருக்கின்றன. தொழில் நுட்பத்திலும், பொருளாதாரத்திலும் மிகவும் முன்னேறியிருந்த அமெரிக்க திரையுலகம் எல்லா பிரிவுகளிலும் உயர்தரப் படங்களை தந்துவந்திருக்கிறது.</div><div class="separator" style="clear: both; text-align: justify;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: justify;">கோர்ட் தொடர்பான படங்கள், யுத்தம், குடும்ப உறவுகள், நகைச்சுவை, என அத்துணை பிரிவுகளிலும் உன்னதமான படைப்புகள் விரவிக் கிடக்கின்றன அமரிக்க திரை வரலாற்றில். </div><div class="separator" style="clear: both; text-align: justify;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: justify;">அப்படிப்பட்ட அற்புதம் ஒன்றை லாக்டவுன் காரணமாக பார்க்க நேர்ந்தது. </div><div class="separator" style="clear: both; text-align: justify;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: justify;">ஒரு முழுநீளத் திரைப்படத்தை ஒரே அறைக்குள், உரையாடல்களை மட்டுமே வைத்துக் கொண்டு நகர்த்த முடியுமா? அதுவும் பார்வையாளர்களை ஆகர்சிக்கும் விதத்தில் செய்ய முடியுமா? வெறும் உரையாடல்கள், ஒரு வெற்றிப் படத்தைக் கொடுக்குமா? குறிப்பாக வசூலில் தூள் கிளப்ப முடியுமா?</div><div class="separator" style="clear: both; text-align: justify;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: justify;">இதற்கெல்லாம் பதில் ட்வெல்வ் ஆங்கிரி மென்தான்!</div><div class="separator" style="clear: both; text-align: justify;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: justify;">இயக்குனர் சிட்னி லூமெட்டின் இந்த படைப்பு இன்றுவரை கொண்டாடப்படும் வெகு சில கிளாசிக் படங்களில் ஒன்று. </div><div class="separator" style="clear: both; text-align: justify;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: justify;">ஜூரி முறைப்படி தீர்ப்பு வழங்கப்படும் அமெரிக்க கோர்ட் நடவடிக்கைகளின் பின்னால் இருக்கும் நுட்பமான விசயங்களை சமரசமின்றி அம்பலப்படுத்தி, அதே வேளையில் 12பேரில் ஒருவர் நினைத்தால் கூட நீதியை நிலைநாட்ட முடியும் என்பதையும் சொன்னதில் இருக்கிறது படத்தின் வெற்றி. </div><div class="separator" style="clear: both; text-align: justify;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: justify;">மனிதர்களின் மனப்பாங்கை போகிற போக்கில் போட்டுத்தாக்கும் வித்தை படத்தின் பலம். </div><div class="separator" style="clear: both; text-align: justify;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: justify;">ஒரு கொடூரமான கோடை நாளில் மின் விசிறிகூட ஓடாத ஒரு அறையில் அமர்ந்து பனிரெண்டு ஜூரிகள் ஒரு இளைஞனை எலக்ட்ரிக் சேரில் உட்கார வைப்பதா அல்லது அவனை விடுவிக்க நியாயமான காரணங்கள் ஏதும் இருக்கிறதா என்று பேச துவங்குகிறார்கள். </div><div class="separator" style="clear: both; text-align: justify;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: justify;">பதினோரு பெரும் அப்பனையே கத்தியால் குத்தியவன் சேரில் உட்கார வைத்து பொசுக்குவதே சரி என்று வாக்களிக்க, ஒரு ஒருவர் மட்டுமே எதிர் வாக்கு அளிக்கிறார். </div><div class="separator" style="clear: both; text-align: justify;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: justify;">இப்படி பலமுறை வாக்குக்கோர ஒவ்வொரு முறையும் வாக்குகள் ஒன்று ஒன்றாக கூடி அனைவரும் ஒருமனதாக வாக்களிக்கிறார்கள்.</div><div class="separator" style="clear: both; text-align: justify;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: justify;">படத்தை ஸ்பாயில் செய்துவிட்டேன் என்றாலும் எப்படி இந்த வாக்கு ஒன்று ஒன்றாக கூடுகிறது என்பதை படத்தை பார்த்தல்தான் புரிந்து ரசிக்க முடியும். </div><div class="separator" style="clear: both; text-align: justify;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: justify;">உள்ளே எல்லோரும் ஒரு மனிதனின் வாழ்வா சாவா பிரச்னை குறித்துப் பேசிக் கொண்டிருக்க சிலர் சில்லித்தனமான சில்லறை வேளைகளில் ஈடுபடுகிறார்கள்.</div><div class="separator" style="clear: both; text-align: justify;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: justify;">ஒருவன் தன்னுடைய நிறுவனத்தின் லோகோவை வரைந்து இது என் கம்பனி என்று அவனுடைய கம்பனியை ப்ரொமோட்செய்துகொண்டிருக்கிறான்.</div><div class="separator" style="clear: both; text-align: justify;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: justify;">இன்னொருவன் மின்விசிறியில் பேப்பரை கசக்கி எரிந்து அது இன்னொருவர் மீதுபட்டு சாரி என்று இளிக்கிறான். </div><div class="separator" style="clear: both; text-align: justify;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: justify;">தன் மகனோடு சண்டையிட்டு அதனால் அவன் வீட்டை விட்டு வெளியேற தன்னை மதிக்காமல் அவன் தனியே எங்கோ இருக்கிறான் என்கிற வெறியில் சம்பந்தமே இல்லாமல் குற்றவாளியை எலக்ட்ரிக் சேருக்கு அனுப்பத்துடிக்கும் ஸ்டாக் புரோக்கர். </div><div class="separator" style="clear: both; text-align: justify;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: justify;">ஒரு சேரியில் வளர்ந்து இன்று ஒரு வங்கியில் இருக்கும் ஒருவன், என பனிரெண்டு மனிதர்களுக்ம் வெவ்வேறு பின்னணியில் இருந்து வந்தவர்கள்.</div><div class="separator" style="clear: both; text-align: justify;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: justify;">குறிப்பாக ஏழாம் நம்பர் ஜூரி இரவு பேஸ்பால் மாட்சுக்கு டிக்கெட் வாங்கி வைத்திருப்பதால் இந்த விவாத இலுவையிளிருந்து தப்ப விரும்புகிறார். </div><div class="separator" style="clear: both; text-align: justify;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: justify;">ஒரு மேட்ச்க்காக தனது வாக்கை முன்பின் மாற்றி மாற்றி அளிக்கிறார்!</div><div class="separator" style="clear: both; text-align: justify;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: justify;">அமெரிக்க நீதி மன்றங்களில் நீதி என்ன பாடு படுகிறது என்பதை இதைவிட தெளிவாக சொல்ல முடியாது. </div><div class="separator" style="clear: both; text-align: justify;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: justify;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: justify;">கூல் பாக்டர்ஸ் சில </div><div class="separator" style="clear: both; text-align: justify;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: justify;">படத்தின் செட்டிங் ஒரே அரை என்பதால் அறையில் இருக்கும் பொருட்கள் கவனத்தைக் கவர்ந்தன. </div><div class="separator" style="clear: both; text-align: justify;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: justify;">குறிப்பாக முழுக்க முழுக்க கண்ணாடியாலான தண்ணீர் கேன்! இன்று வரும் பிளாஸ்டிக் கேன்களை கவிழ்க்கவே கவனம் தேவைப்படுகிறது. அன்றைய தினத்தில் கண்ணாடி பபிள் டாப்களை நினைத்துப் பாருங்கள். அதில் அளவுகள் வேறு பொறிக்கப்பட்டிருகின்றன. பெரிய சைஸ் பீக்கர் போல!</div><div class="separator" style="clear: both; text-align: justify;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: justify;">அடுத்தது அந்த தண்ணீர் கோப்பைகள், யூஸ் அண்ட் த்ரோ டம்பளர்களுக்கு பதில் காகிதக் கோன்கள்!</div><div class="separator" style="clear: both; text-align: justify;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: justify;">பழங்கால மின் சுவிட்ச்கள், ஜன்னல்கள், மின் விசிறிகள் என நிறைய டீடைல் கிடைக்கும்!</div><div class="separator" style="clear: both; text-align: justify;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: justify;">நிறைய வாசிப்பு பழக்கமும், அமெரிக்க கலாச்சாரத்தின் புரிதலும் இருந்தால் நீங்கள் தவிர்க்கவே கூடாத படம் இது. </div><div class="separator" style="clear: both; text-align: justify;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: justify;">இல்லை எனக்கு ஓர் நிமிடத்தில் நூற்றி நாற்பது புல்லட்டுகள் பறக்க வேண்டும் என்றால் அய்யா இது உங்களுக்கான படமல்ல. </div><div class="separator" style="clear: both; text-align: justify;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: justify;">தொடர்வோம்</div><div class="separator" style="clear: both; text-align: justify;">அன்பன் </div><div class="separator" style="clear: both; text-align: justify;">மது </div>Kasthuri Renganhttp://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-5208611175048594293.post-61927210348704438222020-07-12T23:07:00.001+05:302020-07-12T23:08:26.038+05:30ஜாய் என்ஜாய் - அட நம்ம சானெல் உடன்பிறப்பு சில மாதங்களுக்கு முன்னர் ஒரு சானெல் ஆரம்பிக்கலாம் என்று சொல்ல செய்யேன் என்றேன். <div><br /></div><div>இணையர் தொழில் நுட்ப ஆலோசனைகளை வழங்க உடன்பிறப்பு சானல் துவங்கியேவிட்டார்.</div><div><br /></div><div>குக்கரி, ட்ராவல் என்று துவங்கிய சானல், லாக்டவுன் காரணமாக நிறைய பயணிக்க முடியவில்லை என்பதால் குக்கரியாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.</div><div><br /></div><div>ஒரு நாளைக்கு ஒரு காணொளி என்று தொடர்ந்து செய்து அசத்திவருகிறார். </div><div><br /></div><div>ஜாய் என்ஜாய் </div><div><br /></div><div>இதோ அத்தோ குறித்த ஒரு காணொளி </div><div><br /></div><div>அத்தோ பல வருடங்களுக்கு முன்னர் ஜாக்கி சேகர் சொல்லியிருந்த ஒரு பர்மீஸ் ஐட்டம். </div><div><br /></div><div>இப்போ அது புதுகை ஐட்டமாக மாறியிருக்கிறது. </div><div><br /></div><div>வியப்புதான் </div><div><br /></div><div>உடன்பிறப்புக்கு வாழ்த்துக்கள் </div><div><br /></div><div class="separator" style="clear: both; text-align: center;"><iframe allowfullscreen="" class="BLOG_video_class" height="266" src="https://www.youtube.com/embed/s0r2fYc8CUs" width="320" youtube-src-id="s0r2fYc8CUs"></iframe></div><div><br /></div>Kasthuri Renganhttp://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-5208611175048594293.post-75888698224100199232020-06-07T18:45:00.002+05:302020-06-07T18:52:51.569+05:30இந்தப் பதிவை படிக்காதீங்க <br /><table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto;"><tbody><tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhDJPIL1zA-wgEwHAUrcj0i75MbEDbxlnAcdr7-bWEHEN53_JxKVp3tZMKff53-Fnq1F9TyuKwUrTjYthsxmLROKVME3dwRsrvfnHE05QAwyT2jILIdw9BZwqIbWILmNCm63pwUAlEtOfk/s259/once+upon+a+time+in+hollywood.jpg" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="259" data-original-width="195" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhDJPIL1zA-wgEwHAUrcj0i75MbEDbxlnAcdr7-bWEHEN53_JxKVp3tZMKff53-Fnq1F9TyuKwUrTjYthsxmLROKVME3dwRsrvfnHE05QAwyT2jILIdw9BZwqIbWILmNCm63pwUAlEtOfk//" /></a></td></tr><tr><td class="tr-caption" style="text-align: center;">போஸ்டர் வேற லெவல் </td></tr></tbody></table><br /><div>இது ஒரு திரைப்படப் பதிவு </div><div><br /></div><div>ரசித்துப் பார்க்க வேண்டும் என்போர் அருள் கூர்ந்து அப்பீட்ஆகவும். </div><div><br /></div><div>இல்லை நான் படிப்பேன் என்று அடம் பிடிப்போர் தொடரலாம். </div><div><br /></div><div><br /></div><div>க்வின்டின் டொராண்டினோ தன்னுடைய படங்களுக்காக புகழ்பெற்றவர். இவரது படங்கள் கிரைன்ட் ஹவுஸ் படங்களின் பாணியில் ரத்தம் தெறிக்கும் காட்சிகள் நிறைந்த படங்களாக இருக்கும்.</div><div><br /></div><div>அதே போல இவரது படங்களில் உண்மைச் சம்பவங்கள் இருந்தால் அவற்றை இவர் இஷ்டத்துக்கு மாற்றி எடுத்துவிடுவார். </div><div><br /></div><div>வசூல் சாதனைகளைச் செய்திருக்கும் இவரது சமீபத்திய அட்ராசிட்டி ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட். உச்ச நட்சச்திரங்களான லியோர்நார்டோ டி காப்ரியோ மற்றும் பிராட் பிட் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம். </div><div><br /></div><div>ஸ்பாயிலர் ஸ்பாயிலர் ஸ்பாயிலர் </div><div><br /></div><div>தனது சினிமா வாய்ப்புகளை இழந்துகொண்டிருக்கும் நட்சத்திரம் ரிக் டால்டன் (லியோ), இவனது உற்ற நண்பன் மற்றும் ஸ்டன்ட் டபுள் கிளிஃப் பூத் (பிராட் பிட்) இருவரின் வாழ்வு அனுபவங்களே படம் முழுக்க வருகின்றன.</div><div><br /></div><div>தனது வாய்ப்புகளை இழந்து வரும் ரிக் தான் புதிதாக குடியேறிய உயர்தரக் குடியிருப்பின் அருகே புகழ்பெற்ற இயக்குனர் ரோமன் போலன்ஸ்கி இருப்பதை பார்க்கிறான்.</div><div><br /></div><div>எப்படியாவது அவரது நட்பை பெற்றுவிட்டால் இன்னொரு ரவுன்ட் வந்துவிடலாம் என்று ஏங்குகிறான்.இவனுக்கு வாய்ப்பு கிடைத்தால்தான் கிளிஃப் பூத்துக்கும் வாய்ப்பு. கிளிஃப் பூத்துக்கு ஒரு தனி வேன் வீடு (கேரவன்) இருந்தாலும், இருவரும் ஒரே வீட்டில் இருக்கிறார்கள். ஒன்றாகக் குடிக்கிறார்கள். </div><div><br /></div><div>கிளிஃப் பூத் ஒருநாள் ஹிப்பி பெண் ஒருத்தியை அவள் குடியிருப்பில் விடச் செல்கிறான். அவள் இடத்தைப் பார்த்தவுடன் வியக்கிறான், அந்த இடம் அவன் பழைய நண்பன் ஜார்ஜ்ஜுக்கு சொந்தமான இடம். ஹிப்பிகளின் கடும் எதிர்ப்புக்கிடையே அவரை சந்திக்கிறான். அவரோ இவனை அடையாளம் கண்டுகொள்ளும் நிலையில் இல்லை. </div><div><br /></div><div>கிளிஃப் ஒரு சின்ன மோதலுக்கு பிறகு வெளியேறுகிறான். ஜார்ஜ் எதோ வழியில் மடக்கப்பட்டு அவர் சொத்தை ஹிப்பிகள் ஆக்கிரமித்திருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்கிறான். </div><div><br /></div><div>கிளிஃப் அதிரடி மன்னன் ப்ரூஸ் லியை பெண்டு கழட்டிவிட்டு (படத்தின் காட்சி) வீட்டில் ஆண்டெனா மாட்டிக்கொண்டிருக்கும் பொழுது அருகே இருக்கும் பிரபல இயக்குனர் வீட்டிற்கு யாரோ ஒரு ஹிப்பி வருவதைப் பார்கிறான். மெல்ச்சர் இருக்கிறானா என்று கேட்டுவிட்டு இல்லை என்றவுடன் அவன்பாட்டுக்கு போய்விடுகிறான். </div><div><br /></div><div>ரோமன் போலன்ஸ்கியின் இளம் மனைவி ஷரன் டேட் செமையான மயில் நீல வண்ண போர்ச் ஒன்றை எடுத்துக் கொண்டு ஷாப்பிங் போகிறாள். தான் நடித்த திரைப்படத்தை ரசிகர்களோடு உட்கார்ந்து ரசிக்கிறாள். தான் நடித்த காட்சிகளில் ரசிகர்கள் லயிப்பதை உணர்ந்து பெருமிதத்தோடு வீடு திரும்புகிறாள். </div><div><br /></div><div>சில நாட்களுக்கு பிறகு கிளிஃப் பூத்திடம், ரிக் தனது வாய்ப்புகள் குறைந்துவிட்டதால் தன்னுடைய ஆடம்பர வீட்டை விற்றுவிட்டு வாய்ப்பு கிடைக்கும் இடத்திற்கு செல்லப் போவதாகச் சொல்கிறான். </div><div><br /></div><div>அந்த இரவில் இருவரும் மொடாக்குடியாக குடித்துவிட்டு வீட்டில் இருக்கிறார்கள். ஒரு மூன்று ஹிப்பிகள் இவர்களின் வீட்டில் நுழைந்து இவர்களை கொள்ள முயற்சிக்கிறார்கள். கிளிஃப் பூத்தின் நாய் அவர்களில் இருவரை கண்ட இடத்தில் கடித்து கொத்துக் கறி ஆக்கிவிடுகிறது. எஞ்சிய ஒரு பெண் கிளிஃப் பூத்தின் இடுப்பில் கத்தியை சொருக, நிறை போதையில் தன் இடுப்பில் பாதி இறங்கியிருக்கும் அந்தக் கத்தியை விரலால் தட்டி பார்கிறான். </div><div><br /></div><div>பிறகு அந்தப் பெண்ணின் குடிமியைப் பிடித்து சுவற்றில் ஒரு ஐந்துதரம், மேசையில் ஒரு ஐந்து தரம் என்று கிடைக்கும் இடத்திலெல்லாம் மோதிச் சிதைக்கிறான். </div><div><br /></div><div>கடிவாங்கிய இன்னொரு பெண் துப்பாக்கியை எடுத்துச் சுட போதையில் மயங்கிவிடுகிறான் பூத். அந்தப் பெண் அலறிக் கொண்டே வெளியில் ஓடி நீச்சல் குளத்தில் தடுமாறி விழுந்து துப்பாக்கியை சுட்டுக் கொண்டே இருக்கிறாள். </div><div><br /></div><div>குளத்தில் ஒரு மிதவைச் சேரில் அமர்ந்து போதையில் பாட்டுக் கேட்டுக் கொண்டிருக்கும் ரிக் அரண்டு போய் வீட்டில் உள்ளேலிருந்து ஒரு தீ கக்கும் துப்பாக்கியை கொண்டுவருகிறான். </div><div><br /></div><div>நீச்சல் குளத்தில் இருக்கும் அவளை பார்பிக்யூ செய்கிறான். </div><div><br /></div><div>போலிஸ் வருகிறது, கிளிஃப் பூத் மருத்துவமனைக்கு செல்கிறான், ரிக் பக்கத்து வீட்டிலிருக்கும் ரோமன் போலன்ஸ்கியிடம் என்ன நடந்தது என்று சொல்லிவிட்டு அவர் வீட்டுக்குள் செல்வதோடு முடிகிறது படம். </div><div><br /></div><div><br /></div><div>நல்லாதானே இருக்கு ? என்கிறீர்களா ?</div><div><br /></div><div>இப்போ கொஞ்சம் நிஜம். </div><div><br /></div><div>இது அமரிக்க குற்ற வரலாற்றில் மிக கொடூரமான கொலைகள் என்று கருதப்படும் மான்ஷன் பாமிலி கொலைகளை தழுவி எடுக்கப்பட்டது. </div><div><br /></div><div>உண்மையான நிகழ்வில் ஷரன் டேட் கொலையுண்டுவிட்டார். மிக இளம் வயதில் அதுவும் எட்டரை மாத சிசுவுடன் இருக்கும் ஷரன் பலமுறை கொடூரமாக கத்தியால் குத்தப்பட்டு தூக்கிலேற்றிக் கொல்லப்பட்டார். </div><div><br /></div><div>இந்த கொடூரத்தின் தாக்கம் இந்தத் தலைமுறைவரை அவரது கொலையை கடும் மன அச்சத்துடன், பாரத்துடன் பார்க்கவைக்கிறது. இதன் காரணமாகவே சட்டம் இந்தக் குற்றவாளிகளை வெளியேற்ற தயாராக இருந்தும் சிறப்பு வீட்டோ பவரை பயன்படுத்தி மீண்டும் மீண்டும் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். ஆம் இன்றளவும்.</div><div><br /></div><div>அப்புறம் ஏன் குவின்ட்டின் கதையயை மாற்றி எடுத்தார்?</div><div><br /></div><div>படத்துக்கான கதையை உருவாக்க குவிண்டின் மிக ஆழமான ஒரு ஆய்வை செய்தபொழுது ஷரன் டேட், தான் சந்தித்த அனைவரிடமும் அன்பை விதைத்தவராக, திரை உலகை நேசித்த பெண்ணாக இருந்ததை கண்டறிந்திருக்கிறார். </div><div><br /></div><div>இப்படி ஒரு மனுசியை திரையில் கொல்வதைவிட, வாழவைப்பதே சரியாக இருக்கும் என்று முடிவெடுத்து, கொலையாளிகளை தண்டிக்கவே இரண்டு கற்பனைக் கதா பாத்திரங்களை உருவாகியிருக்கிறார். ரிக் மற்றும் கிளிஃப் பூத்! </div><div><br /></div><div>ஒரு விதத்தில் இது ஒரு ஆகச்சிறந்த படைப்புதான். உண்மைகளை உருக்கிவிட்டார், வளைத்துவிட்டார் என்பதைவிட ஷரன் திரையிலாவது வாழட்டும் என்று முடிவெடுத்ததை அமேரிக்கா கொண்டாடித் தீர்த்திருக்கிறது.</div><div><br /></div><div>மெல்சர் எனும் இசை தட்டு வணிகர் சார்லஸ் மான்சன் என்பவனின் பாடல்களை வெளியிடுகிறேன் என்று சொல்லிவிட்டு பின்வாங்கிவிட, இந்தக் கடுப்பில் சார்லஸ் மான்சன் தன்னுடைய தொண்டரடிப்பொடிகளை மெல்ச்சர் குடியிருந்த வீட்டுக்கு அனுப்பி அங்கே யார் இருந்தாலும் கொடூரமாக கொல்லுங்கள் என்று சொன்னதின் விளைவே இந்த சம்பவம். இந்த லட்சணத்தில் தன்னை இயசு கிறிஸ்த்து என்று சொல்லிவைத்திருக்கிறான் சார்லஸ் மேன்சன்!</div><div><br /></div><div>என் மனசுக்கு கொடூர கொலைச் சம்பவங்களை படமாக்கும் குவிண்டின் டொரண்டினோ நெருக்கமாகியிருக்கிறார்.</div><div><br /></div><div><br /></div><div><br /></div><div> அன்பன் </div><div>மது </div>Kasthuri Renganhttp://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5208611175048594293.post-83722854910857567902020-05-19T23:53:00.002+05:302020-05-19T23:54:17.703+05:30போர்ட் வெர்சஸ் பெராரி 2019<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEifk7OyLKXbCvUPR7DBXi4omtLLqmutiIiMkvTHownH6IMlPVhmlxQgjMwVycCUt4WKYnRwH8V2NTg57Ed5eTj2OlPKBba5DYZC2sqM0sSbsYQEy9L-dBOySCYAirIYak0fmcmUp_YSnE4//" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="356" data-original-width="240" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEifk7OyLKXbCvUPR7DBXi4omtLLqmutiIiMkvTHownH6IMlPVhmlxQgjMwVycCUt4WKYnRwH8V2NTg57Ed5eTj2OlPKBba5DYZC2sqM0sSbsYQEy9L-dBOySCYAirIYak0fmcmUp_YSnE4/s320/Ford_v._Ferrari_%25282019_film_poster%2529.png" /></a></div><div><br /></div>ரேஸ் படங்கள் பார்த்துப் பார்த்துச் செதுக்கப்பட்டால் அதிரிபுதிரியாய் ஹிட் அடிக்கும் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கும் படம். <div><br /></div><div>ஹாலிவுட்டின் ஹெவி வெயிட் நட்சத்திரங்களான மாட் டீமன், கிறிஸ்டின் பேல் வேறு படத்தில். </div><div><br /></div><div>ஹாலிவுட் நட்சத்திரங்கள் குறித்து மீண்டும் ஒருமுறை பொறாமையாக புழுங்க வைத்தப்படம், ஒரு சட்டத்துக்குள் சிக்கி நான் ஆக்சன் படம்தான் பண்ணுவேன், நான் நிமிசத்திற்கு நூறுபேரை உதைக்கிறமாதிரி படமாக இருந்தால் செய்யலாம் என்று சொல்வதில்லை. </div><div><br /></div><div>போர்ன் ஐடென்டிட்டி போன்ற ஹை வால்டேஜ் ஆக்சன் படங்களில் நடித்துவிட்டு, ஹாலிவுட்டின் வசூல் சக்கரவர்த்தி என்கிற பட்டத்துடன் இருக்கும் மாட் டீமன் எப்படி இப்படி ஒரு அண்டர் ப்ளே கதாபாத்திரத்தில்!</div><div><br /></div><div>அதே போல பாட் மென் பட வரிசையில் புதிய உயரங்களை, வசூல்களை, ரசிக பட்டாளத்தை உருவாக்கிய கிறிஸ்டின் பேல் தன் உடலை, முகத்தை இப்படி மாற்றிக் கொண்டு நடிப்பதெல்லாம் நம்பவே முடியாத ஆச்சரியம். </div><div><br /></div><div>ஏண்டா கிறிஸ்டின் பேல் இப்படி முகத்தை எலும்புகள் துருத்துமாறு மாற்றிக் கொண்டார் என்றால் அவர் நடிக்கும் பாத்திரம் ஒரு உண்மையான நபரை சார்ந்தது, அவரது முகம் கவர்ச்சியற்றது. திடீரெனப் பார்த்தால் கூட யாரும் தள்ளிப் போய்விடும் உடலமைப்பு. இதுதான் பேல் நடித்த கென் மைல்ஸ் பாத்திரத்தின் உடலமைப்பு. </div><div><br /></div><div>மேலும் தன் திறனின் மீது அசாத்திய நம்பிக்கை, கடன் சுமை, அதை பிரதிபலிக்கும் நடை, என உடல் மொழியை முற்றாக மாற்றி அசத்திவிட்டார் பேல்.</div><div><br /></div><div>படத்தில் பல இடங்களை மனசில் அப்பிக் கொள்ளும், ரேஸ் ட்ராக்கில் பறக்கும் கார்களை பின்தொடரும் காமிரா, இசை, பேலின் முக பாவம் என பல விசயங்கள். </div><div><br /></div><div>குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ஒரு இரவில் காரை எடுத்துக் கொண்டு தனது ட்ராக் குறித்து தன் மகனுக்கு பேல் விவரிக்கும் இடம். ட்ராக்கின் ஒரு சிறு கீரலைத் தனக்கான ஒரு மார்க்கராக வைத்திருக்கும் நுட்பத்தை தன் மகனுக்கு பகிரும் பொழுது படம் ஆடியன்சுக்கு வெகு நெருக்கமான படமாக மாறுகிறது. </div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhDE3QH0m4PhaPubiQBLwzUSrkCMbfUlZJ-_r6TeZ7GqCMPilOYsl5O07KcPkCjzj4Zrk7LN40r8w2BI_DT2z_i2qEugOCVYuuthBTcWOd8dDpD_L8cj9wd_lT23TuGc5pvzYlgfYne1Ic//" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="565" data-original-width="1365" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhDE3QH0m4PhaPubiQBLwzUSrkCMbfUlZJ-_r6TeZ7GqCMPilOYsl5O07KcPkCjzj4Zrk7LN40r8w2BI_DT2z_i2qEugOCVYuuthBTcWOd8dDpD_L8cj9wd_lT23TuGc5pvzYlgfYne1Ic/s320/Ford+v+Ferrari.jpg" width="320" /></a></div><div><br /></div><div>அதே போல பல ஆயிரம் கோடிகளைக் கொட்டியிருக்கிறேன் உங்கள் மீது என்று சொல்லி இவர்களின் ரேஸ் கார் தயாரிப்பு நிறுவனத்திற்கு வரும் ஹென்றி போர்டை எப்படி கையாள்கிறான் ஷெல்பி என்பதும் வாவ். </div><div><br /></div><div>ஒரு மெக்கானிக் காரின் பாகங்களைக் காட்டி விளக்கி கொண்டிருக்க, அவரை கையமர்த்தி ரேஸ் காரை பாகம் பாகமாக பார்க்கக் கூடாது, உள்ளே உட்காருங்க என்று சொல்லி காரை ராக்கெட்டாக மாற்றிவிட்டு, இப்போ எப்படி இருக்கு என்று சொன்னவுடன், ஹென்றி போர்ட் 2 தேம்பி, விம்மி அழுது இந்தக் காரை, இந்த பவரை எங்க தாத்தா உயிரோடு இருந்து பார்த்து அனுபவிக்கலையே என்று சொல்லுமிடம் வாவ் மொமென்ட். </div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgZ4bEdxcy7CQqWwSOxuWkLrXVhV69ZMq_WaG-BnxqNtKogNBHEvmNOKyjgv_1iID_GVOJyE2igvnplXZHboUw-l3QC2FUfcZ_7sxnXNij0ZzFJAc46uMX1BDSppoR51YRIpWUTsGgiL18//" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="559" data-original-width="1361" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgZ4bEdxcy7CQqWwSOxuWkLrXVhV69ZMq_WaG-BnxqNtKogNBHEvmNOKyjgv_1iID_GVOJyE2igvnplXZHboUw-l3QC2FUfcZ_7sxnXNij0ZzFJAc46uMX1BDSppoR51YRIpWUTsGgiL18/s320/fvf.png" width="320" /></a></div><div><br /></div><div>ரேஸ் பிரியர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம். </div><div><br /></div><div>கார்பரேட் நுண் அரசியலும் புரியும். </div><div><br /></div><div>தொடர்வோம் </div><div><br /></div><div>அன்பன் </div><div>மது </div>Kasthuri Renganhttp://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-5208611175048594293.post-61658358105623179992020-05-10T22:31:00.007+05:302020-05-10T23:24:54.394+05:30பனியும் நெருப்பும் இசைத்த கானம் <div>தாமஸ் ஹார்டி எப்படி வெஸ்ஸக்ஸ் என்ற உலகைப் படைத்தாரோ, அதே போல பல எழுத்தாளர்கள் தங்கள் உலகங்களைப் படைத்திருக்கிறார்கள். சர் தாமஸ் மூர் சொல்லும் கற்பனை பொன்னுலகு "உத்தொபியா" ஒரு மிகப் புகழ்வாய்ந்த அடையாளம்.</div><table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto;"><tbody><tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiLsFSIN6n4RB83AfkLLPq4kJCrij7uByGhcRiAGOE0cn4zTZRNXuepOvKYgoyjIES1qso3SdWKL4OFxUKlBs4cd7RMwJZlIP95UFQ65zQS_KzHjkQqj6RXBnkMoAUwBu4xS8TLQdCKwSk//" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="266" data-original-width="474" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiLsFSIN6n4RB83AfkLLPq4kJCrij7uByGhcRiAGOE0cn4zTZRNXuepOvKYgoyjIES1qso3SdWKL4OFxUKlBs4cd7RMwJZlIP95UFQ65zQS_KzHjkQqj6RXBnkMoAUwBu4xS8TLQdCKwSk/s320/middle+earth.jpg" width="320" /></a></td></tr><tr><td class="tr-caption" style="text-align: center;">டோல்கீனின் மிடில் எர்த்</td></tr></tbody></table><div class="separator" style="clear: both; text-align: center;"><br /></div><div><br /></div><div>ஜே.ஆர்.ஆர். டோல்கீன் தனது கதைக்களத்தை மொரோடோர் என்கிற கற்பனை உலகில் அமைத்தார். இவரது சகா சி.எஸ்.லீவிஸ் நார்னியா எனும் கற்பனை உலகைப் படைத்தது அதில் நிகழும் சம்பவங்களைக் கதையாக்கினார். பேசும் சிங்கங்களையும் போராடும் மரங்களையும் இன்னும் மறக்காத பார்வையாளர்கள் அநேகம் பேர்.</div><table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto;"><tbody><tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh6m33Fkiow92mnRmMAW8IYkRLgyiahJ_niualolUiNxyFkLiYL8aq2ZNsXiuqCfflVFYj5reqlmE4ayOCGE9FlRxY7mWv4kJ-82FGm8YDLvq-bgxkYZXBMABbdg-n48xiT1qlYshw98pc//" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="237" data-original-width="474" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh6m33Fkiow92mnRmMAW8IYkRLgyiahJ_niualolUiNxyFkLiYL8aq2ZNsXiuqCfflVFYj5reqlmE4ayOCGE9FlRxY7mWv4kJ-82FGm8YDLvq-bgxkYZXBMABbdg-n48xiT1qlYshw98pc/s320/narnia.jpg" width="320" /></a></td></tr><tr><td class="tr-caption" style="text-align: center;">நார்னியாவின் கதைகள்</td></tr></tbody></table><div><br /></div><div><br /></div><div>பிலிப் புல்மான் எனும் எழுத்தாளர் ஹிஸ் டார்க் மெடீரியல்ஸ் என்கிற புதினத்தில் ஒரு படி மேலே போய் கதைக்களத்தை பல்லண்டங்களில் நிகழ்த்துகிறார். (Multiverse என்பது பூமி ஒன்றுமட்டுமல்ல, பல்வேறு பூமிகள் இருகின்றன எனும் அறிவியல் தத்துவம்). </div><table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto;"><tbody><tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj_yqMFpYBNWiSnHhVW8pb304N8TgW9LRK-ICSFFrltisLiCrCGuXymsvft7nqanBSuenAmEne2j232Ev0MypAIR65a4gEMuDp0zB8CyG0VRrEGuTJfSxNgXHOR5M3d3BGd3RGGrWk1CEo//" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="263" data-original-width="474" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj_yqMFpYBNWiSnHhVW8pb304N8TgW9LRK-ICSFFrltisLiCrCGuXymsvft7nqanBSuenAmEne2j232Ev0MypAIR65a4gEMuDp0zB8CyG0VRrEGuTJfSxNgXHOR5M3d3BGd3RGGrWk1CEo/s320/lyra.jpg" width="320" /></a></td></tr><tr><td class="tr-caption" style="text-align: center;">லைராவும் அவள் விலங்கும்</td></tr></tbody></table><div><br /></div><div>உலகின் பெரும் வெற்றிபெற்ற தொலைக்காட்சித் தொடர்களில் ஒன்றான கேம் ஆப் த்ரோன்ஸ் கதைக்களம் டைட்டிலில் விரியும் அழகே அழகு இல்லையா. இரண்டு கண்டங்களைச் சேர்ந்த ஏழு அரச பரம்பரைகளின் ரத்தவெறிபிடித்த அதிகாரப் போட்டியே கதை. ஜார்ஜ் ஆர்.ஆர். மார்டின் படைத்த வெஸ்ட்ரோஸ் மற்றும் எஸ்சொஸ் எனும் இரண்டு நாடுகளில் நிகழும் போர்கள், நாகரீகமடைந்த நாடுகளின் எல்லைக்கு வெளியே இருக்கும் பனிக்காடு, அதில் திரியும் வினோத உயிரினங்கள், அவற்றின் நர வேட்டை என அசத்தலான கற்பனை விருந்தது. பனியும் நெருப்பும் இசைத்த கானம் எனும் நாவலின் திரைவடிவம்தான் இந்த தொலைக்காட்சித் தொடர்.</div><table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto;"><tbody><tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEihLnDH1tRQHpUUJuxHfLVEl2OerYTFpQr4yY7-VTGAjOIYeptFl0dZgNBrXK5279h-9_n6EN8oZDo1NvG_Z31u_qoGTFkHrsSNikC7bEWsXsozK_1zaEfsIazcyNp6-TAKVfgat1UCK2M//" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="266" data-original-width="474" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEihLnDH1tRQHpUUJuxHfLVEl2OerYTFpQr4yY7-VTGAjOIYeptFl0dZgNBrXK5279h-9_n6EN8oZDo1NvG_Z31u_qoGTFkHrsSNikC7bEWsXsozK_1zaEfsIazcyNp6-TAKVfgat1UCK2M/s320/naath.jpg" width="320" /></a></td></tr><tr><td class="tr-caption" style="text-align: center;">நாத் தீவுகள்</td></tr></tbody></table><div><br /></div><div>பனிக்காடுகள், ஆழ் கடல்கள், பாலைவனம், கொஞ்சம் அரேபிய நாகரீகத்தை தழுவிய நகர்கள், ஐரோப்பிய பனிநிறை நகர்கள் என வெரைட்டி நிலப்பரப்பை கற்பனையில் சமைத்தசத்திய மார்டின் படைப்பு பெற்ற வெற்றி அதிரி புதிரி.</div><div><br /></div><div>நுட்பத்திற்கு ஒரு சின்ன உதாரணம். </div><div><br /></div><div>மிசாண்டி எனும் கதா பாத்திரம். நாத் தீவுகளில் இருந்து அடிமையாக விற்பனை செய்யப்பட்டவள். இவள் கதை நமக்கு இப்போதைக்கு தேவையில்லை. மார்டினின் கற்பனை மேதமையைக் கண்டறிய நாம் நாத் தீவுகள் குறித்து படிக்கவேண்டும். அந்த தீவுகளில் இருக்கும் மக்களை பாதுகாக்க இராணுவம் இல்லை. இதன் காரணமாகவே அடிமை விற்பனையாளர்கள் அந்தத் தீவிற்கு வந்து அவர்களைப் பிடித்துப் போய்விடுகிறார்கள். </div><div><br /></div><div>நாத் தீவில் அவர்கள் நிரந்தரமாக இருக்க வேண்டியதுதானே? ஏன் மீண்டும் மீண்டும் பயணிக்க வேண்டும்? இந்த இடத்தில் எழுத்தாளர் சொல்லியிருக்கும் கதை வாவ். </div><div><br /></div><div>நாத் தீவுகளில் இருக்கும் மக்கள் அந்த தீவில் பரவும் ஒருவகை நோயிடமிருந்து தங்களை காத்துக்கொள்ள எதிர்ப்புத் திறன் கொண்டவர்கள். அந்நியர் வந்தால் அதோ கதி. பட்டர்ப்ளை பீவர் எனும் வியாதி வந்து தசைகள் எலும்புகளை விட்டு கழண்டு விழுந்துவிடும். இந்த பாதுகாப்பு இருப்பதாலேயே நாத் தீவுகள் தனக்கன ஒரு இராணுவத்தை வைத்துக் கொள்ளவில்லை! </div><div><br /></div><div>மேலும் நாத் தீவுவாசிகள் போரை வெறுப்பவர்கள், மாமிசம் உண்ணாதவர்கள், இசையை நேசிப்பவர்கள். இந்த பண்புகள் அவர்களை அடிமை வியாபாரிகளின் டார்கெட்டாக மாற்றியிருப்பதில் வியப்பு என்ன?</div><div><br /></div><div>ரிச்சர்ட் கே.மோர்கன் எழுதிய ஆல்டர்ட் கார்பன் இன்றிலிருந்து மூன்னூறு ஆண்டுகளுக்கு பிறகு மனிதர்கள் பரகாயப் பிரவேசத்தை டிஜிட்டல் வழியில் செய்வதை சொல்கிறது. இந்த கதை நிகழ்வது மோர்கன் படைத்த பே சிட்டி என்கிற தொழில்நுட்ப உச்சமடைந்த பெருநகர் ஒன்றில். <table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto;"><tbody><tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhQVwFaj_aw-PClWbRmoIB89Bf20wyC551KAJqKk7cLjJkKMK54N2ZBkMC9lSYfQSdEuYg5COzF2rgBaRGaUHWpjOOVekZrFTrrnJ2s_PcZMNFUPX6k-9xyboVPmXkoS2NHFMN74p0c3yQ//" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="237" data-original-width="474" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhQVwFaj_aw-PClWbRmoIB89Bf20wyC551KAJqKk7cLjJkKMK54N2ZBkMC9lSYfQSdEuYg5COzF2rgBaRGaUHWpjOOVekZrFTrrnJ2s_PcZMNFUPX6k-9xyboVPmXkoS2NHFMN74p0c3yQ/s320/altered+carbon.jpg" width="320" /></a></td></tr><tr><td class="tr-caption" style="text-align: center;">கலக்கல் பே சிட்டி</td></tr></tbody></table></div><div><br /></div><div>2012இல் துவங்கி 2015வரை நான்கு பாகங்களாக வந்த தி ஹங்கர் கேம்ஸ் நாவல் சூசனா காலின்ஸ் என்பவரால் எழுதப்பட்டது. இவரது கற்பனை உலகு பணாம். ஒரு வட அமரிக்க கற்பனை நகர். பதிமூன்று நகரங்களின் ஒன்றியம். அதீதமாக கொண்டாடப்பட்ட திரைப்படம் இது.</div><div><br /></div><div>இந்த நாவலில் மாக்கிங் ஜே எனும் ஒரு பறவை மனிதர்கள் எழுப்பும் ஒலியை மிமிக் செய்யும். ஹாய் என்றால் ஹாய் எனச் சொல்லும், பாடினால் பாடும், பேசினால் பேசும். </div><div><br /></div><div>இந்த பறவைக்கு ஒரு தனிக்கதையை வைத்திருக்கிறார் சூசனா, தொழில் நுட்பத்தில், மரபுப் பொறியியலில் மிகவும் முன்னேறிய பணாம் நகரின் ஆட்சியாளர்கள் புரட்சியில் ஈடுபடும் மக்களை உளவு பார்க்க வடிவமைத்த பறவைதான் ஜாபர்ஜேய்ஸ், ஆனால் புரட்சியாளர்கள் இந்த பறவை உளவு பார்பதை தெரிந்து கொண்டு தவறான தகவலைக் கொடுத்து முட்டா டி போன்ற ஆட்சியாளர்களைக் குழப்பவும் அரசு ஒட்டுமொத்தமாக ஜாபர்ஜேஸ் வகைப் பறவைகளை கைவிட, வனத்தில் பறந்தலைந்த அந்தப் பறவைகள் (அரசு ஆண் பறவைகளை மட்டுமே உற்பத்தி செய்யும்) மாக்கிங் பறவைகளோடு இணைந்து புதிய இனமான மாகிங்ஜே பறவைகளை உருவாக்கும். </div><div><br /></div><div>இப்படி உருவான பறவையை கதையின் போக்கில் புரட்சியின் அடையாளமாக மக்கள் கொண்டாடுவார்கள்!</div><table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto;"><tbody><tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjcFqCEoUvkMv-Wq5zWOLMUoQ4Qr6vcSrWsAMo4fRsWaoqqEOARpJgIKNeKVwGlcjXhGjhzxu5E3IpUgIG_pDwC3uzzNeXLQA7cSuU_1v6I_si09aolmr8gtagpvPFlCl0FqjIQnZKc1j4//" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="266" data-original-width="474" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjcFqCEoUvkMv-Wq5zWOLMUoQ4Qr6vcSrWsAMo4fRsWaoqqEOARpJgIKNeKVwGlcjXhGjhzxu5E3IpUgIG_pDwC3uzzNeXLQA7cSuU_1v6I_si09aolmr8gtagpvPFlCl0FqjIQnZKc1j4/s320/mockingjey.jpg" width="320" /></a></td></tr><tr><td class="tr-caption" style="text-align: center;">மாகிங் ஜே</td></tr></tbody></table><div><br /></div><div><br /></div><div>ஒரு கதை சொல்லட்டுமா </div><div><br /></div><div>ஒரு ஊர்ல நரி அதோடு சரி என்கிற எளிமையான கதைகள் ஒருபுறம் இப்படி பார்த்துப் பார்த்து செதுக்கும் கதைகள் மறுபுறம். </div><div><br /></div><div>எத்துனைக் கற்பனை உலகங்களை நம் எழுத்தாளர்கள் படைத்திருக்கின்றனர். எவ்வளவு நுட்பம்!</div><div><br /></div><div>எத்துனை வாசகர்கள் எஸ்சக்சில், மால்குடியில், பே சிட்டியில், பணாம் நகரில், எஸ்சோஸ்சில், மொரோடோரில், நார்னியாவில் திரிந்து கொண்டிருக்கிறார்கள். </div><table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto;"><tbody><tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEin7vxJamsFr5eLSRAdErGD4Qs-WGM26a5t3_RUx7bXJ5ztkKN5Xf4xRO0-xXI7yIzmP8Tzul8LBetNQEc5NLRR78SFbLhdcJeLirgwqkuMFzdBQid4XoaiLTNUm6qi1LmwJBYYHda-8_w//" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="266" data-original-width="474" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEin7vxJamsFr5eLSRAdErGD4Qs-WGM26a5t3_RUx7bXJ5ztkKN5Xf4xRO0-xXI7yIzmP8Tzul8LBetNQEc5NLRR78SFbLhdcJeLirgwqkuMFzdBQid4XoaiLTNUm6qi1LmwJBYYHda-8_w/s320/panam.jpg" width="320" /></a></td></tr><tr><td class="tr-caption" style="text-align: center;">பணாம்</td></tr></tbody></table><div><br /></div><div><br /></div><div>நகர், அதன் நிலப்பரப்பு, கடற்பரப்பு, உயிரினங்கள் என எத்துனை அதிசயங்கள் சாத்தியப்படுகின்றன இந்த எழுத்தாளர்களுக்கு. </div><div><br /></div><div>புதிதாக எழுத விரும்பும் நண்பர்கள் ஒரு பென்சில் மற்றும் கிராப் சீட்டில் தங்கள் கற்பனை உலகை படைத்தது செழிக்க வைக்கலாம். </div><table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto;"><tbody><tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg-nqBsgCTg95SDWOE_08YNr6OQIOa7mGyHQs6sfCeMI8Gc-WvglrdZ2XsITVCGw_3T87qUjun2m1vwaBDHAa7OfdP9PpuF-r9rtXF6c7X5sj5xETybK9Dt7DpdUBJgPK04KeTqcwvUndA//" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="284" data-original-width="474" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg-nqBsgCTg95SDWOE_08YNr6OQIOa7mGyHQs6sfCeMI8Gc-WvglrdZ2XsITVCGw_3T87qUjun2m1vwaBDHAa7OfdP9PpuF-r9rtXF6c7X5sj5xETybK9Dt7DpdUBJgPK04KeTqcwvUndA/s320/panam2.jpg" width="320" /></a></td></tr><tr><td class="tr-caption" style="text-align: center;">பணாம் நகரின் ஒரு பகுதி</td></tr></tbody></table><div><br /></div><div><br /></div><div>மேலை நாடுகளின் எழுத்தாளர்கள் எல்லாமே கிரேக்க இதிகாசங்களை, பிரஞ்சு கற்பனை உயிரினங்களை படைத்து, அவற்றில் இருந்து மீள உருவாக்கி வெல்கிறார்கள். </div><div><br /></div><div>தமிழில் அப்படி பல உயிரினங்கள் உண்டு. </div><div><br /></div><div>யாழி, இந்த விலங்கு வந்தால் யானை பாறையை தந்ததை கொண்டு குடைந்தது ஒளிந்து கொள்ளும் என்று ஒரு அழகான கற்பனை உண்டு.</div><div><br /></div><div>நிலாமுகி என்பது ஒரு பறவை. இது முழு நிலா நாட்களில் மட்டும் வெளி வந்து நிலவின் ஒளியை உணவாகக் கொண்டு உயிர்வாழும். </div><div><br /></div><div>இப்படி எண்ணிறந்த கற்பனை விலங்குகள், உலகுகள், நிகழ்வுகள் தமிழில் உண்டு. </div><div><br /></div><div>இவற்றை எழுத்தாளர்கள் தம் கற்பனையில் பயன்படுத்தும் பொழுது அவர்கள் படைப்பு வேற லெவலுக்கு போகும். </div><div><br /></div><div>இப்போதைக்கு படைப்பு உலகு குறித்த கட்டுரைகள் நிறைவு பெறுகின்றன. </div><div><br /></div><div><br /></div><div>அன்பன் </div><div>மது </div><div><br /></div><div>பொறுப்புத்துறப்பு </div><div>ஆல்டர்ட் கார்பன், கேம் ஆப் த்ரோன்ஸ் சீரிஸ் குழந்தைகளோடு பார்க்க ஏற்றவை அல்ல. இவை பற்றி விரிவாக பின்னொரு சமயம் எழுதுகிறேன்.</div>Kasthuri Renganhttp://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-5208611175048594293.post-31012005735351490362020-05-09T23:35:00.000+05:302020-05-09T23:52:43.717+05:30படைப்பு <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEifcytXKDs2bNk5bYZ-hzowm3-2FFjeJcti2sBWjC3Bb33pHZMPUsHGW_ygFFc_V-VSviRvlcsYOvRk5ad9JSrCqtGj5LQbZgesGDKQ0LsXAG54AmdOkCtwKYV4vlN4HsfG6tcfZxZ5Ogk/s1600/825px-Thomashardy_restored.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1197" data-original-width="825" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEifcytXKDs2bNk5bYZ-hzowm3-2FFjeJcti2sBWjC3Bb33pHZMPUsHGW_ygFFc_V-VSviRvlcsYOvRk5ad9JSrCqtGj5LQbZgesGDKQ0LsXAG54AmdOkCtwKYV4vlN4HsfG6tcfZxZ5Ogk/s320/825px-Thomashardy_restored.jpg" width="220"></a></div>
<br>
காலத்தை வென்ற, ஒருமுறை வாசித்தாலே ஆன்மாவில் உறைந்துவிடும் படைப்புகளை தந்த படைப்பாளர்கள் என்ன நுட்பத்தை பயன்படுத்தினார்கள் என்று இளம் படைப்பாளர்கள் தெரிந்து கொள்ளுதல் அவசியம்.<br>
<br>
</div><a href="https://www.malartharu.org/2020/05/imagine.html#more">மேலும் படிக்க»</a>Kasthuri Renganhttp://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-5208611175048594293.post-29776677342018560572020-05-05T21:48:00.004+05:302020-05-09T22:27:31.441+05:30பாலங்கள் 21 <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgzXUJqi3ug3VPwCLE1Zpnx5JtuhVb_AUsUnyFkqpt11NTT6GOfOSDGhvBfYcZ9Lpm9Dcmlw0hd6M5twQfI8ibum9xT0lQ5Hm_We-P2J2WnjjT0EPcmHU6ApAJlz1LCdf8hOzA8YoBBV2E/s1600/21+bridges.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="179" data-original-width="121" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgzXUJqi3ug3VPwCLE1Zpnx5JtuhVb_AUsUnyFkqpt11NTT6GOfOSDGhvBfYcZ9Lpm9Dcmlw0hd6M5twQfI8ibum9xT0lQ5Hm_We-P2J2WnjjT0EPcmHU6ApAJlz1LCdf8hOzA8YoBBV2E/s1600/21+bridges.jpg"></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
ஸ்பாயிலர் அலர்ட் </div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
சாட்விக் பாஸ்மென் எனக்கு மிகப் பிடித்தமான நடிகர்களில் ஒருவர், இத்தனைக்கும் சாட்டை முதலில் ப்ளாக் பாந்தரில்தான் பார்த்தேன். அந்த திரைக்கதையும் அதற்கு சாட் கொடுத்த உழைப்பும் அற்புதமானது. </div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
</div>
<br></div><a href="https://www.malartharu.org/2020/05/21-21-bridges.html#more">மேலும் படிக்க»</a>Kasthuri Renganhttp://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5208611175048594293.post-13264805355526041722020-05-03T03:09:00.000+05:302020-05-05T12:31:26.436+05:30சைத்தானை கண்டடைதல்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg7iRYimug0jALP9jR4MzcCXes3pY7ZDhStp00wjfyRfaDtwoHMFWpP27yOWwCFzKwIRP8CJruEJ2xwEVIuew81Q0a0ir2iuIUY6yYyD255GhvigCOmtwEwo01ko4ByhS2UuGPhgbBsyCk/s1600/i+saw+the+devil.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="593" data-original-width="400" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg7iRYimug0jALP9jR4MzcCXes3pY7ZDhStp00wjfyRfaDtwoHMFWpP27yOWwCFzKwIRP8CJruEJ2xwEVIuew81Q0a0ir2iuIUY6yYyD255GhvigCOmtwEwo01ko4ByhS2UuGPhgbBsyCk/s320/i+saw+the+devil.jpg" width="215" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
வயது வந்தோருக்கு மட்டும் ...உண்மையில் இளகிய இதயம் கொண்டோர் படித்துவிட்டு அலறினால் அடியேன் பொறுப்பல்ல.</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
2011இல் வந்த கொரியப்படம். திகில் துப்பறியும் கதை, பெண்களை வெறுக்கும் ஒரு சீரியல் கில்லரை வேட்டையாடி விளையாடும் கதை.<br />
<br />
கிம் ஜி ஊன் இயக்கத்தில் கொய்மின் சக், லீ பியூங் ஹன் நடித்து வெளிவந்ததது.<br />
<br />
ஒரு திகில் படத்தைப் பார்க்கிற பொழுது உள்ளங்கைகள் வேர்க்கும், இதயம் வழக்கத்தைவிட பதினைந்து துடிப்புகளை அதிகரிக்கும்.<br />
<br />
இது மருத்துவம் சொல்வது, உண்மையா என்று நீங்கள் ஆய்ந்தறிய விரும்பினால் இந்தப் படத்தைப் பாருங்கள், ஒரே தம்மில் இந்தப் படத்தைப் பார்க்க முடிந்தவர்கள் தங்களைப் பரிசோதிக்கொள்வது நலம்.<br />
<br />
பலமுறை நிறுத்தி, இடைவெளி விட்டே பார்க்க இயல்கிறது.<br />
<br />
அப்படி என்ன இருக்கிறது படத்தில் ?<br />
<br />
பனிபடர்ந்த சாலை ஒன்றில் பஞ்சரான கார் ஒன்றில் இருக்கும் இளம் பெண்ணை தாக்கி, வெறி அடங்கும் வரை சுத்தியால் மண்டையிலேயே அடித்து, கார் முழுதும் இரத்தம் சிதற, மூச்சடங்கும் அவளை பணியில் இழுத்துக்கொண்டே போய்த் தன் கொலைக்குகையில் தள்ளுவது ஒரு துவக்கம்தான்.<br />
<br />
காமிரா பிளாஸ்டிக் உரையில் உடையற்ற அவள் உடலைக் காண்பிக்கும் பொழுது ஒரு வெண்டு வெண்டிக்கொண்டு உயிர்க்கும் அவள் உங்களுக்கு கொடுக்கும் நடுக்கம் இருக்கிறதே, சும்மாவா சொல்கிறார்கள் இந்த படம் ஒரு அனுபவம், எவனுக்கு தில் இருக்கோ அவன் பாருடா என்று.<br />
<br />
இதைவிட அடுத்த கட்டத்திற்கு போய், என்னைக் கொன்றுவிடாதே, நான் கர்பமாக இருக்கிறேன் எனும் அவளைச் எதோ ஈ போன்ற உயிரைக் கொல்வதைப் போல சிதைத்து கூறு கூறாக வெட்டி பெட்டியில் அடுக்கும் அவன் டெவில் இல்லாமல் வேறென்ன.<br />
<br />
இந்தப் புள்ளியில் இருந்து துவங்கும் படம் முரட்டு ஓட்டமாக ஓடி, உங்கள் உள்ளுறுப்புகளை எல்லாம் ஒரு ஆட்டு ஆட்டிவிட்டு அதே கொடூரத்தோடு முடிகிறது.<br />
<br />
படம் ரத்தம் தெறிக்கும் சைக்கோ திரில்லர் எனில், அதற்காக பயன்படுத்தப்பட்டிருக்கும் காட்சி தொழில் நுட்பங்கள் உச்சம்.<br />
<br />
ஒரு டாக்சிக்குள் சுற்றி வரும் காமிரா, டாக்சியில் இருக்கும் மூன்று கொலை வெறி மிருங்கங்கள் ஒருவரோடு ஒருவர் மோதி டாக்சி முழுக்க ரத்தம் பீய்ச்சி அடிக்கும் காட்சியை எப்படி இப்படி படமாக்கினார்கள் என்பது குழுவினர்க்கே வெளிச்சம்.<br />
<br />
மனிதக் கறியுன்னும் சைக்கோ கொலையாளியாக கொய் மின் சக், பழிவாங்கும் படலத்தில் தானே ஒரு சைக்கோவாக மாறிவிடும் லீ ஊன் ஹன் என எதிர்பாரா திருப்பங்கள் படத்தில்.<br />
<br />
இந்தப் படமும் எனக்கு ஒரு எரிச்சலான கேள்வியைத் தருகிறது. எல்லா சைக்கோக்களும் பெண்களை வெறுப்பவர்கள், எல்லா கொரிய பெண்களும் முழங்கால் வரை ஸ்கர்ட் போட்டுக்கொண்டு சைக்கோக்களால் அடிபட்டு சாகவே படைக்கப்பட்டிருகிறார்கள் எனும் புள்ளியில் இருந்து இவர்கள் வெளியில் எப்போது வருவார்கள்?<br />
<br />
காத்திருப்போம்<br />
<br /></div>
Kasthuri Renganhttp://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5208611175048594293.post-46727779117049143572020-05-01T04:03:00.000+05:302020-05-01T21:46:55.705+05:30ஒளியிலே தெரிவது – வண்ணதாசன் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgD8pIfB7x1PkWReXFchReEjxIaqa33GwWhBjhgh2IEch-L2Ho02ieejGHUm3hO0npAyVfboz4zVLi60u0R3QzLXmkrh0PjUrUlw3xZZNx5IHxnubu9JPHufNSqWYwWfQDrmrlyqGh3SEQ/s1600/oliyile+therivathu.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="960" data-original-width="618" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgD8pIfB7x1PkWReXFchReEjxIaqa33GwWhBjhgh2IEch-L2Ho02ieejGHUm3hO0npAyVfboz4zVLi60u0R3QzLXmkrh0PjUrUlw3xZZNx5IHxnubu9JPHufNSqWYwWfQDrmrlyqGh3SEQ/s320/oliyile+therivathu.jpg" width="206"></a></div>
<div class="MsoNormal">
<br></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "latha" , sans-serif; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">ஒளியிலே தெரிவது – வண்ணதாசன் </span><o:p></o:p></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "latha" , sans-serif; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">தமிழின் எழுத்துப் புத்தர்களில் ஒருவராக இருக்கும் வண்ணதாசன் எழுத்தை ஒளியிலே
தெரிவது மூலம் நுகர முடிந்தது. <span style="mso-spacerun: yes;"> </span>தமிழ்
இலக்கிய உலகின் மிகுந்த தனித்துவம் மிக்க எழுத்துப்பாணி இவருடையது. </span><o:p></o:p></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "latha" , sans-serif; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"></span></div>
</div><a href="https://www.malartharu.org/2020/05/oliyile-therivathu-vannadaasan.html#more">மேலும் படிக்க»</a>Kasthuri Renganhttp://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-5208611175048594293.post-86310830060505898312020-04-30T03:30:00.000+05:302020-04-30T14:28:39.008+05:30ஜோனதன் லிவிங்க்ஸ்டன் சீகல்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjNmsEAcL_fTSsNx3UnbNodAK8jr9K0HvMF2rdxsTJR_KN23z6XkBV4IRmCgI6uw76I0fGLI1xRnoOi_BF6ib6_pTV8UpTDjVSmDjpKhhrk6xU6VjYeUBfWhMvAym19p0l9yS8zwNVo1xM/s1600/jonathan+livingston+seagull.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="180" data-original-width="105" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjNmsEAcL_fTSsNx3UnbNodAK8jr9K0HvMF2rdxsTJR_KN23z6XkBV4IRmCgI6uw76I0fGLI1xRnoOi_BF6ib6_pTV8UpTDjVSmDjpKhhrk6xU6VjYeUBfWhMvAym19p0l9yS8zwNVo1xM/s1600/jonathan+livingston+seagull.jpg" /></a></div>
<br />
ஜோ ஒரு சி கல், கடற்பறவை, சற்றும் "பொறுப்பற்ற" பறவை.<br />
<br />
<a name='more'></a>ஒரு பறவையாக லட்சணமாக குட்டி மீன்களை வேட்டையாடினோமா, பசியாறினோமா என்றில்லாமல் பசித்தால் கூட பறந்துகொண்டே இருக்கும் கனாக்கார ஜோனதன்லிவிங்க்ஸ்டன் சீகல்லை அவன் அம்மா திட்டாத நாட்களே இல்லை.<br />
<br />
யாருடைய அறிவுரையும், திட்டும், ஏளனப் பார்வைகளையும் ஜோனதனை பாதிக்கவேவே இல்லை.<br />
<br />
"நீ ஒரு இறகுகளும் எலும்பும் கொண்ட பிராணி" என்கிற அவன் அம்மாவின் கோபம் நிறைந்த வார்த்தைகள் ஜோவை பாதிக்கவே இல்லை.<br />
<br />
"அம்மா நான் ஒரு பறவை, பறத்தல் என் வாழ்வு, பறத்தலின் அத்துணை சாத்தியங்களையும் முயற்சித்துப் பார்க்காமல் என்ன வாழ்வு இது, குட்டி மீன்களை கொத்திக்கொண்டு, கடற்கரையில் கிடக்கும் நாறிப்போன ரொட்டித் துண்டுகளை திருடிக்கொண்டு என்ன வாழ்வம்மா இது என்கிறான் ஜோ"<br />
<br />
ஒரு நாள் மாலை இரண்டாயிரமடி உயரத்தில் இருந்து விரைந்து இறங்கும் வித்தையில் நூற்றி நாற்பது கி.மி வேகத்தில் வரும் பொழுது காற்றின் வேகம் அவனை சுழற்றிவிட்டு கட்டுப்பாட்டை இழக்கச்செய்து கடலில் விழ வைக்கிறது.<br />
<br />
கடல் நடுவே இறகுகள் ஈயம் போலக் கனக்க, அம்மா சொன்னதுதான் சரி "நான் வெறும் சிறகுகளும் எழும்பும் கொண்ட பிராணி மட்டுமே " என்று நினைத்துக் கொண்டு பறக்கிறான்.<br />
<br />
எல்லாம் சில நிமிடங்கள் மட்டுமே, மற்ற சின்ன பறவைகள் எப்படி அதி உயிரே பறக்கின்றன, விர்ரென கீழே இறங்குகின்றன என்பதைப் நினைவு கூர்கிறான்.<br />
<br />
அந்த கரும் இருளில், மீண்டும் மேலேறத் துவங்குகிறான், மீண்டும் நான்காயிரம் அடி, மீண்டும் டைவ் ஆனால் இம்முறை தன்னுடைய நீண்ட இறகை உடலோடு அணைத்துக்கொண்டு, இறகின் வெளி நுனியை மட்டும் மெல்ல விரிக்க இரநூற்றி இருபது மைல்\ வேகம் வசப்படுகிறது, எந்த உயிரோடு இருக்கும் கடற் பறவையைவிடவும் அதீத வேகம், புளித்த விரைத்த பிரட் துண்டுகளைத் தின்னும் தன் சகாக்கள் கற்பனை கூட செய்து பார்க்க இயலாத வேகம். கரிய வானத்திலிருந்து கடல்பரப்பை நோக்கி வரும் பீரங்கி குண்டுஅவன்.<br />
<br />
மறுநாள் இந்த வித்தையை மீண்டும் செய்து பார்க்கிறான், கடற்பரவைகளின் ஆட்சிமன்றக் குழு அழைக்கிறது, கடற் பறவைகளின் பெரும் அவமானச் சின்னம் நீ , உன்னை சமூக விலக்கம் செய்கிறோம் என்கின்றனஅவை.<br />
<br />
ஜோ, தனியே பறக்கிறான், கடலின் மேற்பரப்பில் இருக்கும் மீன்களை அல்ல கடலின் பத்தடி ஆழத்தில் இருக்கும் மீன்களை பிடிக்கும் வித்தையை அவன் அறிந்து வைத்திருக்கிறான், கடல் மட்டுமல்ல அடர் வனங்களுக்கு மேலே, நகர்களுக்கு மேலே பறந்து வித்யாசமான அருமையான சுவையுடைய பூச்சிகளை, புழுக்களை ரசித்து உண்கிறான்.<br />
<br />
ஒரு நாள் அவனைப்போலவே வித்தை தெரிந்த இரண்டு கடற் பறவைகள் அவனோடு பறக்கின்றன, அவன் ஆர்வமாக அவர்களோடு பறக்க அவை அவனை சொர்க்கம் அழைத்துச் செல்கின்றன. அங்கே மிகச் சில சீகல்கள் மட்டுமே இருகின்றன.<br />
<br />
ஆனால், ஒவ்வொன்றும் பறத்தலின் எல்லைகளை விரிவு செய்துகொண்டே இருக்கின்றன<br />
<br />
தலைமைப் பறவையான சியாங் கல் இதுவரை ஜோனதனுக்கு தெரியாத பல பறக்கும் வித்தைகளைச் சொல்லித்தர உச்சகட்டமாக மன வேகத்தில் பறக்கும் வித்தை கைகூடுகிறது ஜோனதனுக்கு.<br />
<br />
காலம், நேரம், இடம் இவையெல்லாம் பொய்த்துப் போகும் வேகம், விரைவுப் பறப்பு<br />
<br />
நீ வெறும் இறகுகள், எலும்புகள் கொண்ட பிராணி அல்ல, நீ ஒரு எண்ணத்தின் வடிவம் என்கிறார் குரு.,<br />
<br />
பல்வேறு கிரகங்களுக்கு பறந்து பயிற்சி செய்கிறார்கள் இருவரும்.<br />
<br />
இறுதியில் ஜோ மீண்டும் தன் குழுவுக்கு திரும்பி அவர்களை பயிற்றுவிக்க விரும்புகிறது.<br />
<br />
என்ன நிகழ்கிறது என்பதை மூன்றாம் பகுதியில் சொல்கிறார் ரிச்சர்ட் பாஷ் ..<br />
<br />
எழுத்தாளர் ரிச்சர்ட் பாஷ் ஒரு விமானி, அதுவும் எப்போதும் பறக்க விரும்பும் விமானி என்பது நூலின் அற்புதத்திற்கு ஒரு காரணம்.<br />
<br />
பறத்தலின் நுட்பங்களை, அவர் சொல்கிற நேர்த்தி அற்புதமான அனுபவம்.<br />
<br />
இது ஒரு ஆங்கில நூல்.<br />
<br />
உலகின் அதி முக்கியமான நூற்களில் ஒன்று.<br />
<br />
அவசியம் படிக்க வேண்டிய நூல்<br />
<br />
தொடர்வோம்<br />
<br />
மது</div>
Kasthuri Renganhttp://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-5208611175048594293.post-62162627205422064052020-04-29T15:32:00.000+05:302020-04-29T15:32:22.563+05:30இர்பான் கான் 1967-2020<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEilX-PzO0AbmSXFmxqmMa-jJrBOokbfY3ui2we3GW0bnMqhsGGW8zcs6HB_YOqIjNg_tlY3y7nZYO4a4jWafUjpmpsDSCM0BIScIUcZDJJ3Pc_LaIMVzPnatzIWo-x0H-k1_TVKSaj67pA/s1600/596px-Irrfan_Khan_May_2015.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="900" data-original-width="596" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEilX-PzO0AbmSXFmxqmMa-jJrBOokbfY3ui2we3GW0bnMqhsGGW8zcs6HB_YOqIjNg_tlY3y7nZYO4a4jWafUjpmpsDSCM0BIScIUcZDJJ3Pc_LaIMVzPnatzIWo-x0H-k1_TVKSaj67pA/s320/596px-Irrfan_Khan_May_2015.jpg" width="211"></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">இர்பான் கான் </td></tr>
</tbody></table>
இன்று மதியம் இவரது பேட்டியை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தோம். கேள்விகளுக்கு இவர் பதிலளித்த விதம் ஆசம், இணையர் ஏங்க ஹீரோக்களை விட வில்லன்கள் இவ்வளவு ஸ்மார்ட்டா இருக்காங்க என்றார்...சில வினாடிகளில் ரிப் இர்பான் பதான் என்றார்கள், ஜனாதிபதி, பிரதமர், ஆளுமைகள், அரசியல் வாதிகள் என தொடர்ந்து இவருக்கு அஞ்சலி செய்திகளை வெளியிட அவற்றை கீழே உருட்டியது அந்த சானல்.<br>
<br>
</div><a href="https://www.malartharu.org/2020/04/irrfan-khan-1967-2020.html#more">மேலும் படிக்க»</a>Kasthuri Renganhttp://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.com3