ஜோரான முகநூல் பகிர்வு



முக்கிய செய்திகள். 
பக்கத்திற்கு எமது நன்றிகள் 

நாணல் நண்பரகள் குழுவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

நண்பர் ஒருவர் வீட்டு விழா ஒன்றில் மிச்சமிருந்த சாப்பாட்டை அவரின் ஒப்புதலோடு கேட்டு பெற்று, மதுரை வீதியெங்கும் இருந்த ஆதரவற்றவர்கள், முதியவர்கள் என 30க்கும் மேற்ப்பட்டவர்களுக்கு வாழை இலையில் உணவை எடுத்து சென்று பாரிமாறினோம். எங்களுக்கு கிடைத்த உணவை இரவு பத்துமணிக்குதான் நண்பரின் ஆட்டோ ஒன்றில் கொண்டு சென்றோம். ஆனால் அந்த நள்ளிரவில் ஒருவேளை உணவு கூட உட்கொள்ளாமல் வீதியெங்கும் நடுங்கியப்படி படுத்திருந்த முதியவர்களுக்கு உணவை பரிமாறி விட்டு... கண்ணீர் துளியோடும், கனத்த மனதோடும் திரும்பினோம்..

பசிக்காத போது நிறைந்த வயிற்றில் நண்பர்களோடு சிற்றுண்டி தேடி சென்று தேநீரும் நொறுக்கு தீனிகளையும், நாம் அள்ளி தின்னும் இதே தேசத்தில்தான், பெரும் பசியில் வயிற்றை இறுக்க அழுத்தி பிடித்தபடி தெருவில் கிடக்கும் பலருக்கு ஒரு வேளை, ஒரு கைப்பிடி சோறு கனவாகிப் போகிறது.

மதுரையில் உள்ள நண்பர்களுக்கு,
குறிப்பு : உங்கள் வீட்டு விழாவின் போதோ அல்லது உங்களுக்கு தெரிந்தவர்கள் வீட்டு விழாவின் போதோ, உணவு பண்டங்கள் மிச்சமிருந்தால் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்..
நேரடியாக வந்து உணவு பண்டங்களை பெற்று கொள்கிறோம். இது போன்ற பணிகளை நீங்களே முன்வந்து செய்யலாம். உங்களுக்கு நேரம் இல்லாத போது எங்களை தொடர்பு கொண்டு செய்விக்கலாம்.

தொடர்புக்கு : 9543663443, 9976444674, 9952004390
நாணல் நண்பரகள் குழு,
மதுரை.

மதுரை நண்பர்களின் கவனத்திற்காக

பகிர்வு
மது

எப்படி இப்படி ஒரு படம் ?






Comments