ஆரோக்கிய அரசியல் ஒரு வரையறை


 
 

 
தி.மு.க வை சேர்ந்த இளைஞர் சீனிவாசனிடம் தோல்வியுற்றார் காமராஜர்.


அப்பொழுது தி.மு.க வினர் "படிக்காத காமராஜரை படித்த சீனிவாசன் வெற்றி பெற்றார்" என சுவரொட்டிகள் ஒட்டி தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடினர்.


அதற்கு பதிலடியாக ஒரு சுவரொட்டி அதே பகுதிகளில் ஜொலித்து சிந்திக்கவும் வைத்தது...


அது "படிக்காத காமராஜர் கட்டிய பள்ளியில் படித்த சீனிவாசன் வெற்றி பெற்றார் அதற்கு வாழ்த்துக்கள்" என்று....

அந்த சுவரொட்டியை ஒட்டியது அய்யா தந்தை பெரியார்.


அந்தளவு காமராஜரை தாங்கி பிடித்தார் அய்யா பெரியார்.


சொந்தமாய் கல்வி நிலையம் தொடங்கி கோடிகளை சுரண்டவோ, நிலம் புலங்களை வாங்கி சொத்து சேர்க்கவோ அல்ல..


முதுகெலும்பில்லாமல் சாய்ந்து இருந்த தமிழ் சமூகம் சுயமரியாதையோடு நிமிர, அதிகாரத்தில் இருந்த பச்சை தமிழன் காமராஜரை பயன்படுத்திகொண்டார் அய்யா பெரியார்.


அவருக்கு வளைந்து கொடுத்தார் கல்வி கண் திறந்த காமராஜர். தன்னின் குடும்பத்தை வளர்த்து கொள்ளவோ, மாளிகைகளை கட்டவோ அல்ல....

தான் வளைந்தாவது தன் தமிழ் சமூகம் நிமிர வேண்டும் என்று... சுய சாதிக்குள் அடைந்து போனவர் அல்ல காமராஜர். சாதியம் மறைந்து சமத்துவம் உருவாக உழைத்த உத்தமர்.


இரண்டு போராளிகள் சேர்ந்து தமிழினம் சுயமரியாதை பெற சாதி ஒழித்து, கல்வி அறிவு பெற்று, சம நிலை மனிதம் மலர பாடுபட்டனர்.


இந்த இரண்டு போராளிகளும் தமிழகத்தை சீர்திருத்தாமல் இருந்திருந்தால்..... அனைத்திலும் பின்தங்கி இருக்கும் ஒரு சில வட மாநிலங்கள் போல தமிழகம் இன்று இருந்திருக்கும்.



நன்றி:- தமிழ் செல்வன்....

Comments