நகை.. முரண்

 
வீட்டுக்கு வரும் வழியில் ஒரு கடை முன்பாக கேட்ட உரையாடல்:

ஏழு வயது சிறுமி, அவளுடன் ஐந்து வயது சிறுவன். அவன் ஏதோ கேட்கிறான். அவள், “அதெல்லாம் வாங்கக்கூடாது. டாடி சொல்றேன், ஒழுங்கா கேட்டுக்கணும்,” என்கிறாள்.

கடைக்காரருக்கு சிரிப்பு வருகிறது. “என்னம்மா உன்னை டாடின்னு சொல்ற? நீ ஒரு கேர்ள், அப்படின்னா உன்னை மம்மின்னுதானே சொல்லணும்?”

“இல்லை அங்கிள். நான்தான் இவனை அடிப்பேன். அவன் என்கிட்ட அடி வாங்குவான். அப்ப நான் டாடிதானே?”
 

மனைவியிடமிருந்து அலைபேசி அழைப்பு....
"ஏங்க எங்கங்க இருக்கீங்க?"
"உனக்கு நேரம் காலமே தெரியாது ... பகல்ல நான் எங்கே இருப்பேன் ... ஆபிஸ்லதான் ... ரொம்ப வேலையாஇருக்கேன் ... இப்போ என்னால பேசுறதுக்கு நேரம் இல்லை ... ப்ரீ ஆனதும் நானே கூப்பிடுறேன்"
"அதுக்கில்லைங்க..."
"அதான் சொல்றேன்ல"...
"குழந்தைங்க ..."
"என்ன குழந்தைங்களுக்கு என்ன?"
"ஒண்ணுமில்ல ... உங்களுக்கு இரண்டு டேபிள் பின்னால குழந்தைகளோட ஐஸ் கிரீம் சாப்டுகிட்டு இருக்கேன் . உங்க கூட இருக்கற பொண்ணு யாருன்னு குழந்தைங்க‌ கேக்கறாங்க ... நான் என்ன பதில் சொல்லட்டும்?"
 

Comments

Post a Comment

வருக வருக