வாழ்வின் மந்திரப் பூ


இப்பூ
பூக்காவிடில்
வாழ்வே
பாலைவனம்


மகிழ்விலும்
மருளிலும்
துணையாய் தினம்

வாழ்வின்
பிடிப்பாய்முகிழ்க்கும் பூ
நட்பு

இது
வாழ்வின்
வண்ணங்கள் செறிந்ததோர்
மந்திரப் பூ



நட்புடன் 
- மது

Comments

  1. அருமையான பூ
    வாடா பூ
    நட்பு!
    அருமை கவிதை மது.
    நட்பு பற்றிய என்னுடைய கவிதை ஒன்று http://thaenmaduratamil.blogspot.com/2013/03/natpirku-idaiveli-undo.html

    ReplyDelete
  2. அன்பால் வரும் நட்பு எதிர்பார்ப்பு இல்லாதது.நல்ல கவிதை நன்று.

    ReplyDelete
    Replies
    1. நன்றி டீச்சர்

      Delete
  3. நட்பூ என்றும் சிறப்பூ...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நட்புக்கு நன்றி அண்ணா

      Delete
  4. நட்பை மிக அழகாக சொன்ன வரிகள் பாராட்டுகள் மது

    ReplyDelete
    Replies
    1. பெருந்தன்மைக்கு நன்றி

      Delete
  5. இப்பூ
    பூக்காவிடில்
    வாழ்வே
    பாலைவனம்

    உண்மை தான்
    புனிதமான நட்பிருந்தால்
    துயரம் தூரப் போய்விடுமே !
    அழகாக அமைதியாக சொல்லி வீட்டீர்கள்.
    நன்றி வாழ்த்துக்கள்....!

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் ...

      நன்றி
      கவிஞரே

      Delete
  6. உண்மை நட்பு இல்லாத வாழ்வு பாலைவனம் தான்.
    அருமையான படம்.

    ReplyDelete
  7. Anonymous4/2/14

    வணக்கம்
    நட்பு பற்றிய தங்களின் கவிப்பூ.... மனதை நெருடியது... வாழத்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. மன்னிக்கவும், இது ஒரு முயற்சி எனவே மனதை வருடாமல் நெருடியிருக்கலாம்...

      வருடும் கவிதைகளை தர முயல்கிறேன்

      வருகைக்கு நன்றி வணக்கம்

      Delete
  8. வாழ்வின் மந்திரப் பூ நட்பு (பூ) என்று சொன்னது அருமை! எங்கள் இருவரின் அனுபவமும் அதே! அத்னால் இதை உணர்ந்து, சிலிர்த்து, அனுபவித்து பாராட்டவும் முடிகின்றது!

    துளசிதரன், கீதா

    ReplyDelete

Post a Comment

வருக வருக