மாதொரு பாகன் நாவல் பதிவிறக்கம்


சமீபத்தில் வந்த படைப்புகளில் தேவையே இல்லாமல் அதிகம் விமர்சிக்கப்பட்ட நாவல்.  திரு.ஷாஜகான் அவர்களின் பகிர்வு இது. அவருக்கு எனது நன்றிகள்.

இணைப்பு இதோ
படித்துவிட்டு பகிருங்கள்
எதிர்க் கருத்துக்கள் ஏதும் தோன்றினால் தாரளமாக பின்னூட்டம் இடுங்கள்.

இது குறித்து ஞாநி அவர்கள் முகநூலில் தெரிவித்திருப்பதையும்  கவனத்தில் கொள்க.

அன்பன்
மது

வெறும் கருத்துரிமைக்கு எதிரான போராட்டம் என்று மட்டுமே பேச முடியவில்லை. 
இது குறித்து பல தளங்களில் வெளியிடப்பட்டுள்ள கருத்துக்கள் கவனத்துக்கு உரியவை. சில பின்னூட்டங்களை நான் வெளியிட விரும்பவில்லை. ஏன்? அது அவர்களின்மீது சட்ட நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கம் என்பதால். 

நாவலில் என்னை நான் தொலைத்துக் கொண்டிருக்கிறேன். வாசிப்பு முடித்ததும் கருத்தினை சொல்கிறேன். இதுவரை நண்பர்களின் அணியில் இருந்தேன். இன்னமும் தொடரவே விருப்பம். ஆனால் எனக்கும் கருத்து சுதந்திரம் இருக்கிறது என்றே நம்புகிறேன்.

Comments

  1. Replies
    1. வருகைக்கு நன்றி

      Delete
  2. அருமையான வேலை செய்தீர்கள் மது.
    நான் ஏற்கெனவே -சென்னைப் புத்தகக் கண்காட்சியில்- வாங்கிவிட்டேன் என்றாலும், மீண்டும் பதிவிறக்கம் செய்து வைத்துக்கொண்டேன். மிக்க நன்றி (காலச்சுவடு பதிப்பகத்தார் கோவித்துக்கொள்ள மாட்டார்களே?) த.ம.3

    ReplyDelete
    Replies
    1. எழுபது பக்கங்கள் வந்துவிட்டேன் இன்னும் ஏன் எதிர்க்கிறார்கள் என்பது தான் புரியமாட்டேன் என்கிறது ..
      அப்புறம் காலச்சுவடு கண்ணன் இதற்கு அனுமதி கொடுத்துவிட்டார் எல்லோருக்கும்..
      சங்கடமான நிகழ்வுகள் இவை சரி முழுதாக படித்துவிட்டு சொல்கிறேன் என் கருத்தை

      Delete
  3. மது,

    சென்னை புத்தக கண்காட்சிக்கு செல்ல ஒரு காரணம் வைத்திருந்தேன். அதை உடைத்து நொறுக்கிவிட்டீர்கள். எனிவே உங்களின் மாதொருபாகன் பி டி எப் இணைப்புக்கு மிக்க நன்றி. தரவிறக்கம் முடிந்துவிட்டது. வாசிப்பு இனிமேல்தான்.

    ReplyDelete
    Replies
    1. ஷாஜகான் அவர்களின் முயற்சி இது ...
      முகநூலில் இருந்து சுட்டுவிட்டேன்..
      நன்றி காரிகன்

      Delete
  4. அண்மையில் அதிகம் பேசப்பட்டது. தற்போதைய விவாதத்திற்குப் பொருந்திவருவது. பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி முனைவரே

      Delete
  5. வணக்கம்

    இதோ பதிவிறக்கம் செய்கிறேன்... நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரூபன் அவர்களே

      Delete
  6. I think I am very liberal guy. That's how I rate myself. I read those two pages where PerumaaL Murugan talked about some sort of "sex swap" or "free sex" or “orgy” or whatever you would like to call happening in thiruchengode (read those pages from one of the websites).

    Suppose I am from that town or if the town he mentioned were my hometown (I grew up in a very rough neighborhood in TN), I am sure my town people will NOT leave that writer "alive". I am very honest here.

    I am an agnostic or an atheist guy. This ISSUE has NOTHING to do with RELIGION as they project. Let us keep the politicians and religious groups away and look at the issue.

    Whatever this author described is nothing but garbage I would call. Already our community is so screwed up these days. This guy is trying to make it worse by writing some "trash" like this.

    Yeah, people should condemn this kind of writing because those people are seriously offended by his "BS". A guy with some morals will dare to write like this. I wonder how this author grew up? What kind of parents this "murugan" had? He seems like a SICK SOB if you ask me. His mind is so f***ed up I would say.

    Yeah we have freedom of speech. It is a fiction. Right. But the town he names does exist. There are mothers living there. How would they feel when they read this? It is not a town namely "jupiter" or something. The way he has written does not look that "imagination" either.

    -to be continued

    ReplyDelete
  7. The following is a response by a guy who lives in that town. I got this from luckylookonline.com website where those particular pages have been shown as an "image"

    http://www.luckylookonline.com/2014/12/blog-post_29.html

    Here he goes..

    ****இங்கே பிரச்சினை புத்தகத்தை எரிப்பது பற்றி அல்ல. கருத்து சுதந்திரம் பற்றியதும் அல்ல. பெருமாள் முருகன் எழுதிய நாவலில், திருமணமாகி குழந்தையில்லாத பெண்கள் அனைவரும், திருச்செங்கோட்டு கோயில் விழாவில், தனக்கு பிடித்த ஆணோடு கூடி குழந்தை பேறு பெற்றுக்கொள்வதாக சித்தரித்து, அதை நியாயப்படுத்தியும் வருகிறார். மேலும், இப்படி பிறந்த குழதையைத்தான் “சாமி கொடுத்த குழந்தை” போன்ற பேச்சு வழக்குகள் குறிப்பதாகவும் எழுதியுள்ளார். இதைப் படித்த எங்கள் பகுதி பெண்கள் கொதிப்படைந்துள்ளனர். இங்கே விரதமிருந்து, கோயில் கோயிலாக சுற்றி, குழந்தை பெற்ற அத்தனை பெண்களையும் கேள்விக்குறியாக்கியிருக்கிறது. தங்கள் பகுதி பெண்களை இவ்வலவு கீழ்தரமாக சித்தரிக்கும் ஒரு நாவலை எரிப்பது அவர்களது எதிர்ப்பின் / கோபத்தின் அடையாளமே. இதை பெரிது படுத்துவது முக்கிய பிரச்சினையை திசை திருப்பும் ஒரு தந்திரமாகவே படுகிரது. தங்கள் குலப்பெண்களை கீழ்தரமாக சித்தரிக்கப்பட்டதை பார்த்துக்கொண்டு கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது, சிலர் உணர்சிவசப்படத்தான் செய்வார்கள்.. இதை உளவியல் ரீதியாக, அவர்கள் நிலையில் இருந்து சிந்திக்க வேண்டும்.

    * திருசெங்கோட்டைப் பற்றிய ஏராளமான இலக்கியங்கள், குறிப்புரைகள், திருசெங்கோட்டைப் பற்றி விளாவாரியாக எழுதப்பட்ட வெள்ளையர் ஆவணங்கள், ஏன், (பெருமாள் முருகன் தொகுத்த) நாவலில் குறிப்பிடப்பட்ட காலகட்டத்தில் வாழ்ந்த திரு.முத்துசாமி கோனார் அவர்களின் கொங்குநாடு புத்தகத்தில் திருசெங்கோட்டை பற்றி விலாவாரியாக கூறப்பட்டுள்ளது, அதிலும் இல்லை. இந்த கோயில் மண்டப கட்டளைதாரர்கள் (பல்வேறு ஜாதியை சேர்ந்தவர்கள்), முன்னாள் இந்நாள் நிர்வாகிகள் எவருமே இதற்கான எந்த ஒரு முகாந்திரமும் இல்லை என்று கூறியுள்ளனர். நிலை இப்படி இருக்க பெருமாள் முருகனின் ஆதாரமற்ற கூற்றை நீங்கள் ஆதரிக்கிரீர்களா?

    *நாவல் நடந்த காலகட்டமாக சொல்லியிருப்பது தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் தீயாக பரவிய காலம். இப்படியொரு சம்பவம் (மனதளவில் ஏற்றுக்கொள்ளப் பட்டு) நடந்திருக்குமெனில் திராவிட இயக்கத்தவர்கள் கூட இதை விட்டு வைத்திருப்பார்களா? இதைப்பற்றி இதுவரை வந்த எந்தவொரு சமூக வரலாற்று ஆய்வாளர்களும் குறிப்பிடாதது ஏன்?

    * மாதொருபாகன் நூலை மட்டுமல்லாது பெருமாள் முருகனின் அனைத்து படைப்புக்களையும் வாசித்துள்ளேன். வாசித்தவர்களுக்கு அவரது சித்தாந்த-எண்ண ஓட்டம் பற்றி உணர முடியும். மாதொருபாகன் நூலை வாசித்தபோது எனக்கு முதலில் தோன்றியது நீங்கள் எழுதிய ஆய்வுலகின் அன்னியகரங்கள் கட்டுரைதான். இந்த புத்தகத்தை எழுதியதன் பின்னணி குறித்து பெருமாள் முருகனே அவரது முகவுரையில் தெரிவித்துள்ளார். டாடா மற்றும் ரோஜா முத்தையா நூலகம் போன்ற அமைப்புகள் உள்ளன. போர்டு பவுண்டேசனின் மறைமுக செயல்பாடுகளின் வெளிப்பாடு இது.

    புனைவின் எல்லையில் இருந்து பார்க்கவேண்டிய இலக்கியப் படைப்பு என்று கூறியிருந்தீர்கள். இது வெறும் புனைவு என்றால் யாரும் வருந்தமாட்டார்கள். நாவலின் முன்னுரையில் இவர் களத்தில் கண்டுபிடித்த விஷயத்தை கருவாக கொண்டு எழுதிய புனைவு என்று உண்மைச்சாயம் பூச முயல்கிறார். ஒரு நாவலில் கற்பனையாக எழுதியிருந்தால் இங்கு எந்த பிரச்சினையும் இல்லை. நிஜ அடையாளத்தை கொண்டு எழுதுவது, அந்த வட்டார மக்களின் வாழ்க்கையை பாதிக்கும் விஷயமாகத்தான் பார்க்க வேண்டும். கருத்துக்கு சுதந்திரம் இருப்பது போல எல்லைகளும் உள்ளது.****


    அப்புறம் சும்மா ஆளாளுக்கு கருத்துச் சுதந்திரம் மண்ணாங்கட்டினு பேசக்கூடாது. உங்க கருத்துச் சுதந்திரத்தை வைத்து உங்க அம்மா, அக்காவை பத்தி எழுதுங்க, அல்லது உங்க மனைவி, கொழுந்தியா பத்தி தாறுமாறா எழுதுங்க. அதை விடுத்து ஒரு ஊரில் வாழும் பெண்கள் இப்படி வாழ்கிறார்கள் என்று எழுதினால்.. அவர்கள் செருப்பை கழட்டித்தான் அடிக்க வருவார்கள். பெருமாள் முருகனுக்கு பூமாலை எல்லாம் போட மாட்டார்கள்.

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு நன்றி வருண்

      Delete
    2. varun, your thoughts are 100% true

      Delete
  8. பதிவிறக்கம் செய்தாயிற்று.
    வாசித்தபின் கருத்துப் பகிர்கின்றேன்!

    நல்ல பகிர்வு! + நன்றியும் வாழ்த்துக்களும் சகோதரரே!

    ReplyDelete
  9. Anonymous18/1/15

    2011லேயே மாதொருபாகனைப் படித்திருந்தாலும், தற்போதைய விவகாரத்திற்குப் பிறகு புத்தகம் ஒரு சுற்றுக்குப் போயிருக்கிறது. திரும்ப வருமா என்று தெரியவில்லை. மின்புத்தகத்துக்கு நன்றி. தரவிறக்கிக் கொண்டேன்.
    ஆலவாயனும் அர்த்தநாரியும் கிடைத்தால் இணையுங்களேன்.
    நன்றி.

    ReplyDelete
  10. நன்றி! டவுன்லோட் செய்து கொண்டேன். புத்தகத்தையும் வாங்க வேண்டும். மீண்டும் வருவேன்.
    த.ம.6

    ReplyDelete
  11. நன்றி மது நண்பரே! படித்து விட்டுக் கருத்து கண்டிப்பாக வரும்....

    ReplyDelete
  12. சர்ச்சை உண்டு பண்ணியதால் சென்னை புத்தக கண்காட்சியில் செவ்வாயன்று தேடினேன் கிடைக்கவில்லை! தரவிறக்கம் செய்து படிக்கிறேன்! இப்போது எழுத்தாளர் பக்கம் இருக்கும் நான் படித்தபின் மாறுவேனா என்று தெரியாது. ரிலாக்ஸ் பிளிஸ் வருண் பின்னூட்டத்தில் சொல்லியுள்ளது யோசிக்க வைக்கிறது! கற்பனை எனில் தவறில்லை! உண்மைகளை எழுதும் போது அது பிறரை பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும். நன்றி!

    ReplyDelete
  13. நானும் முகநூலில் இருந்து இணைப்பை எடுத்து வாசித்துக் கொண்டிருக்கிறேன். முடித்தால்தான் விவரம் தெரிய வரும்...

    ReplyDelete
  14. படித்துவிட்டுச் சொல்கிறேன் அண்ணா

    ReplyDelete
  15. மிக்க நன்றி நண்பரே.

    ReplyDelete
  16. இந்த நாவலை படித்ததில்லை.
    இதற்கு எதிர்மறை விமர்சனங்கள். அவர் எழுத்துலகை விட்டு வெளியேறிவிட்டார் என்றெல்லாம் கேள்விப்பட்டபோது, அப்படி என்ன தான் சொல்லியிருக்கிறார் எர்னு யோசித்ததுண்டு. இப்பொழுது தங்களின் இந்த பகிர்வின் மூலம் இந்த நாவலை வாசிப்பதற்கு வாய்ப்பு கிட்டியது. நன்றி

    ReplyDelete
  17. நண்பரே இந்த நூலினை முழுவதும் படித்து விட்டேன்
    /திருச்செங்கோடு தொடர்பான கள ஆய்வில் ஈடுபட்டபோது எனக்குக் கிடைத்தவை பல. படைப்பு உற்‘ந்துதல் கொடுத்த விசயங்களுள் இன்று இந்நாவல்/ என்று குறிப்பிடுகிறார்
    இதுதான் சர்ச்சைக்கு காரணம் என்று நினைக்கின்றேன்
    எழுத்தாளருக்கு படைப்பு உரிமை இருக்கிறது, அதனை வரவேற்போம்,
    ஊரில் பெயரையும். கோயிலின் பெயரையும் கூட கற்பனையாகவே படைத்திருக்கலாம்

    ReplyDelete
  18. ஆயிரத்திற்கும் குறைவானவர்கள் மட்டுமே படித்திருக்கக் கூடிய இந் நாவலை, எதிர்த்து எதிர்த்தே, இலட்சக் கணக்கானவர்களைப் படிக்க வைத்து விட்டனர் போராட்டக் குழுவினர்
    தம +1

    ReplyDelete
  19. கொடுக்கப்பட்டுள்ள இணைய இணைப்பு வேலை செய்யவில்லை, சரியான இணைப்பை கொடுக்கவும்.
    நன்றி !

    ReplyDelete

Post a Comment

வருக வருக