அருட் பெரும்ஜோதி தனிப்பெருங்கருணை

அறைநடுவே
விரிந்த மேசையின்
பரப்பிய தட்டுக்களில்
விதவிதமாய்
அசைவம்
ரசித்து உண்ணும்
அவரைத் தவிர்த்து
நிமிர்ந்து பார்த்தேன்

சுவற்றில் கண்ணடிச் சட்டத்தில்
அருட் பெரும்ஜோதி
தனிப்பெரும் கருணை

Comments

  1. முரண்பாடுதான் தோழரே....
    தமிழ் மணம் 1

    ReplyDelete
  2. அருமை! தோழரே! இப்படித்தான் பலரும்....கால்நடை கல்லூரி வளாகத்தில் வெளியில் போர்ட் இங்கு கறி விற்கப்படும்...அருகில் ரேட்டுடன்....

    கீதா

    ReplyDelete
  3. ஆஹா ஆஹா அருமை அருமை ! தொடர வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
  4. இதனால்தான் வள்ளலார் முன்பே “ கடை விரித்தேன் கொள்வாரில்லை “ என்று வருத்தப்பட்டு சொல்லிவிட்டார் போலிருக்கிறது.
    ( இன்று இரவு எந்த “மெஸ்”ஸில் சாப்பிட்டீர்கள்கள்? கவிதையும் ஒப்புவமையும் நன்றாக உள்ளன. )

    ReplyDelete
  5. அன்புள்ள அய்யா,

    ‘அருட் பெரும்ஜோதி தனிப்பெருங்கருணையே’ -என்ற வடலூர் வள்ளலார் .
    ‘புலால் புசித்தல் கூடாது; எவ்வுயிரையும் கொல்லலாகாது;
    எல்லா உயிர்களையும் தம்முயிர்போல் எண்ணுதல் வேண்டும்’ என்றார்.

    ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ -என்று பயிர்வாடத் தாம் வாடியவர் இராமலிங்க அடிகள்.

    ‘உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்’ - என்று வேண்டினார் நம் அருள் வள்ளல்.

    நன்றி.
    த.ம. 5

    ReplyDelete

Post a Comment

வருக வருக