இலக்கிய உலகின் புதிய பாதை

வணக்கம்

இந்த தலைமுறை வாசிப்பிலிருந்து விலகிப் போகிறது என்பதை கவலையோடு பேசும் நாம் புதிய யுக்திகளை பயன்படுத்துவதே இல்லை.

இன்னும் சொல்லப் போனால் இளம் தலைமுறை பயன்படுத்தும் ஊடகங்கள் குறித்து ஒரு ஒவ்வாமை இலக்கிய உலகில் இருக்கிறது.

இந்த விதத்தில் ஸ்ருதி டிவி ஒரு பெரும் பாய்ச்சலை செய்திருக்கிறது. என் வட்டத்தில் இருக்கும் நண்பர்கள், படிப்பதைவிட பார்ப்பதை, கேட்பதை விரும்புகிறார்கள். பவா தமிழ் இலக்கிய ஆளுமைகளில் மிக முக்கியமானவர்.

தற்போது பெருங்கதையாடல்கள் என்று நாவல்களைச் சொல்வதை ஒரு நிகழ்வாக நிகழ்த்தி வருகிறார். பெரும் கொண்டாட்டமாக இந்த நிகழ்வுகள் நடந்தேறுகின்றன.

கொரோனா கொடுமைகளில் கடும் மன உளைச்சலில் இருந்த எனக்கு பவாவின் இந்த கதையாடல்கள் பெரும் ஆறுதலைத் தந்தன.

முதன் முதலாக ஜெயமோகனின் அதிகம் பேசப்பட்ட கொண்டாடப்பட்ட யானை டாக்டரை இன்றுதான் கேட்டேன்.

நீங்களும் கேட்கலாமே.

மறக்காது சப்ஸ்கிரப் செய்யுங்கள்



அன்பன்
மது 

Comments

  1. சப்ஸ்கிரப் செய்து பலநாள் ஆச்சு...!

    ReplyDelete
  2. அருமை தோழரே காணொளி சிறிது பார்த்தேன் இணையம் பிரச்சனை பிறகு வந்து காண்பேன் பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  3. பாவா செல்லதுரை அவர்களின் காணொலிகளைக் கண்டு கேட்டு மகிழ்ந்து வருகிறேன்

    ReplyDelete
  4. கேட்கிறோம் கஸ்தூரி. பரிவை சே குமார் அவர்களும் பகிர்ந்திருந்தார் அப்போதே பார்க்கத் தொடங்கி இணையம் ஒழுங்காக இருந்தால் பார்க்க முடிகிறது. குறித்துக் கொண்டோம் மிக்க நன்றி

    கீதா

    ReplyDelete
  5. கால்நடை மருத்துவர்/யானை டாக்டர்...

    யானை டாக்டரை வாசிக்க வேண்டும்...இப்போது கேட்டுவிட்டேன்...நல்லாருக்கு

    கீதா

    ReplyDelete
  6. மகனுக்கும் சொல்லியிருக்கிறேன்,...கஸ்தூரி

    கீதா

    ReplyDelete
  7. நேற்று ஒரு காணொளி பார்த்தேன் கஸ்தூரி. நேரப் பற்றாக்குறை - விரைவில் மற்ற காணொளிகளும் பார்க்கிறேன்.

    ReplyDelete

Post a Comment

வருக வருக