ஒரு குழந்தை வளர்ந்து ஜாக்கியாகிறது,
இன்னொன்று கூடைப்பந்து அல்லது ஹாக்கியை விளையாடுகிறது.
இக்குழந்தையோ போட்டி வளையத்திற்குள் போகவே வெறுக்கிறது,
எனக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி, நான் அவர்கள் இல்லை அவர்கள் நான் இல்லை.
என் முழு இதயத்தோடு போட்டி வீரர்களை நான் ஆராதிக்கிறேன்,
வேடிக்கைக்காகவோ பணத்திற்காகவோ அவர்கள் விளையாடுவதை நான் ரசிக்கிறேன். 
பந்தய மைதானத்திற்குள் பெரும் பகட்டுடன் அவர்கள் நுழைவதை,
போட்டியில் ஒருவரை ஒருவர் தாக்கி ஊனப்படுத்திக் கொள்வதில் .
எனது கூச்சம் நிறைந்த பலவீனமான ஆன்மா பிறர் செய்யும் நாயகத்தன்மை வாய்ந்த செயல்களால் செறி ஊட்டப்படுகிறது.
ஆ என்பவன் 90 தப்படிகள் ஓடி வென்றான், ஆ என்பவன் வெற்றிவீரனை அடித்து தரையில் சாய்கிறான்,
அவனுடைய முதுகெலும்பை சிதைத்து.
நீங்க நினைக்கலாம் ஈகோவுக்காக இவங்க இடத்துக்கு நான் போக விரும்புகிறேன்னு,
நல்லது ஈகோவை சுலபமா மகிழ்வூட்டிகொள்ளலாம்,
ஆனா ஆர்வ மிகுதியில விளையாடுறவங்க ரொம்ப காட்டுத்தனமா விளையாடுறாங்க,
அவங்க விளையாட்டுல அடுத்தவங்க உணர்வுகளுக்கு இடமே இல்லை,
சமயத்துல எனக்குள்ளேயும் ஒரு போராட்டம் நடக்கும், ஈகோவா அறிவான்னு, எப்பவுமே அறிவு தான் ஜெயிக்கும்.