தமிழ்ப் படைப்புலகை கர்வம் கொள்ள செய்யும் எழுத்து நடை லட்சுமி சிவக்குமாருடையது.
சாவ் பாவ்லோ நகரில் வறிய சூழலில் ஊழலும் குடும்பத்தின் குழந்தை பிகோ தனது ஆசைக்கனவை நோக்கி அடி அடியாக நகர்வதே கதை.
வாசிக்கிறபொழுது பலமுறை அட்டைப்படக் குறிப்பைப் பார்த்துக் கொண்டே இருந்தேன்.
இது நேரடித் தமிழ் நாவல்தானா அல்லது கொண்டாடப்பட்ட ஒரு அயல்மொழி நாவலின் தமிழாக்கமா என்கிற கேள்வி வந்து கொண்டே இருந்தது.
கால்பந்தாட்டம் தங்கள் வாழ்வை அர்த்தப்படுத்துவதாக நினைக்கும் ஒரு கலாச்சாரப் பின்னணியில் எழுதப்பட்டிருக்கும் நாவல்.
கருணையும் மானுடப் பற்றும் கொண்ட கதாபாத்திரங்கள், சண்டையிட்டுக் கொள்ளும் அரசியல்வாதிகளும் வணிகர்களும், சர்வதேச எழுத்தாளர்களும் உள்ளூர் எழுத்தாளர்களும் என வகை வகையான கதாபாத்திரங்கள்.
பிரேசில் சிறையில் ஒரு நூலைப் படித்து அது குறித்து ஒரு கட்டுரை எழுதி தரும் கைதிகளின் தண்டனை காலத்தில் நான்கு நாட்களை குறைத்துக் கொள்ளலாம் என்பது ஒரு புதிய செய்தி. பிகோவின் தாத்தா அப்படி ஒரு சிறையில் இருந்த பொழுது தான் வெறிகொண்ட வாசிப்பாளராக மாறிப் போகிறார்.
லட்சுமி சிவக்குமார் போன்ற எழுத்தாளர்கள் தமிழ் இலக்கிய உலகிற்கு முக்கியமானவர்கள் .
சந்திப்போம்
அன்பன்
மது
Comments
Post a Comment
வருக வருக