கொஞ்சம் கதம்பம் ... (mix matters)



ஒருவர் போதையில்
தள்ளாடியபடி ஒரு கரண்ட் கம்பத்து
அடியில நின்னுகிட்டு, கம்பத்த தட்டி,.........

ஏய், கதவ தொறடி, உன் புருஷன் வந்திருக்கேன்!

ஏய், கதவ தொறடி, உன் புருஷன் வந்திருக்கேன்!

ஏய், கதவ தொறடி, உன் புருஷன் வந்திருக்கேன்!

பக்கதுல இருந்த மற்றொரு குடிகாரன் :-
அண்ணே, வீட்டுல
யாரும் இல்லதது போல இருக்கு!

இவன்:- இல்ல பிரதர், அவ வீட்டுல தான் இருக்கா....
பாருங்க மாடில லைட் எரியுது !




ஒருத்தர் கோவிலுக்கு சென்று தன் செருப்பை கழட்டி விடும் இடத்தில் "செருப்பை திருட நினைக்க வேண்டாம் -- பாக்சிங் சாம்பியன் "
என்று நோட்டீஸ் வைத்து விட்டு உள்ளே சென்றார்!

சாமி கும்பிட்டு விட்டு வெளியே வந்து தன் செருப்பை வைத்த இடத்தில் உள்ள பதில் நோட்டீசைப் பார்த்து
அதிர்ச்சி அடைந்தார்.

அது என்னவெனில் "என்னைப் பிடிக்க முயல வேண்டாம் -- அதெலடிக் சாம்பியன்".

என் தேசமும் எதிர் தேசமும் ..!



காலி வாட்டர் பாட்டில் கொடுத்து ரயில் கட்டணம் செலுத்தலாம்..!!!

பீஜிங் : காலி குடி நீர் பாட்டில்களை கொடுத்து, ரயில் கட்டணம் செலுத்தும் திட்டத்தை பீஜிங் சப்வே ரயில் அறிமுகம் செய்துள்ளது. சீனாவில் ரயில் பயணம் செய்யும் பயணிகள், காலி குடிநீர் பாட்டில்களை ஆங்காங்கே வீசுகின்றனர். இதனால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. காலி குடி நீர் பாட்டில்களை ஒன்றாக சேகரித்து மறு சுழற்சி முறையில் பயன்படுத்த பீஜிங் சப்வே ரயில் நிர்வாகம் முடிவு செய்தது.

# இந்தியாவில காலி குடிநீர் பாட்டிலுக்கு பதிலாக காலி குவார்ட்டர் பாட்டில் வச்சாதான் வியாபாரம் சூடா இருக்கும் .

சோனியா மன்மோகன்சிங் சிதம்பரம் மூவரும் விமானத்தில் செல்லும்போது

சோனியா ஒரு நூறு ரூபாயை கிழே போட்டு நான் ஒரு ஏழைஇந்தியனுக்கு நன்மை செய்து இருகிறேன் பாருங்கள் என்றார்

அடுத்து மன்மோகன் இரண்டு ஐம்பது ரூபாய் நோட்டுகளை கிழே போட்டு நான் இரண்டுஏழைஇந்தியனுக்கு நன்மை செய்து இருகிறேன் பாருங்கள் என்றார்

அடுத்து நம்ப சித்து நூறு ஒரு ருபாய் காசுகளை கிழே போட்டு நான் நூறு
ஏழைஇந்தியர்களுக்கு நன்மை செய்து இருகிறேன் பாருங்கள் என்றார்

அபோது விமான ஒட்டி சொன்னார் இப்போ உங்க மூவரையும் கிழே போட்டு 125 கோடி இந்தியர்களுக்கு நன்மை செய்கிறேன் பாருங்கள் என்றார்.

ஓசை செல்வா ஆன் தி மேட்டர்

ஒரு அப்பாவி இளம்பெண்ணை ஐந்து பேர் சேர்ந்து பிடிப்பாங்களாம் . . . அடிப்பாங்களாம்.. உதைப்பாங்களாம்.. வன்புணர்வாங்களாம்.. பற்களால் கடிப்பார்களாம்... துருப்பிடித்த இரும்புத்தடியால் வக்கிரங்களும் கொடுமைகளும் செய்வார்களாம்.. நிர்வாணமாக்கி ரோட்டில் போட்டு பின்பு வண்டியை ஏற்றி நசிக்கவும் முயற்சிப்பார்களாம் . . . அவள் மரணமே அடைவாளாம்.. அவனுகளுக்கு தண்டனை ஆகாதாம்.. மனம் திருந்த முயற்சிக்கனுமாம் ... சொல்றவனுக எழுதறவனுக எல்லாம் அவனவன் வூட்டு பொம்பிளைகளை விட்டு இவனுக மனதை திருத்துங்கப்பூ ! முடிஞ்சா அவனுக அப்படி ஆனதுக்க சமூகம் தான் காரணம்.. காமப்பசி அது இதுன்னு சொல்லி உங்க வூட்டு மாப்பிள்ளையா கூட ஏத்துக்குங்க ! வரவேற்கிறோம் ! எங்களுக்கு வாணாம் ....

Comments