நிஷாந்தி பிரபாகரன்

நிஷாந்தி பிரபாகரன்


பல்லாயிரம் கிலோமீட்டர்களுக்கு அப்பால் இருந்தும் கஜா நிவாரணத்திற்கு இவர்கள் செயல்பட்ட வேகமும், அர்பணிப்பும் உன்னதமானது.



ஒரு ஈவன்ட் மானேஜ்மென்ட் நிறுவனத்தை நடத்திவரும் நிஷாந்தினி ஒரு வலைப்பதிவரும் கூட. புதுகை கணினித் தமிழ் சங்கத்தில் நாங்கள் அடிக்கடி பேசும் பெயர் இவரது பெயராக இருக்கும்.

ஆனால் ஒரு பேரிடர் கலாத்தில் இவ்வளவு விரைவாக, அர்பணிப்புடன் இவர் செயல்படுவார் என்பதை நம்புவதற்கு சிரமமாக இருக்கிறது.

ஹாஷ் டாக்குகளை பரிந்துரைத்து பல்வேறு குழுக்களில் செயல்பட்டு, குறிப்பாக அய்யா ஷாஜகான் அவர்களை தொடர்பு கொண்டு நிவாரணப் பொருட்களை, நிவாரண உதவிகளை ஒருங்கிணைத்தவர்.

ஏனைய நிவாரணக் குழுக்கள் தங்கள் பணிகளை தாற்காலிகமாக நிறுத்தியிருந்தாலும் இன்றுவரை தொடர்ந்து கஜா குறித்து பேசி, செயல்பட்டு வரும் ஒரே தன்னார்வலர் சகோதரி நிஷா.

அவரது காலக் கோடு தரும் மன அழுத்தத்தை தாங்க சக்தி உள்ளோர் தாராளமாக அவரது முகநூல் பக்கத்துக்கு போகலாம்.
தொடர்கின்றன
இணைப்புகள்.








Comments

  1. உண்மை...கஜா எனக்கு அருமையான சகோதரியைத் தந்துள்ளது.

    ReplyDelete
  2. சிறப்பாக செயல்பட்ட ஒருவரை உங்கள் பக்கத்தில் பார்த்து மகிழ்ச்சி.

    ReplyDelete

Post a Comment

வருக வருக