அன்பின் அலெக்சா ஆல்பம் 1

 05/10/2025 

ஞாயிற்று கிழமை 

புதுக்கோட்டை புத்தகத் திருவிழா 

இன்று கவிஞர் மைதிலி  கஸ்தூரி ரங்கனின் இரண்டாவது தொகுப்பு வெளியீடு சிறப்புற நடந்தது. 

சிந்துவெளி ஆய்வாளரும், ரோஜா முத்தையா நூலகத்தின் மதிப்புறு ஆலோசகரும், ஒடிசா மாநிலத்தின்  மேனாள் முதன்மைச் செயலாளர் அய்யா ஆர். பாலகிருஷ்ணன் அவர்கள் அன்பின் அலெக்சா,  கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். 

நிகழ்வின் தலைமையேற்று சிறப்பித்தார் தமிழறிஞர், த மு எ க ச வின் மாநில துணைத்தலைவர், கவிஞர் முத்துநிலவன் அவர்கள். 

முதல்பிரதியை பெற்று சிறப்பித்தார் தமிழ்ச்செம்மல், புதுக்கோட்டைத் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் கவிஞர் தங்கம்மூர்த்தி. 

சிறப்பு பிரதிகளை புதுகையின் கவிஞர்கள் ஆளுமைகள் பெற்றனர்.


Comments